search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "economy"

    • ரஷ்யா - உக்ரைன் நாடுகள் போர் ஆகியவற்றால், சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
    • அமெரிக்க அரசு, தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய சலுகைகளை நிறுத்தியுள்ளது.

    திருப்பூர் :

    ஆயத்த ஆடை கொள்முதலை சர்வதேச சில்லரை வர்த்தக நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. இதனால் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பின்னலாடை தயாரிப்பு ஆர்டர் வருவது பாதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் குமார் துரைசாமி கூறியதாவது :- கொரோனா தொற்று பரவல், ரஷ்யா - உக்ரைன் நாடுகள் போர் ஆகியவற்றால், சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசு, தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய சலுகைகளை நிறுத்தியுள்ளது.

    வேலைவாய்ப்பு குறைவு, வேலை நேரம் குறைவால், தனிநபர், குடும்ப வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயத்த ஆடை ரகங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதை வெளிநாட்டு மக்கள் குறைத்துள்ளனர்.சர்வதேச அளவில் கிளைகளை கொண்டுள்ள சில்லரை வர்த்தக நிறுவனங்கள், 6முதல் 9 மாதங்களுக்கு முன்பே தங்கள் வர்த்தக மையங்களில் விற்பனை செய்யவேண்டிய ஆடை ரகங்கள் குறித்து திட்டமிடுகின்றனர்.

    வர்த்தக பாதிப்பால் வால்மார்ட் போன்ற பிரபல நிறுவனங்களின் குடோன்களில் ஆடை இருப்பு அதிகரித்துள்ளது. விற்பனை சரிவு, நிதி நெருக்கடி, இருப்பு வைப்பதற்கு போதிய இடமின்மை உள்ளிட்ட காரணங்களால் சில்லரை வர்த்தக நிறுவனங்கள், ஆடை கொள்முதலை நிறுத்தியுள்ளன.ஏற்கனவே வழங்கிய ஆர்டருக்கான ஆயத்த ஆடைகளையும் தாமதமாக அனுப்ப கோருகின்றனர். சில வர்த்தகர்கள் ஆர்டர்களை ரத்து செய்கின்றனர்.

    இதனால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை மிகவும் குறைந்து உள்ளது. திருப்பூர் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆர்டர் இழப்பை எதிர் கொண்டு வருகின்றன.அடுத்த சில மாதங்களில் இழந்த பொருளாதாரத்தை மக்கள் மீட்டெடுத்து விடுவர்.அதன்பின் சர்வதேச ஆடை வர்த்தகம் இயல்புநிலைக்கு திரும்பும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நிதி வழங்கும் ராகுல் காந்தியின் திட்டத்தை அமல்படுத்தவே முடியாது என ‘நிதி ஆயோக்’ துணைத்தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi #NITIAayog #RajivKumar
    புதுடெல்லி:

    மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார், காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பு திட்டத்தை விமர்சித்துள்ளார். அவர் ‘டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நிலவை பிடித்துக் கொடுப்போம் என்ற பழைய வாக்குறுதி பாணியில், காங்கிரஸ் தலைவர் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அது, பணி மனப்பான்மைக்கு எதிராக அமைவதுடன், நிதி ஒழுங்குமுறையை சிதற செய்துவிடும். இதன் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகவும், பட்ஜெட்டில் 13 சதவீதமாகவும் இருக்கும். இத்திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது.

    காங்கிரசின் முந்தைய கோஷங்களுக்கு ஏற்பட்ட கதிதான் இதற்கும் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது என்று சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். #SubramanianSwamy #PMModi

    சென்னை:

    பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    உலக அளவில் இந்திய பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கூறி வருகிறார். ஆனால் உண்மையில் நமது பொருளதாரம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தில் உள்ளது. இருந்தாலும் பிரதமர் மோடி ஏன் 5-வது இடத்தில் இருப்பதாக சொல்லி வருகிறார் என்பது புரியவிலலை.

    பிரதமருக்கு பொருளாதாரம் தெரியாதது தான் அதற்கு காரணம். அவருக்கு மட்டுல்ல நிதிஅமைச்சர் அருண்ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரிய வில்லை. அன்னிய செலாவணி மதிப்பை அடிப்படையாக வைத்து அவர்கள் இருவரும் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மதிப்பு தொடர்ந்து மாறக்கூடியது. அதனை அடிப்படையாக கொண்டு பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது மிகவும் தவறாகும்.

     


    தற்போதைய நிலையில் அந்த விகிதத்தை கொண்டு கணக்கிட்டால் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்தில் அல்ல 7-வது இடத்தில் இருக்கிறது.

    உண்மையில் பொதுமக்களின் வாங்கும் திறனை அடிப்படையாக கொண்டே நாட்டின் பொருளாதாரம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அவ்வாறு நிர்ணயித்தால் இந்திய பொருளாதாரம் தற்போது உலக அளவில் 3-வது இடத்தை வகிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #SubramanianSwamy #PMModi

    பொருளாதார வளர்ச்சி திருப்தி அளிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். #PranabMukherjee #IndiaEconomy
    பெங்களூரு:

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பெங்களூருவில் உள்ள கிரீன்வுட் சர்வதேச பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சர்வதேச பொருளாதார சக்தியாக மாறக்கூடிய திறன் படைத்தது, இந்தியா. இந்திய பொருளாதாரம் தற்போது 2.27 லட்சம் கோடி டாலர் மதிப்புடையதாக (ஒரு டாலர் மதிப்பு ரூ.70.62) இருக்கிறது. இது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. 5 லட்சம் கோடி டாலரில் இருந்து 6 லட்சம் கோடி டாலர் வரை அது இருந்திருக்க வேண்டும். முன்னாள் நிதி மந்திரி என்ற முறையில், இதை சொல்கிறேன். நாம் இன்னும் நிறைய முன்னேற்றம் கண்டிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PranabMukherjee #IndiaEconomy 
    ஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி பதில் அளித்துள்ளார். #gst #arunjaitley #RaghuramRajan

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் அளித்த பேட்டியில், ஜி.எஸ்.டி. வரி மற்றும் பணம் மதிப்பு இழப்பு திட்டத்தால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    உலக பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையிலும் இந்தியா பின்னடைவை சந்தித்து வருகிறது என்று கூறினார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி கருத்து வெளியிட்டுள்ளார். டெல்லியில் யூனியன் வங்கியின் 100- வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அருண்ஜேட்லி பேசியதாவது:-

    குறை சொல்பவர்கள் எப்போதும் குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.

    ஜி.எஸ்.டி.வரி என்பது இந்தியாவில் கொண்டு வரப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சீர் திருத்தமாகும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மிக பெரிய சீர்திருத்தமாக இதை கொண்டு வந்துள்ளோம்.


    ஜி.எஸ்.டி. வரி திட்டம் உருவாக்கப்பட்டு 2017 ஜூலை 1-ந்தேதி அமலுக்கு வந்தது. அதன் பின்னர் முதல் 2 காலாண்டுகளில் மட்டும் வளர்ச்சியில் சில பாதிப்புகள் ஏற்பட்டன.

    அதன் பிறகு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. அடுத்த காலாண்டுகளில் 7 சதவீதமும், 7.7 சதவீதமும் வளர்ச்சியை கண்டுள்ளன. கடைசி காலாண்டில் 8.2 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    2012-2014-ம் ஆண்டுகளில் இந்திய வளர்ச்சி விகிதம் 5-ல் இருந்து 6 சதவீதம் என்ற வகையிலேயே இருந்தது. அதை விட சிறப்பான வளர்ச்சியை இப்போது பெற்று வருகிறோம்.

    வங்கிகளை பொறுத்த வரை செயல்படாத சொத்துக்கள், கணக்குகளை குறைத்தால் வங்கிகளின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    மேலும் இதில் உறுதியான திட்டங்களை உருவாக்க வேண்டும். அதற்கு பல வழிகள் உள்ளன. அதை செய்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

    வங்கிகளை வலுப்படுத்துவதன் மூலம் அதன் பணப்புழக்கம் வளர்ச்சி அடைந்து மார்க்கெட்டில் நிலையான தன்மையை அடைய முடியும்.

    இவ்வாறு அருண்ஜேட்லி பேசினார். #gst #arunjaitley #RaghuramRajan

    ஈரான் சந்தித்து வரும் வரலாறு காணாத பொருளாதாரச் சரிவு, விலைவாசி உயர்வு தொடர்பாக அதிபரின் பதில் திருப்தியளிக்காததால் நீதி விசாரணைக்கு பாராளுமன்றம் பரிந்துரைத்துள்ளது.
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஈரான் நாட்டு நாணயத்தின் மதிப்பு ஒரேநாளில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    கடந்த ஆண்டுவாக்கில் 42,890 ரியால்களாக இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பு படிப்படியாக கூடிக்கொண்டே போய் கடந்த மாத இறுதியில் 57,500 ரியால்களாக உயர்ந்து கடந்த மே மாதவாக்கில் 80 ஆயிரம் ரியால்களுக்கு விலைபோனது. இதனால், ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாக நிலைகுலைந்து காணப்படுகிறது.

    நிலைமை மேலும் மோசம் அடைவதை தவிர்க்கும் வகையில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பொருளாதார நிபுனர்களும், எதிர்க்கட்சியினரும் எச்சரித்து வருகின்றனர்.

    ஈரான் நாட்டு பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித்துறை மந்திரி மசவுத் கர்பாசியன்-ஐ அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் வாக்களித்தனர்.

    இந்நிலையில், வரலாறு காணாத பொருளாதாரச் சரிவு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் எல்லைப்பகுதிகள் வழியாக கடத்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.

    அடுத்தடுத்து அமெரிக்கா விதித்த தடைகளால் பொருளாதாரம் நலிவடைந்ததாக அதிபர் ரவுகானி விளக்கம் அளித்தார். பெருகிவரும் விலைவாசியை கட்டுப்படுத்த சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், கடத்தலை தடுக்க எல்லைப்பகுதிகளில் காவல் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் இவ்விவகாரத்தில் நீதி விசாரணைக்கு வலியுறுத்தி பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களித்தனர்.

    பாராளுமன்ற உறுப்பினர்கள் நினைத்தால் ரவுகானியை அதிபர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்தும் வாக்களிக்கலாம். ஆனால், தற்போதையை சூழ்நிலையில் அத்தகையதொரு நிலைப்பாட்டை பாராளுமன்றம்  எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Iranianparliament #Rouhanijudiciary
    மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் மோடியின் ஆட்சி குறித்து பேசிய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், 3 டயர்கள் பஞ்சர் ஆன காரை போல இந்திய பொருளாதாரத்தின் நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார். #Chidambaram #modi
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    ‘இந்தியாவில் தனியார் முதலீடு, தனியார் கொள்முதல், ஏற்றுமதி, அரசின் செலவுகள் ஆகியவை மிக முக்கியமான 4 அமைப்புகள் ஆகும். அது காரின் 4 சக்கரங்களை போன்றது. ஆனால், தற்போது பா.ஜ.க ஆட்சியில் தனியார் முதலீடு, தனியார் கொள்முதல், ஏற்றுமதி ஆகியவை நலிவடைந்து உள்ளது. 3 சக்கரங்கள் பஞ்சர் ஆன காரைபோல இந்திய பொருளாதாரம் மாறியுள்ளது.

    சரியான முறையில் அரசின் செலவுகள் மட்டுமே இயங்குகிறது. அரசின் செலவுகளை ஈடுசெய்ய பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற வரிச்சுமைகள் மக்களின் மீது ஏற்றப்படுகிறது. மற்ற அனைத்து நாடுகளிலும் ஜி.எஸ்.டி வரி நாடு முழுவதும் ஒரே வரியாக விதிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் மட்டுமே 5 அடுக்கு ஜி.எஸ்.டி வரி உள்ளது.

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் இருந்தும் சமீப காலமாக நாம் எவ்வித லாபமும் பெறுவதில்லை. மத்திய பா.ஜ.க அரசின் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் ஆரம்பத்தொகையாக தனி நபருக்கு 43 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. இதனை வைத்துக்கொண்டு பிரதமர் மோடி கூறியது போல் பக்கோடா கடை மட்டுமே போட முடியும்.

    ஆனால், பா.ஜ.க ஆட்சியில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்க்கும்போது பொருளாதார பாதிப்பு சரிசெய்யக்கூடியது ஆகும். பா.ஜ.க அரசு ஒரு சில சமூகத்தினரை 2-ம் தர குடிமகன்களாக அறிவித்தது. மக்களின் உணவு பழக்கங்கள் மீதும் கலாச்சார பழக்கவழக்கங்கள் மீதும் இந்த அரசு அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.’

    இவ்வாறு அவர் பேசியுள்ளார். #Chidambaram #modi
    ×