search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drones"

    • ஜி-20 நாடுகள் அமைப்பிற்கு இந்தியா தற்போது தலைமை ஏற்றுள்ளது.
    • இன்று முதல், 17-ந் தேதி வரை 4 நாட்கள் மேற்கண்ட தடை அமலில் இருக்கும்.

    சென்னை:

    ஜி-20 நாடுகள் அமைப்பிற்கு இந்தியா தற்போது தலைமை ஏற்றுள்ளது. அந்த அமைப்பின் பெண்கள் பிரதிநிதிகள் மாநாடு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி டிரோன்கள் மற்றும் இதர ஆள் இல்லா வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    இன்று (புதன்கிழமை) முதல், 17-ந் தேதி வரை 4 நாட்கள் மேற்கண்ட தடை அமலில் இருக்கும். ஜி-20 நாடுகளின் பெண்கள் பிரதிநிதி மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் சென்னையில் தங்கும் இடங்கள், அவர்கள் செல்லும் வழித்தட பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் ஜி 20 மாநாடு கருத்தரங்கம் நடைபெறுகிறது.
    • இதையொட்டி வரும் 25ம் தேதி வரை டிரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்தனர்.

    சென்னை:

    இந்தியாவில் ஜி 20 மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னையில் 2-வது கட்ட கருத்தரங்கு நிகழ்ச்சி வரும் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் கிண்டியில் உள்ள ஐ.டி.சி.கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற உள்ளது. இதில் 29 வெளிநாடுகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

    கருத்தரங்கு நடைபெறும் ஓட்டல், ரமடா பிளாசா, ஓட்டல் ஹப்ளீஸ், ஓட்டல் பார்க் ஹையாத் ஆகிய ஓட்டல்களில் தங்குகின்றனர். இவர்கள் தங்கியுள்ள ஓட்டல்கள், கருத்தரங்கு நடைபெறும் ஓட்டல் மற்றும் இவர்கள் செல்லும் வழித்தடங்களை சிவப்பு மண்டலமாக சென்னை போலீசார் அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், வரும் 25-ம் தேதி வரை இப்பகுதிகளில் டிரோன்கள், இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

    • மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு புறப்படுகிறார்.
    • முதல்-அமைச்சர் வருகையையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் ஆய்வு கூட்டங்களும் நடத்தி வருகிறார்.

    நாகர்கோவில் பயணம்

    அதன்படி இன்று மதுரைக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சாலை மார்க்கமாக அங்கிருந்து நாகர்கோவிலுக்கு புறப்படுகிறார். நெல்லை வழியாக செல்லும் அவர் இரவு 7.30 மணிக்கு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை சென்றடைகிறார்.

    தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் புதிய மாநகராட்சி கட்டிடம் திறந்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். அதன்பின்னர் மதியம் 2 மணியளவில் காரில் தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறார்.

    போலீஸ் பாதுகாப்பு

    இதனையொட்டி விருதுநகர் மாவட்ட எல்கையில் இருந்து குமரி மாவட்ட எல்கை வரையிலும் நெல்லை, தென்காசி,தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மேலும் தூத்துக்குடி மாவட்ட எல்கையான ஸ்ரீவைகுண்டம் வட்டம் வசவப்பபுரம் கிராமத்தில் இருந்து மறவன்மடம் வரை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரையிலும் நாளை மறுநாள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது.
    • தென்கொரியா, அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.

    சியோல்:

    கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், வடகொரியாவின் 5 ஆளில்லா டிரோன் விமானங்கள் இன்று தென்கொரிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன. இந்த டிரோன்களில் ஒன்று தென்கொரியாவின் தலைநகரான சியோலின் தெற்கு பகுதி எல்லைக்குள் மிகவும் உள்ளே வந்துள்ளது.

    வடகொரிய டிரோன்கள் நுழைந்ததையடுத்து தென்கொரிய விமானப்படை உஷார்படுத்தப்பட்டது. போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உடனடியாக விரைந்தன. வடகொரிய டிரோன்களை எச்சரிக்கும் வகையில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் டிரோன்கள் வீழ்த்தப்பட்டனவா? என்ற தகவல் வெளியாகவில்லை.

    • பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்த ஆண்டு 215 ட்ரோன்கள் ஊடுருவல்.
    • சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளவர்களின் முகவரியை கண்காணிக்க முடியும்.

    பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லைகள் வழியே ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வீசி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எல்லைப் பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் பங்கஜ்குமார் சிங் கூறியுள்ளதாவது: 

    ட்ரோன் தடயவியல் ஆய்வுக்காக டெல்லியில் அண்மையில் அதிநவீன ஆய்வகத்தை எல்லை பாதுகாப்பு படை நிறுவி உள்ளது. அதன் முடிவுகள் எங்களுக்க மிகவும் ஊக்கமளிக்கின்றன. இதன் மூலம் எல்லை தாண்டிய சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளின் முகவரியைக் கூட பாதுகாப்பு ஏஜென்சிகள் கண்காணிக்க முடியும்.

    கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியே ஊடுருவிய சுமார் 79 ட்ரோன்களை பி.எஸ்.எஃப். கண்டறிந்தது. ​​​​இது கடந்த ஆண்டு 109 ஆக அதிகரித்தது. நடப்பு ஆண்டில் அது 266 ஆக அதிகரித்துள்ளது.

    பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்த ஆண்டு 215 ட்ரோன்களும், ஜம்முவில் சுமார் 22 ட்ரோன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த பிரச்சினை தீவிரமானது. அவர்கள் (பயங்கரவாதிகள்) ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், போலி ரூபாய் நோட்டுக்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவிற்குள் கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ட்ரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் ட்ரோன்கள் மூலம் (ஆளில்லா விமானங்கள்) பூச்சி மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சுப்பிரமணியன் பருத்தி விவசாயத்தில் ட்ரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிப்பது, நானோ யூரியா தெளிப்பது, ஆள் பற்றாக்குறையை சமாளிப்பது போன்ற பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்.

    முகாமில் வேப்பந்தட்டை வேளாண்மை உதவி இயக்குனர் பச்சியம்மாள், தனியார் உர நிறுவன அலுவலர்கள் ராஜசேகர், பரஞ்சோதி உள்பட பலர் கலந்து கொண்டு வேப்பந்தட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பருத்தி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். முடிவில் பேராசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.

    இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை வான் பகுதியில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 359 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


    இந்த தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்துவதற்காக வெடிகுண்டுகளுடன் சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, தலைநகர் கொழும்பு மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் ராணுவம் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

    இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இலங்கை வான் பகுதியில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் தொடர்பாக 75க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையின் தேசிய  தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
    வனுவாட்டு தீவில் குழந்தைகளுக்கு வணிக ரீதியிலான ஆளில்லா விமானம் மூலம் தடுப்பூசி மருந்துகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. #Vanuatu #Drones #Vaccines #Island
    போர்ட்விலா:

    பசிபிக் தீவு நாடு வனுவாட்டு. அந்த தீவு நாட்டில் 20 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதில்லை. இதனால் அந்தக் குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலையில் அங்கு ஐ.நா. சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் ஏற்பாட்டில் அந்த தீவில் உள்ள குழந்தைகளுக்கு வணிக ரீதியிலான ஆளில்லா விமானம் மூலம் தடுப்பூசி மருந்துகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.



    40 கி.மீ. மலைப்பகுதியை தாண்டி வந்து ஆளில்லா விமானம் இந்த தடுப்பூசி மருந்துகளை வழங்கி உள்ளது. சிறிய அளவிலான பெட்டியில் ஐஸ் கட்டிகள் வைத்து அதன் மத்தியில் தடுப்பூசி மருந்து பாட்டில்கள் வைத்து அந்த ஆளில்லா விமானம் எடுத்துச்சென்று இருக்கிறது. எதிர்காலத்தில் கடைக்கோடியில் உள்ள கிராமங்களுக்கு கூட ஆளில்லா விமானங்கள் மூலம் இப்படி மருந்துகள் போன்ற முக்கிய பொருட்களை வழங்குவதற்கு வழிபிறக்கும்.

    இதுபற்றி ‘யுனிசெப்’ அமைப்பின் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா போர் கூறும்போது, “இன்றைக்கு ஆளில்லா விமானம் ஒரு சிறிய தொலைவுக்கு மருந்து கொண்டு சென்றிருப்பது உலகளாவிய சுகாதாரத்தில் பெரிய பங்களிப்பாக அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதற்கு மிகப்பெரிய அளவில் போராட வேண்டியதிருக்கிறது. இந்த ஆளில்லா விமான தொழில் நுட்பம் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தும். ஒவ்வொரு குழந்தைக்கும் இது தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதற்கு வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டார். #Vanuatu #Drones #Vaccines #Island 
    தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார். #JayantSinha #Drones #Organs
    புதுடெல்லி:

    மத்திய விமானத்துறை மந்திரி ஜெயந்த் சின்கா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை சாலை வழியாக கொண்டு செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. போக்குவரத்து நெருக்கடியில் குறிப்பிட்ட நேரத்தில் உடல் உறுப்புகளை கொண்டு செல்வது சவாலான பணியாக இருக்கிறது.



    எனவே உடல் உறுப்புகளை ஒரு ஆஸ்பத்திரியில் இருந்து மற்றொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஒரு மாதத்துக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இந்த குட்டி விமானங்கள் உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். குட்டி விமானங்கள் புறப்பட்டு செல்லவும், அதை இறக்குவதற்கும் தேவையான வசதிகளை ஆஸ்பத்திரிகளில் முதலில் ஏற்படுத்த வேண்டும். இதனால் நேரம் விரயமாவதை குறைக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JayantSinha #Drones #Organs

    ஜப்பானில் தொழிலாளர் பற்றாக்குறையால் ஆளில்லா விமானங்கள் மூலம் நெல் வயல்களில் பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்கும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. #Drones
    டோக்கியோ:

    விவசாயத்தில் தொழில் நுட்பத்தை புகுத்தும் முயற்சியில் ஜப்பான் தீவிரமாக உள்ளது. சமீபகாலமாக அங்கு விவசாய தொழிலாளர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    அதை போக்கும் வகையில் அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானங்களை உருவாக்கியுள்ளது. அதன் மூலம் நெல் வயல்களில் பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட உள்ளது. இப்பணிகளை அவை 15 நிமிடங்களில் செய்து முடிக்கும். சமீபத்தில் இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.


    நைல் ஒர்க் நிறுவனம் ஜா ஜியாகி என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. அதற்கு நைல்- டி18 என பெயரிடப்பட்டுள்ளது.

    ஜப்பானில் தற்போது பெரும்பாலான விவசாயிகள் 67 முதல் 68 வயதினராக உள்ளனர். அவர்கள் இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் விவசாயத்தில் இருந்து ஓய்வு பெற்று விடுவார்கள்.

    அதன் பின்னர் விவசாய பணிக்கு வரும் இளைய தலைமுறையினருக்கு இந்த அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது. #Drones
    ×