search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "destroyed"

    கொரட்டூர் ஏரியில் மேலும் 230 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படுவதை கண்ட பெண்கள் கதறி அழுதபடி சோகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் உள்ள கொரட்டூர் ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள 589 ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யும்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு மாற்று இடமாக பெரும்பாக்கத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

    ஆனால் அங்கு வசித்த பொதுமக்கள் யாரும் வீடுகளை காலி செய்ய வில்லை. இதையடுத்து நேற்று முத்தமிழ்நகர், மூகாம்பிகை நகரில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்தனர்.

    இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜே.சி.பி. எந்திரம் மீது கற்கள் வீசப்பட்டன. அப்போது 5 பெண்கள் தங்களது 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்தனர்.

    பின்னர் அப்பகுதி மக்களை வெளியேற்றி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நடந்தது. இதையடுத்து வீடுகளில் பொருட்களை அவர்களாவே வெளியே கொண்டு வந்தனர். நேற்று சுமார் 250 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

    இன்று 2-வது நாளாக வீடுகளை அகற்றும் பணி நடந்தது. மேலும் 230 வீடுகள் அகற்றப்படுகின்றன. இதையடுத்து வடக்கு மண்டல போலீஸ் இணை கமி‌ஷனர் பிரேம் ஆனந்த்சின்கா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    வீடுகள் இடிக்கப்படுவதை பெண்கள் கதறி அழுதபடி சோகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.


    பின்னர் பொதுமக்கள் தங்களது பொருட்களுடன் கண்ணீர் மல்க வெளியேறினார்கள். அவர்கள் கூறும்போது, “கடந்த 25 ஆண்டுகளாக இங்கு வசித்து வந்தோம். எங்களது வாழ்வாதாரம் இப்பகுதியில்தான் உள்ளது. குழந்தைகள் அருகில் பள்ளியில் படித்து வருகிறார்கள். இதனால் இப்பகுதியில் உள்ள வாடகை வீட்டுக்கு குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் மேல்லைப்பகுதியில் விவசாய பயிர்களை காட்டு பன்றிகள் நாசம் செய்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    திண்டுக்கல்:

    கொடைக்கானல் மேல்மலை பகுதியான மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் கேரட், பூண்டு, பீன்ஸ் ஆகிய காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர். குறிப்பாக பூண்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருந்தபோதும் தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களை ஒட்டி உள்ள வனப்பகுதியில் யானை, காட்டு பன்றி, முயல், காட்டெருமை ஆகிய வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி விவசாயம் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    கவுஞ்சி கிராமத்தில் திடீரென 50-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கும்பலாக ஊருக்குள் புகுந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். மேலும் காட்டு பன்றிகள் கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேலுச்சாமி, பெருமாள், கணேஷ் ஆகியோரின் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் விவசாயிகளே பன்றிகளை விரட்டி வனப்பகுதிக்குள் விட்டனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் தட்டுப்பாடு, விலையின்மை உள்ளிட்டவைகளால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நிலையில் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி சென்றுள்ளன.

    இந்த பயிர்களை நடவு செய்ய கடன் வாங்கி இருந்தோம். தற்போது அதற்கு பணம் செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே அரசு எங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றனர்.

    திருத்துறைப்பூண்டியில், கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 குடிசை வீடுகள் எரிந்து நாசம் அடைந்தது.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில், கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 குடிசை வீடுகள் எரிந்து நாசம் அடைந்தது. தீ விபத்தின்போது வீடுகளில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பெரியநாயகிபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஓரு சில ஓட்டு வீடுகளை தவிர அனைத்துமே கூரை வீடுகள் ஆகும். நேற்று மதியம் 1 மணியளவில் இந்த பகுதியில் உள்ள குருமூர்த்தி(வயது 50) என்பவர் வீடு திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது.



    சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அருகில் இருந்த வீடுகளிலும் பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் பெரியநாயகிபுரத்தை சேர்ந்த சிவகுமார், தங்கையன், முத்துக் கிருஷ்ணன், பாலு, ராஜூ, சாமிக்கண்ணு, குமர கண்ணன், விவேகானந்தன், நாகராஜன், ராஜப்பன், அய்யப்பன், மணிகண்டன் சிவபாலன், பக்கிரிசாமி, மெய்க்கண்டவேல், மகேந்திரன், சண்முகம், குபேஸ்குப்தா, ராஜேந்திரன், ராஜீவ்காந்தி, வடிவேலு, இந்திரா, அண்ணாத்துரை, கருணாநிதி, பொதியப்பன், வாசுகி, ராமசாமி, பாஸ்கர், ரமணி, தங்கவேல், வைரக்கண்ணு, சித்ரவேல், பரசுராமன் ஆகியோரது வீடுகள் உள்பட 45 வீடுகள் எரிந்து நாசமாயின.

    தீ விபத்து ஏற்பட்டபோது அங்குள்ள வீடுகளில் இருந்த 10-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் பயங்கர வெடிச் சத்தம் ஏற்பட்டது. அப்போது அங்கு தீயை அணைத்துக் கொண்டு இருந்த நெடும் பாலத்தை சேர்ந்த ராஜூ(48) தலையில் வெடித்த சிலிண்டரின் ஒரு பகுதி வந்து விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து திருத்துறைப்பூண்டி, திருவாரூர், முத்துப்பேட்டை, கோட்டூர் ஆகிய ஊர்களில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் 50்-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீ விபத்தில் அனைத்து வீடுகளும் எரிந்து நாசமாயின.

    தீ விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வராமல் கால தாமதமாக வந்ததால் தான் அனைத்து வீடுகளும் முழுமையாக எரிந்ததாகக் கூறி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) இனிக்கோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த தீ விபத்தின்போது வீடுகளில் இருந்த நகை, பணம், டி.வி., மிக்சி, கிரைண்டர், கட்டில், மெத்தை, பீரோ, துணிகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாச மானது. சேத மதிப்பு லட்சக் கணக்கில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வில்லை. இதுகுறித்து திருத் துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கலெக்டர் நிர்மல்ராஜ், தாசில்தார் மகேஷ்குமார், நகராட்சி ஆணையர் நாகராஜன் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆறுதல் கூறினர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஓவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம், வேட்டி, சேலை, 5 கிலோ அரிசி, 1 லிட்டர் மண் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டது. 
    கூடலூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் விவசாயிகள் வாழை பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த வாழை பயிர்களை யானைகள் நாசம் செய்து வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி அருகே கூடலூர் மலையடிவாரம் ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலை பகுதியில் விலை உயர்ந்த மரங்களும், மான், யானை, கரடி, காட்டுப்பன்றி, குரங்குள் உள்ளிட்ட பலவகை இன உயிரினங்களும் உள்ளன.

    வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் விவசாயிகள் வாழை, கரும்பு, தென்னை, மா உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் வன விலங்குள் அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கொடுத்த புகாரின் பேரில் வனத்துறையினர் சில இடங்களில் மட்டும் அகழிகள் அமைத்தும், சூரிய மின்வேலி கம்பிகள் அமைக்கப்பட்டது.

    தற்போது அகழிகள் மழையினால் சேதம் அடைந்து விட்டது. மின்வேலி கம்பிகளும் செயல்படாமல் உள்ளது. இதனால் வன விலங்குகள் அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகிறது.

    கூடலூர் வனச்சரகம், வெட்டுக்காடு பகுதியில் உள்ள தனியார் வாழை தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டு விடியும் நேரத்தில் யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

    அசாமில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.12,38,000 மதிப்புள்ள ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை எலிகள் வேட்டையாடி பணத்தின் மதிப்பை இழக்கச் செய்துள்ளன. #ATM #Rats #Destroyed
    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் தின்சுகியா நகரில் லாய்புலி என்னும் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஏ.டி.எம். எந்திரம் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயங்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பணம் எடுக்க முடியாமல் திண்டாடினர்.

    இந்த நிலையில், கடந்த 11-ந்தேதி ஏ.டி.எம். எந்திரத்தின் பழுதை சரி செய்வதற்காக மெக்கானிக்குகள் சிலர் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் எந்திரத்துக்குள் வைக்கப்பட்டு இருந்த ஏராளமான ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவை அனைத்தும் எலிகளால் கடித்துக் குதறப்பட்டவை என்பது தெரிய வந்தது. ரூ.12,38,000 மதிப்புள்ள ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை இப்படி எலிகள் வேட்டையாடி பணத்தின் மதிப்பை இழக்கச் செய்துள்ளன.

    இதுபற்றி வங்கி அதிகாரிகள் கூறுகையில், “கடந்த மாதம் 19-ந்தேதி ரூ.29 லட்சம் இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்பப்பட்டது. மறுநாளே அது செயல்படவில்லை. எந்திரத்தின் பழுதை நீக்கியபோது, 16,62,000 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மட்டுமே எவ்வித சேதமும் இன்றி மீட்க முடிந்தது. ரூ.12,38,000 நோட்டுகளை எலிகள் கடித்து சின்னாபின்னமாக்கி விட்டன” என்றனர்.

    இச்சம்பவம் குறித்து தின்சுகியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேநேரம் எலிகள் இவ்வளவு பணத்தை கடித்து சிறுசிறு துண்டுகளாக்கியதாக கூறுவது அப்பகுதி மக்களிடையே பெருத்த சந்தேகத்தை கிளப்பி உள்ளது. பழுதடைந்த ஏ.டி.எம். எந்திரத்தை சரி செய்ய ஏன் 20 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  #ATM #Rats #Destroyed
    இங்கிலாந்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 முக்கிய ஆவணங்களை காமன்வெல்த் அலுவலகம் முற்றிலுமாக அழித்துவிட்டது. #IndiaSrilanka #Documents #Destroyed
    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் காலனி நாடுகள் பற்றிய முக்கிய ஆவணங்கள் சேகரித்து வைக்கப்படுவது வழக்கம். இதில் இங்கிலாந்து உளவு நிறுவனம், ராணுவத்தின் முக்கிய ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் அண்மையில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 முக்கிய ஆவணங்களை காமன்வெல்த் அலுவலகம் முற்றிலுமாக அழித்துவிட்டது.

    இதில் 2 ஆவணங்கள் 1978 மற்றும் 1980-ம் ஆண்டுகளுக்கு இடையே விடுதலைப்புலிகளின் நெருக்கடி காரணமாக இலங்கை ராணுவத்துக்கு இங்கிலாந்து உளவு துறை மற்றும் ராணுவ பிரிவு அறிவுறுத்தல் வழங்கிய ஆவணங்கள் ஆகும். மேலும் 2 ஆவணங்கள் 1979-ம் ஆண்டு முதல் 1980 முடிய இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இருந்த நட்புறவு தொடர்பானது.

    இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதற்கு, வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி வரலாற்று ஆராய்ச்சியாளர் பில் மில்லர் கூறுகையில் “முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணங்களை அழித்திருப்பதன் மூலம் வரலாற்றில் இனி இந்த ஆண்டுகளில் உள்ள தகவல்கள் குறித்து யாராலும் ஆய்வும் செய்ய முடியாதது” என்று கவலை தெரிவித்தார்.

    ஆனால் ஆவணங்களை அழித்த காமன்வெல்த் அலுவலகமோ, “இங்கிலாந்தின் ஆவண கொள்கைப்படிதான் இவை அழிக்கப்பட்டு உள்ளன” என்று விளக்கம் அளித்துள்ளது.  #IndiaSrilanka #Documents #Destroyed
    புங்யேரி பகுதியில் இருந்த அணு குண்டு பரிசோதனை மையத்தை வடகொரியா அரசு நிர்மூலமாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

    பியாங்யாங்:

    ஏவுகணைகளை வைத்து உலகை மிரட்டிவரும் வடகொரியா, தன்வசம் வைத்துள்ள அணு ஆயுதங்களை தங்களிடம் தந்தால் வாங்கிகொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யே-ரி பகுதியில் அந்நாடு அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், இதற்காக மலைகளை குடைந்து வெட்டப்பட்ட ரகசிய சுரங்கங்களையும் நிர்மூலமாக்கி மூடிவிட வடகொரியா அரசு முடிவெடுத்தது.

    இதைதொடர்ந்து, அணு குண்டு பரிசோதனை மையம் தகர்க்கப்படுவதை நேரில் வந்து பார்க்குமாறு உலகின் முக்கிய ஊடகங்களுக்கு வடகொரியா அரசு அழைப்பு விடுத்திருந்தது. நேற்று அந்த இடமும், சுரங்கங்களும் தகர்க்கப்பட்ட காட்சிகளை சில ஊடகங்கள் யூடியூபில் வெளியிட்டுள்ளன. #NorthKorea #Punggyerinucleartestsite

    அந்த வீடியோவைக் காண...,
    <

    ×