search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Examination"

    • விக்கிரவாண்டி அருகே பூச்சி மருந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்நிலையில் நேற்று அதிக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே உள்ள வி.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். டிராக்டர் டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அடிக்கடி வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று அதிக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலத்தில் அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயக்கமாகி கிடந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அன்பழகனை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிகழ்ச்சிக்கு நகரமைப்பு அலுவலர் முரளி தலைமை தாங்கினார்.
    • கார் வெங்கடேசன், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகரா ட்சிக்குட்பட்ட திருப்பாதி ரிப்புலியூர் சரவணா நகர், கடலூர் முதுநகர் சோனகர் தெரு ஆகிய இடங்களில் மண்டல குழு அலுவலகம் அமைக்க ரூ 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மண்டல அலுவலகம் கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரமைப்பு அலுவலர் முரளி தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் சலீம், மண்டல குழு தலைவர்கள் சங்கீதா செந்தில் முருகன், இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் திருப்பா திரிப்புலியூர் சரவணா நகர், முதுநகர் சோனகர் தெரு ஆகிய இடங்களில் மண்டல குழு அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்தனர். இதில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி வேலுச்சாமி, மாநகராட்சி பொறியாளர் மாலதி, தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, பகுதி துணை செயலாளர்கள் கார் வெங்கடேசன், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
    • பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

    தஞ்சாவூர:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 முதல்நிலைத் தேர்விற்கான அறிவிப்பு ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட உள்ளது.

    இதன்மூலம் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குரூப்-1 முதல்நிலை தேர்வானது உத்தேசமாக நவம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, குரூப்-2, குரூப்-2 (ஏ) முதல்நிலை தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த பயிற்சி வகுப்பானது வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கி ழமைகளில் மட்டும் நடைபெற உள்ளது.

    இந்த பயிற்சி வகுப்பு அனுபவமிக்க சிறப்பு வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுவதோடு, பாடக்கு றிப்புகள் வழங்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தேர்வின்பெயர்,

    தங்களது பெயர் மற்றும் கல்வித்த குதியை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இணையதள முகவரியில் விளம்பர அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
    • தேர்விற்கான பாடக்கு றிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தால் தமிழக அரசில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணி யிடங்களுக்கா ன அறிவிப்பு தொகுதி 1 மற்றும் 2 மற்றும் தொகுதி 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

    மேலும், இந்த தேர்வுகள் குறித்த கல்வித்தகுதி, வயது வரம்பு, காலிப்பணியிடங்கள் போன்ற இதர விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் விளம்பர அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    மேற்கண்ட அறிவிப்பை எதிர்நோக்கி இலவச பயிற்சி வகுப்புகள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வழியாக தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த தேர்விற்கான பாடக்கு றிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

    எனவே, இந்த பயிற்சி வகுப்பில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அரசு பணிக்கு தயாராகுபவர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு 94990 55904 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு தகவல் அனுப்பி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டி தேர்வு எழுதுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊராட்சி துணைத்தலைவராக அ.தி.மு.க. நிர்வாகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • இந்த தேர்தலில் வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வேலானூரணி ஊராட்சி யில் ஊராட்சி மன்ற தலைவ ராக அ.தி.மு.க.வை சேர்ந்த அங்காளஈஸ்வரி உள்ளார்.இந்த நிலையில் வேலா னூரணி ஊராட்சியில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேலானூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் உலக தேவன்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி பூமிநாதன் ஊராட்சி மன்ற துணைத்தலைவருக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இந்த தேர்தலில் வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பூமிநாதன் வேலானூரணி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டார். இந்த நிகழ்ச்சியில் நரிக்குடி ஒன்றிய (பொறுப்பு) தலைவரும், நரிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செய லாளருமான அம்மன்பட்டி ரவிச்சந்திரன், வேலாணூ ரணி ஊராட்சி மன்ற தலைவர் அங்காள ஈஸ்வரி, ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள், ஊராட்சி ஊழி யர்கள் மற்றும் நிர்வாகிகள், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அரசு உள்பட அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த காலக்கெடுவை நடைமுறைப் படுத்த வேண்டும்.
    • கல்லூரிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி ஆண்டு தேர்வை நடத்த புதுவை பல்கலைகழகம் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மாணவர்-பெற்றோர் நலச் சங்க தலைவர் வை.பாலா புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 10, 15, ஆண்டுகளாகவே புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இறுதி ஆண்டுத் தேர்வுகள் முறையாக குறிப்பிட்ட தேதிகளில் நடத்தப்படுவதில்லை. அனைத்துக் கல்லூரிகளிலும் செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டன.

    ஒரு செமஸ்டர் என்பது 5 மாத காலத்திற்கானது. அது பெரும்பாலும் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலும் கணக்கெடுக்கப்பட்டு கல்லூரிகள் செயல்பட வேண்டும்.

    இந்தக்கால வரையறை எந்தக் கல்லூரிகளிலும் கடைபிடிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் கல்லூரிகள் திறக்கும் தேதியும், மூடும் தேதியும் முடிவெடுப்பது பல்கலைக்கழகமே.

    எனவே பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதுச்சேரி அரசு உள்பட அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த காலக்கெடுவை நடைமுறைப் படுத்த வேண்டும்.

    ஆனால் 2022-23-ம் ஆண்டுக்கான இந்தக் கல்வி ஆண்டு மே மாதம் நிறைவடைந்துவிட்ட நிலையில் ஜூன் மாதம் நடத்தப்பட வேண்டிய பல்கலைக்கழக தேர்வுகள் எதுவும் நடைபெற வில்லை. பல கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்கள் இன்னும் தேர்வுக் கட்டணம் கூட செலுத்தாமல் உள்ளனர்.

    அதற்கான அறிவிப்பை மிக மிகத் தாமதமாகவே பல்கலைக் கழகம் வெளியிட்டது. காலம் கடந்து ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சில பாடங்களுக்கு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதன் விளைவாக புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் பயிலும் இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகள், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் பாதிப்படைகின்றனர்.

    எனவே கல்லூரிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி ஆண்டு தேர்வை நடத்த புதுவை பல்கலைகழகம் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டுள்ளது.
    • பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே புத்தகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 38). இவரது மனைவி கீர்த்திகா (29). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கலைவாணன் வெளிநாட்டில் பணியாற்றி விட்டு ஊர் திரும்பி உள்ளார். வீட்டிற்கு வந்த கலைவாணன் தன் மனைவியிடம் தான் சம்பாதித்து அனுப்பிய பணத்திற்கு கணக்கு கேட்டு உள்ளார். அப்போது கணவர், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்றும் அவர்கள் இடையே பணத்தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த கலைவாணன் தனது மனைவி கீர்த்திகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த கீர்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து

    கலைவாணனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது.

    • நெற்குப்பை பேரூராட்சி கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.
    • முடிவில் தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு நன்றி கூறினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மன்ற செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார்.பேரூராட்சியின் முன்னாள் சேர்மன் புசலான் உடல் நலகுறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரண மடைந்தார்.

    இதனால் துணைத்தலைவ ராக இருந்த பழனியப்பன் பொறுப்பு சேர்மனாக பதவி ஏற்று கொண்டார். முன்னதாக இளநிலை உதவியாளர் சேரலாதன் அனைவரையும் வரவேற் றார். தொடர்ந்து முன்னாள் சேர்மன் புசலான் மறைந் ததையொட்டி இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.

    அதனை தொடர்ந்து ஓய்வு பெறும் செயல் அலுவலர் கனே சனுக்கு வார்டு கவுன்சிலர்களும் அலுவலர் பணியாளர்களும் பொன்னாடை போர்த்தி பணிநிறைவு வாழ்த்துக்கள் தெரிவித்த னர். கூட்டம் முடிவில் தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு நன்றி கூறினார்.

    • 3 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
    • சித்த மருத்துவம் காசநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை யொட்டி தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் வெண்டை யம்பட்டி ஊராட்சி ராயமுண்டான்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறியதாவது:-

    வெண்டையாம்பட்டி ஊராட்சியில் ராயமுன்டான்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, கும்பகோணம் தாலுக்கா திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பட்டுக்கோட்டை தாலுக்கா அதிராம்பட்டினம் துர்காசெல்லியம்மன் திருமண மண்டபம் ஆகிய மூன்று இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. இந்த 3 இடங்களில் நடந்த முகாம்களில் 4808 பேர் பயன்பெற்றனர்.

    பொதுவான உடல் பரிசோதனை, பல், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தைகள் நலம், பெண்கள் நலம், மகப்பேறு, பொது மருத்துவம், சித்த மருத்துவம் காசநோய் மற்றும் தொழுநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இம்முகாமில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவக் கண்காணிப்பாளர் ராமசாமி , மருத்துவ பணிகள் துணை இயக்குனர் கலைவாணி , மாவட்ட திட்ட அலுவலர் விஜய்ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    • நீட் தேர்வு எழுதும் மாணவர்களை அரசு ஊக்கப்படுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.
    • மக்கள் முகம் சுளிக்கின்றனர்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசின் நிர்வாக குளறுபடி, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு இவைகளால் தமிழகம் தலைகுனிந்து உள்ளது. இன்றைக்கு தமிழக விளையாட்டு வீரர்களை தேசிய அளவில் பங்கேற்காத நிலையை உருவாக்கி இளை ஞர்கள், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி யாகி உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் விளை யாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அர சாணை வெளியிட்டார். இன்றைக்கு மு.க.ஸ்டாலின் உயர் மருத்துவமனைக்கு கருணாநிதி பெயரை சூட்டுகிறார்.

    அதேபோல் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி உரு வாக்கிய பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுகிறார். மதுரையில் நூலகத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுகிறார். கடலில் கருணாநிதி பெயரில் நினைவு சின்னம் அமைக்க முயற்சிக்கிறார். சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் கருணாநிதி பெயரில் அரங்கம். இப்படியே சென்றால் தமிழ்நாடு என்னவாகும்? இதைப் பார்த்து மக்கள் முகம் சுளிக்கின்றனர்.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தினார். அதில் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலை யத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை வைத்தார்.

    மதுரை மாட்டுத்தாவணி நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை வைத்தார். இது தலைவருக்கு விசுவாசம் உள்ள தொண்டர் செய்யும் மரியாதையாகும். ஆனால் மு.க.ஸ்டாலின் செய்வது தந்தைக்கு மகன் ஆற்றும் கடமையாக உள்ளது.

    நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் முதலிடத்தில் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம் கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்ச்சி சதவீதத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைவாக தான் உள்ளது. தமிழக மாண வர்கள் திறமை உள்ளவர்கள். ஆனால் அரசு ஊக்கப்படுத்த வில்லை. ஏற்கனவே நீட் தேர்வு ரத்து ரகசியம் என்று கூறினார்கள். ஆனால் எதையும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அரசு கணினி சான்றிதழ் தேர்வு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு) நடத்தப்படுகிறது.
    • 2023-ம் ஆண்டின் ஆகஸ்டு பருவ தேர்வுக்கான அறிவிப்பை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.

    சேலம்:

    அரசு கணினி சான்றிதழ் தேர்வு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு) நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டின் ஆகஸ்டு பருவ தேர்வுக்கான அறிவிப்பை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.

    அதன்படி, அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தை பயன்படுத்தி வருகிற ஜூன் 14-ந்தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க லாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்து ெகாள்ளலாம்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் மாவட்ட சுற்றுலா அலுவலர் மற்றும் உதவி சுற்றுலா தேர்வுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதில் கணினி அறிவியல் பட்டதாரியாக இருந்தால் மட்டுமே கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் 1 மாதம் நடக்கிறது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி-110-ன் கீழ் சட்டமன்றத்தில்  தமிழ்நாட்டில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத் தன்மை ஆகிய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியினை மேம்படுத்த அரசு வழிகாட்டுதலின்படி, மார்ச்  மாதம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் மூலமாக தமிழகத்திலுள்ள சுமார் 37 இலட்சம்       6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘சிறப்பு வளர்ச்சிக் கண்காணிப்பு இயக்கம்” நடத்தப்பட்டது.

     இதில், நாமக்கல் மாவட்டத்தில் 16201 குழந்தைகள் வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத் தன்மை ஆகிய குறைபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது  கண்டறியப்பட்டுள்ளது. 

    முதல்-அமைச்சரின் அறிவிப்பினை முனைந்து செயல்படுத்த முதற்கட்டமாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டப்பணிகள் துறை மற்றும் சுகாதாரத்துறையுடன் இணைந்து  ஒரு மாத காலத்திற்கு குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற–வுள்ளது.

    எனவே, பொதுமக்கள் அருகில் உள்ள குழந்தைகள் மையத்தை (அங்கன்வாடி மையத்தை) தொடர்பு கொண்டு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்த விபரத்தினை அறிந்துகொண்டு, வருங்கால  சந்ததியினர்களை வளமானவர் களாக மாற்ற, ஊட்டச்சத்து குறைபாடில்லா தமிழகத்தை உருவாக்கிட பெற்றோர்களும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். 

    இன்று முதல்  1 மாத காலத்திற்கு நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமிற்கு தங்கள் குழந்தைகளுடன் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படு–கிறார்கள்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×