search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரட்டூர் ஏரியில் மேலும் 230 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு- பெண்கள் கண்ணீர்
    X

    கொரட்டூர் ஏரியில் மேலும் 230 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு- பெண்கள் கண்ணீர்

    கொரட்டூர் ஏரியில் மேலும் 230 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படுவதை கண்ட பெண்கள் கதறி அழுதபடி சோகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் உள்ள கொரட்டூர் ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள 589 ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யும்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு மாற்று இடமாக பெரும்பாக்கத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

    ஆனால் அங்கு வசித்த பொதுமக்கள் யாரும் வீடுகளை காலி செய்ய வில்லை. இதையடுத்து நேற்று முத்தமிழ்நகர், மூகாம்பிகை நகரில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்தனர்.

    இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜே.சி.பி. எந்திரம் மீது கற்கள் வீசப்பட்டன. அப்போது 5 பெண்கள் தங்களது 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்தனர்.

    பின்னர் அப்பகுதி மக்களை வெளியேற்றி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நடந்தது. இதையடுத்து வீடுகளில் பொருட்களை அவர்களாவே வெளியே கொண்டு வந்தனர். நேற்று சுமார் 250 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

    இன்று 2-வது நாளாக வீடுகளை அகற்றும் பணி நடந்தது. மேலும் 230 வீடுகள் அகற்றப்படுகின்றன. இதையடுத்து வடக்கு மண்டல போலீஸ் இணை கமி‌ஷனர் பிரேம் ஆனந்த்சின்கா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    வீடுகள் இடிக்கப்படுவதை பெண்கள் கதறி அழுதபடி சோகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.


    பின்னர் பொதுமக்கள் தங்களது பொருட்களுடன் கண்ணீர் மல்க வெளியேறினார்கள். அவர்கள் கூறும்போது, “கடந்த 25 ஆண்டுகளாக இங்கு வசித்து வந்தோம். எங்களது வாழ்வாதாரம் இப்பகுதியில்தான் உள்ளது. குழந்தைகள் அருகில் பள்ளியில் படித்து வருகிறார்கள். இதனால் இப்பகுதியில் உள்ள வாடகை வீட்டுக்கு குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×