search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adequate compensation"

    • சிறுதானியங்களை கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.
    • காட்டு பன்றிகளை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வன அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஸ் பிரபு தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க சத்தி மலை வட்டார செயலாளர் பி.சடையலிங்கம், பொருளாளர் பி.சடையப்பன், பர்கூர் மலை வட்டார செயலாளர் எஸ்.வி.மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

    குத்தியாலத்தூர், குன்றி, கூத்தம்பாளையம் ஆகிய பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரை மிதித்து கொன்றது.

    இந்த யானையை வேறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி பல முறை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடம்பூர் வனச்சரகத்தில் குன்றி மலை கிராமத்தை சேர்ந்த பொம்மேகவுடர், சித்துமரி ஆகிய 2 பேரும் வன விலங்கால் கொல்லப்பட்டனர்.

    இதுபற்றியும் நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்கவும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    வனப்பகுதி அதனையொட்டிய பகுதியில் காட்டு விலங்குகளான யானை, காட்டு பன்றி, மான் போன்ற விலங்கால் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு, மனு வழங்கியும் நிவாரணம் வழங்கப்படவில்லை.

    தமிழக அரசு சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் என சட்டசபையில் அறிவித்தனர். இத்திட்டத்தை ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் செயல்படுத்த வேண்டும்.

    வனப்பகுதியில் சேகரிக்கப்படும் சிறுதானியங்களை கொள்முதல் செய்ய அரசு கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.

    வனத்தையும், விவசாய பயிர்களையும் அழிக்கும் காட்டு பன்றிகளை சுட கேரளா அரசு அனுமதி வழங்கியது போல தமிழகத்திலும் காட்டு பன்றிகளை சுட்டுப்பிடிக்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    பின்னர் வனத்துறை அலுவலர்கள் பேசுகையில், ''அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை கண்காணித்து வழக்கு பதிவு செய்யப்படும்.

    போக்குவரத்து துறை சார்பில் நடவடிக்கைக்கு ஆவணம் செய்யப்படும். வன விலங்குகளால் பாதிக்கப்படும் பயிர் சேதத்துக்கு இழப்பீடு உரிய காலத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

    ×