search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோய்கள்"

    • சளி, வைரஸ் ஜுரம் போன்ற நோய்களால் பொதுமக்கள் அவதியுற்றனர்.
    • நடமாடும் மருத்துவமனை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர்மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பருத்திச்சேரியில் மழை காலத்தில் ஏற்படும் காய்சல், இருமல் , சளி, வைரஸ் ஜுரம் போன்ற நோய்களால் பொதுமக்கள் அவதியுற்று வந்த நிலையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவமனை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது.

    வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் முத்துகுமாரசாமி மேற்பார்வையில் நடந்த முகாமில்பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தேவையானவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    • 3 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
    • சித்த மருத்துவம் காசநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை யொட்டி தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் வெண்டை யம்பட்டி ஊராட்சி ராயமுண்டான்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறியதாவது:-

    வெண்டையாம்பட்டி ஊராட்சியில் ராயமுன்டான்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, கும்பகோணம் தாலுக்கா திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பட்டுக்கோட்டை தாலுக்கா அதிராம்பட்டினம் துர்காசெல்லியம்மன் திருமண மண்டபம் ஆகிய மூன்று இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. இந்த 3 இடங்களில் நடந்த முகாம்களில் 4808 பேர் பயன்பெற்றனர்.

    பொதுவான உடல் பரிசோதனை, பல், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தைகள் நலம், பெண்கள் நலம், மகப்பேறு, பொது மருத்துவம், சித்த மருத்துவம் காசநோய் மற்றும் தொழுநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இம்முகாமில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவக் கண்காணிப்பாளர் ராமசாமி , மருத்துவ பணிகள் துணை இயக்குனர் கலைவாணி , மாவட்ட திட்ட அலுவலர் விஜய்ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    • நோய்கள் கண்டறியப்படுவோருக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
    • காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் கடந்த வாரம் முதல் அரசின் திட்டங்களின் ஒன்றான "கலைஞரின் வரும்முன் காப்போம்" திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டு, வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் நடப்பாண்டிற்கு 36 மருத்துவ முகாம்களும் நடத்திட திட்டமிடப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

    அதனைத்தொடர்ந்து கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 100 மருத்துவ முகாம்கள் நடத்திட அரசால் அறிவுறுத்தப்பட்டு, 3 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, நமது மாவட்டத்தில் காரைக்குடி, செஞ்சை பகுதியில் உள்ள ஆலங்குடியார் உயர்நிலைப்பள்ளியிலும், திருப்பத்தூர் வட்டாரத்தில் உள்ள லிம்ரா மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்கள் அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனையை சேர்ந்த சிறப்பு மருத்துவர்களை கொண்டு நடத்தப்பட்டு, தேவைப்படுவோருக்கு தனியார் மருத்துவமனைக்கு நிகராக உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யவும், முதல் -அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த முகாம்களில் முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் இது போன்று நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இம்முகாமில் 27 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் சஞ்சீவி பெட்டகங்களையும், 4 பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளையும் அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநர் விஜய்சந்திரன், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    உலகளவில் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கொசுக்கள் இருக்கின்றன. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் கொசுகடியால் நோய் வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள்.
    உலகளவில் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கொசுக்கள் இருக்கின்றன. அளவில் சிறியதாக இருக்கும் இவை உயிருக்கே உலை வைக்கும் தன்மை கொண்டவை. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் கொசுகடியால் நோய் வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள். மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு, மூளை அழற்சி, சிக்குன்குனியா, ஜிகா வைரஸ் போன்ற பல்வேறு நோய் பாதிப்புகளை கொசுக்கள் ஏற்படுத்துகின்றன.

    மலேரியா: இது ஒருவகை ஒட்டுண்ணி நோயாகும். இது அனோபிலீஸ் என்ற கொசு மூலம் பரவுகிறது. இந்த கொசுக்கள் வெப்ப மண்டல பிரதேசங்களில் உயிர்வாழும் தன்மை கொண்டவை. மலேரியா நோய் பாதிப்புக்கு காய்ச்சல்தான் தொடக்க அறிகுறியாக இருக்கும். சாதாரண உடல்நல பாதிப்பாகத்தான் ஆரம்பத்தில் தெரியும். பின்னர் தலைவலி, தசை வலி, குறைந்த ரத்த அழுத்தம், சுய நினைவை இழக்கும் நிலைக்கு ஆளாகுதல், கடும் குளிர் போன்ற அறிகுறிகள் தென்பட தொடங்கும். மெல்ல மெல்ல நோயின் தாக்கம் அதிகமாகி கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஸ்போரோசோயிட்டுகள் எனும் ஒட்டுண்ணிகள் ரத்த ஓட்டத்தில் ஊடுருவி சிவப்பு அணுக்களுக்கு பாதிப்பை உண்டாக்கிவிடும்.

    டெங்கு: ஏடீஸ் வகை கொசுக்கள் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக இருக்கின்றன. இது தொற்றுநோய் வகையை சார்ந்தது. இந்த நோய் பாதிப்புக்கு ஆளானவரின் ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள், மற்ற நபர்களை கடிக்கும்போது அவருக்கும் டெங்கு நோய் பாதிப்பு உண்டாக்கிவிடும். நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு மூட்டு மற்றும் தசை பகுதியில் கடும் வலி உண்டாகும். இது எலும்பு முறிவு காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. வெப்ப மண்டல பகுதியில்தான் இந்த நோய் அதிகமாக பரவும். கொசு கடித்தாலும் 4 முதல் 7 நாட்களுக்கு பிறகுதான் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி கள் தென்பட தொடங்கும். கடுமையான தலை வலி, கண் வலி, குமட்டல், வாந்தி, மூட்டுவலி, மார்பு, முகம், கை, கால் போன்ற பகுதிகளில் வீக்கம், கடுமையான காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உண்டாகும். ஆரம்பத்தில் நோய் தாக்கம் லேசாக இருக்கும். பின் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

    சிக்குன்குனியா: ஏடீஸ் ஏஜிப்டி கொசுக்கள் இந்த நோயை பரப்பும் தன்மை கொண்டவை. கடுமையான மூட்டுவலி, உடல் வீக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். ஏறக்குறைய இந்த நோயும் டெங்கு காய்ச்சலுக்கான பாதிப்புகளை கொண்டிருக்கும். கொசு கடித்த 4 நாட்களுக்குள்ளே நோய்க்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். குமட்டல், வாந்தி, உடல் வீக்கம், ரத்த ஓட்டத்தில் பாதிப்பு, மலச்சிக்கல், தலைச்சுற்று, விரல்களில் குளிர்த்தன்மை, தொண்டை வலி, கடுமையான தலைவலி போன்ற பிரச்சினைகள் தலைதூக்கும்.

    ஜிகா வைரஸ்:
    சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களால் இந்த வைரஸ் பரவுகிறது. இரண்டு நாட்களில் நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். மூட்டுவலி, காய்ச்சல், வீக்கம், தலைவலி, சோம்பல், விழி வெண்படல அழற்சி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

    மூளை அழற்சி: இது கொசுக்களால் பரவும் ஒரு வகை வைரஸ் நோயாகும். இதன்மூலம் மூளைக்குச் செல்லும் மென்படலத்தில் வீக்கம் ஏற்படும். கடும் காய்ச்சல், கழுத்து விறைப்பு, வலிப்பு நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். 
    இரவு தூங்காமல் கண்விழித்து வேலைப்பார்ப்பவர்கள் ஆரோக்கியம் அதிக அளவு பாதிக்கப்பட்டு நோய்கள் ஏற்படும் என புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஏற்பட்டுள்ளது. #research
    வாஷிங்டன்:

    உலகில் உள்ள மக்கள் பரப்பரப்பான் சூழ்நிலையில் வேலைப்பார்த்து வரும் நிலையில் அவர்களுக்கு இரவு, பகல் என்பது தெரியாமல் போனது. அதனால் அவர்கள் இரவு கண்விழித்து பணிபுரிகின்றனர். இரவு தூங்காமல் கண்விழித்து பணிபுரிவதால் பல் நோய்கள் ஏற்படும் என புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஆய்வின் படி, இரவில் வேலைப்பார்க்கும் போது ரத்தத்தில் உள்ள புரோட்டின் அதிகரிக்கிறது. அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை, ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. இதனால் எளிதாக நோய்கள் ஏற்படுகின்றன. இது மற்றவர்களை விட இரவு பணியில் ஈடுபடுவர்களை விட அதிகமாக ஏற்படுகிறது.

    இந்த ஆய்வில் மனிதர்களின் ரத்தத்தில் உள்ள புரோட்டின் சோதனை செய்யப்பட்டது. 24 மணி நேரத்தில் தூக்கம், உணவு நேரங்களில் புரோட்டினின் அளவு எவ்வாறு இருக்கிறது என்பதன் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது. இது இரவில் வேலைப்பார்ப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. #research
    ×