search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜி-20 நாடுகள் அமைப்பின் மாநாட்டையொட்டி சென்னையில் டிரோன்கள் பறக்க தடை
    X

    ஜி-20 நாடுகள் அமைப்பின் மாநாட்டையொட்டி சென்னையில் டிரோன்கள் பறக்க தடை

    • ஜி-20 நாடுகள் அமைப்பிற்கு இந்தியா தற்போது தலைமை ஏற்றுள்ளது.
    • இன்று முதல், 17-ந் தேதி வரை 4 நாட்கள் மேற்கண்ட தடை அமலில் இருக்கும்.

    சென்னை:

    ஜி-20 நாடுகள் அமைப்பிற்கு இந்தியா தற்போது தலைமை ஏற்றுள்ளது. அந்த அமைப்பின் பெண்கள் பிரதிநிதிகள் மாநாடு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி டிரோன்கள் மற்றும் இதர ஆள் இல்லா வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    இன்று (புதன்கிழமை) முதல், 17-ந் தேதி வரை 4 நாட்கள் மேற்கண்ட தடை அமலில் இருக்கும். ஜி-20 நாடுகளின் பெண்கள் பிரதிநிதி மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் சென்னையில் தங்கும் இடங்கள், அவர்கள் செல்லும் வழித்தட பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×