search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "remote"

    • தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 29-ந்தேதி முதல் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார்
    • தி.மு.க.வை கடுமையாக விமர்சித்துவிட்டு தற்போது, அந்தக் கூட்டணியில் கமல் சேர்ந்தது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது

    தமிழ்நாட்டில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதனால் மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக ஒரு மாநிலங்களவை தொகுதி கொடுக்கப்பட உள்ளது. ஆனால், மக்களவை தொகுதி எதுவும் வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 29-ந்தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார்.

    அவர் வரும் 29-ந்தேதி முதல் ஏப். 16-ந்தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளார். ஈரோட்டில் 29-ந்தேதி பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.கவை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்து பேசினார். கமல்ஹாசன் பிரசார விளம்பர வீடியோவில், தொலைக்காட்சி பெட்டியை தனது கையில் இருந்த ரிமோட்டை வைத்து உடைக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். தி.மு.க.வை கடுமையாக விமர்சித்துவிட்டு தற்போது, அந்தக் கூட்டணியில் சேர்ந்ததை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதில்,

    மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு நிறைய பேர் வருத்தப்பட்டார்கள்; இந்த முடிவை எப்படி என்ன தைரியத்தில் எடுத்தீர்கள் என்றெல்லாம் ராஜாஜியை கேட்டது போல் என்னையும் கேட்பார்கள் அவர் சொன்ன பதிலை தான் நானும் சொல்லுவேன். நான் காந்தியின் கொள்ளு பேரன். நாம் காந்தியின் கொள்ளு பேரன்கள். எனக்கு சந்தர்ப்பவாதம் என்ற ஒரு வாதமே இல்லை.

    நம் வாதத்தை சந்தர்ப்பத்திற்கேற்ப பேசக்கூடாது. தேர்தலில் போட்டியிடாதது தியாகம் இல்லை..வியூகம். தி.மு.க.வை விமர்சித்து ரிமோட்டை எடுத்து டி.வியை உடைத்துவிட்டு இப்போது கூட்டணியா என கேட்கிறார்கள். நமது டி.வி; நமது ரிமோட். அது இங்குதான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம். டி.வி.க்கான கரண்ட், ரிமோட்டுக்க்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள்தான் நமக்கு முக்கியம்

    ஒரு தொகுதி, 2 தொகுதி என இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் என்னால் பிரச்சாரம் செய்ய முடியும். மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதால்தான் திமுக கூட்டணியை ஆதரிக்கிறேன். பிரதமர் என்பதற்காக மோடி இங்கு வந்தால் அவருக்கு தலை வணங்குவேனே தவிர தன்மானத்தை விட்டு தலை வணங்க மாட்டேன்.

    என் அரசியல் எதிரி சாதியம்தான். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் சாதியம் தான் எதிரி. 70 ஆண்டுகளுக்கு முந்தைய சாதியத்தை மீண்டும் தூக்கிப் பிடிக்க பாஜக முயற்சிக்கிறது. எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் என்பதை கண்டறிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்" என அவர் தெரிவித்தார்.

    வனுவாட்டு தீவில் குழந்தைகளுக்கு வணிக ரீதியிலான ஆளில்லா விமானம் மூலம் தடுப்பூசி மருந்துகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. #Vanuatu #Drones #Vaccines #Island
    போர்ட்விலா:

    பசிபிக் தீவு நாடு வனுவாட்டு. அந்த தீவு நாட்டில் 20 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதில்லை. இதனால் அந்தக் குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலையில் அங்கு ஐ.நா. சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் ஏற்பாட்டில் அந்த தீவில் உள்ள குழந்தைகளுக்கு வணிக ரீதியிலான ஆளில்லா விமானம் மூலம் தடுப்பூசி மருந்துகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.



    40 கி.மீ. மலைப்பகுதியை தாண்டி வந்து ஆளில்லா விமானம் இந்த தடுப்பூசி மருந்துகளை வழங்கி உள்ளது. சிறிய அளவிலான பெட்டியில் ஐஸ் கட்டிகள் வைத்து அதன் மத்தியில் தடுப்பூசி மருந்து பாட்டில்கள் வைத்து அந்த ஆளில்லா விமானம் எடுத்துச்சென்று இருக்கிறது. எதிர்காலத்தில் கடைக்கோடியில் உள்ள கிராமங்களுக்கு கூட ஆளில்லா விமானங்கள் மூலம் இப்படி மருந்துகள் போன்ற முக்கிய பொருட்களை வழங்குவதற்கு வழிபிறக்கும்.

    இதுபற்றி ‘யுனிசெப்’ அமைப்பின் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா போர் கூறும்போது, “இன்றைக்கு ஆளில்லா விமானம் ஒரு சிறிய தொலைவுக்கு மருந்து கொண்டு சென்றிருப்பது உலகளாவிய சுகாதாரத்தில் பெரிய பங்களிப்பாக அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதற்கு மிகப்பெரிய அளவில் போராட வேண்டியதிருக்கிறது. இந்த ஆளில்லா விமான தொழில் நுட்பம் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தும். ஒவ்வொரு குழந்தைக்கும் இது தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதற்கு வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டார். #Vanuatu #Drones #Vaccines #Island 
    ×