search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wild pigs"

    • விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.
    • 4 நாட்களுக்கு முன் காட்டுப்பன்றிகள் கூட்டம் நுழைந்தது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் தோலம்பா–ளையம்புதூர், ஆதிமாதையனூா் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.

    இந்த கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி வனத்தில் இருந்து உணவு, குடிநீர் தேடி சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டு யானை, மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு, விளை நிலங்களுக்குள் நுழைந்து பொது–மக்களையும் விவசா–யிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் தோலம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்த மயில்சாமி மனைவி முத்தம்மாள் என்பவரின் கரும்பு தோட்டத்திற்குள் கடந்த 4 நாட்களுக்கு முன் காட்டுப்பன்றிகள் கூட்டம் நுழைந்தது.

    அப்போது அங்கு பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்களை காட்டு பன்றிகள் கூட்டம் காலால் மிதித்தும், தின்றும் சேதப்படுத்தியது.

    இதற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இன்று வரை இழப்பீட்டு தொகை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்க அரசு அதிகாரிகள் முன் வர வில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    காரமடை வனத்து றையினர் மட்டும் பெயரளவிற்கு வந்து பார்த்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பகுதிகளில் தொடர்ந்து வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு அரசு அதிகாரிகள் இழப்பீடு வழங்கு முன்வருவதில்லை என விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.

    கொடைக்கானல் மேல்லைப்பகுதியில் விவசாய பயிர்களை காட்டு பன்றிகள் நாசம் செய்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    திண்டுக்கல்:

    கொடைக்கானல் மேல்மலை பகுதியான மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் கேரட், பூண்டு, பீன்ஸ் ஆகிய காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர். குறிப்பாக பூண்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருந்தபோதும் தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களை ஒட்டி உள்ள வனப்பகுதியில் யானை, காட்டு பன்றி, முயல், காட்டெருமை ஆகிய வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி விவசாயம் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    கவுஞ்சி கிராமத்தில் திடீரென 50-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கும்பலாக ஊருக்குள் புகுந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். மேலும் காட்டு பன்றிகள் கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேலுச்சாமி, பெருமாள், கணேஷ் ஆகியோரின் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் விவசாயிகளே பன்றிகளை விரட்டி வனப்பகுதிக்குள் விட்டனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் தட்டுப்பாடு, விலையின்மை உள்ளிட்டவைகளால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நிலையில் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி சென்றுள்ளன.

    இந்த பயிர்களை நடவு செய்ய கடன் வாங்கி இருந்தோம். தற்போது அதற்கு பணம் செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே அரசு எங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றனர்.

    ×