என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது - சுப்பிரமணிய சாமி தாக்கு
சென்னை:
பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-
உலக அளவில் இந்திய பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கூறி வருகிறார். ஆனால் உண்மையில் நமது பொருளதாரம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தில் உள்ளது. இருந்தாலும் பிரதமர் மோடி ஏன் 5-வது இடத்தில் இருப்பதாக சொல்லி வருகிறார் என்பது புரியவிலலை.
பிரதமருக்கு பொருளாதாரம் தெரியாதது தான் அதற்கு காரணம். அவருக்கு மட்டுல்ல நிதிஅமைச்சர் அருண்ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரிய வில்லை. அன்னிய செலாவணி மதிப்பை அடிப்படையாக வைத்து அவர்கள் இருவரும் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மதிப்பு தொடர்ந்து மாறக்கூடியது. அதனை அடிப்படையாக கொண்டு பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது மிகவும் தவறாகும்.
தற்போதைய நிலையில் அந்த விகிதத்தை கொண்டு கணக்கிட்டால் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்தில் அல்ல 7-வது இடத்தில் இருக்கிறது.
உண்மையில் பொதுமக்களின் வாங்கும் திறனை அடிப்படையாக கொண்டே நாட்டின் பொருளாதாரம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அவ்வாறு நிர்ணயித்தால் இந்திய பொருளாதாரம் தற்போது உலக அளவில் 3-வது இடத்தை வகிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார். #SubramanianSwamy #PMModi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்