search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agricultural crops"

    • சிறுதானியங்களை கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.
    • காட்டு பன்றிகளை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வன அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஸ் பிரபு தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க சத்தி மலை வட்டார செயலாளர் பி.சடையலிங்கம், பொருளாளர் பி.சடையப்பன், பர்கூர் மலை வட்டார செயலாளர் எஸ்.வி.மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

    குத்தியாலத்தூர், குன்றி, கூத்தம்பாளையம் ஆகிய பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரை மிதித்து கொன்றது.

    இந்த யானையை வேறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி பல முறை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடம்பூர் வனச்சரகத்தில் குன்றி மலை கிராமத்தை சேர்ந்த பொம்மேகவுடர், சித்துமரி ஆகிய 2 பேரும் வன விலங்கால் கொல்லப்பட்டனர்.

    இதுபற்றியும் நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்கவும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    வனப்பகுதி அதனையொட்டிய பகுதியில் காட்டு விலங்குகளான யானை, காட்டு பன்றி, மான் போன்ற விலங்கால் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு, மனு வழங்கியும் நிவாரணம் வழங்கப்படவில்லை.

    தமிழக அரசு சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் என சட்டசபையில் அறிவித்தனர். இத்திட்டத்தை ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் செயல்படுத்த வேண்டும்.

    வனப்பகுதியில் சேகரிக்கப்படும் சிறுதானியங்களை கொள்முதல் செய்ய அரசு கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.

    வனத்தையும், விவசாய பயிர்களையும் அழிக்கும் காட்டு பன்றிகளை சுட கேரளா அரசு அனுமதி வழங்கியது போல தமிழகத்திலும் காட்டு பன்றிகளை சுட்டுப்பிடிக்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    பின்னர் வனத்துறை அலுவலர்கள் பேசுகையில், ''அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை கண்காணித்து வழக்கு பதிவு செய்யப்படும்.

    போக்குவரத்து துறை சார்பில் நடவடிக்கைக்கு ஆவணம் செய்யப்படும். வன விலங்குகளால் பாதிக்கப்படும் பயிர் சேதத்துக்கு இழப்பீடு உரிய காலத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

    கொடைக்கானல் மேல்லைப்பகுதியில் விவசாய பயிர்களை காட்டு பன்றிகள் நாசம் செய்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    திண்டுக்கல்:

    கொடைக்கானல் மேல்மலை பகுதியான மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் கேரட், பூண்டு, பீன்ஸ் ஆகிய காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர். குறிப்பாக பூண்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருந்தபோதும் தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களை ஒட்டி உள்ள வனப்பகுதியில் யானை, காட்டு பன்றி, முயல், காட்டெருமை ஆகிய வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி விவசாயம் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    கவுஞ்சி கிராமத்தில் திடீரென 50-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கும்பலாக ஊருக்குள் புகுந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். மேலும் காட்டு பன்றிகள் கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேலுச்சாமி, பெருமாள், கணேஷ் ஆகியோரின் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் விவசாயிகளே பன்றிகளை விரட்டி வனப்பகுதிக்குள் விட்டனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் தட்டுப்பாடு, விலையின்மை உள்ளிட்டவைகளால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நிலையில் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி சென்றுள்ளன.

    இந்த பயிர்களை நடவு செய்ய கடன் வாங்கி இருந்தோம். தற்போது அதற்கு பணம் செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே அரசு எங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றனர்.

    ×