search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெற்குப்பை பேரூராட்சி கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு
    X

    நெற்குப்பை பேரூராட்சி கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு

    • நெற்குப்பை பேரூராட்சி கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.
    • முடிவில் தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு நன்றி கூறினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மன்ற செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார்.பேரூராட்சியின் முன்னாள் சேர்மன் புசலான் உடல் நலகுறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரண மடைந்தார்.

    இதனால் துணைத்தலைவ ராக இருந்த பழனியப்பன் பொறுப்பு சேர்மனாக பதவி ஏற்று கொண்டார். முன்னதாக இளநிலை உதவியாளர் சேரலாதன் அனைவரையும் வரவேற் றார். தொடர்ந்து முன்னாள் சேர்மன் புசலான் மறைந் ததையொட்டி இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.

    அதனை தொடர்ந்து ஓய்வு பெறும் செயல் அலுவலர் கனே சனுக்கு வார்டு கவுன்சிலர்களும் அலுவலர் பணியாளர்களும் பொன்னாடை போர்த்தி பணிநிறைவு வாழ்த்துக்கள் தெரிவித்த னர். கூட்டம் முடிவில் தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு நன்றி கூறினார்.

    Next Story
    ×