search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. நிர்வாகி போட்டியின்றி தேர்வு
    X

    அ.தி.மு.க. நிர்வாகி போட்டியின்றி தேர்வு

    • ஊராட்சி துணைத்தலைவராக அ.தி.மு.க. நிர்வாகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • இந்த தேர்தலில் வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வேலானூரணி ஊராட்சி யில் ஊராட்சி மன்ற தலைவ ராக அ.தி.மு.க.வை சேர்ந்த அங்காளஈஸ்வரி உள்ளார்.இந்த நிலையில் வேலா னூரணி ஊராட்சியில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேலானூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் உலக தேவன்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி பூமிநாதன் ஊராட்சி மன்ற துணைத்தலைவருக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இந்த தேர்தலில் வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பூமிநாதன் வேலானூரணி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டார். இந்த நிகழ்ச்சியில் நரிக்குடி ஒன்றிய (பொறுப்பு) தலைவரும், நரிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செய லாளருமான அம்மன்பட்டி ரவிச்சந்திரன், வேலாணூ ரணி ஊராட்சி மன்ற தலைவர் அங்காள ஈஸ்வரி, ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள், ஊராட்சி ஊழி யர்கள் மற்றும் நிர்வாகிகள், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×