search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cottage houses"

    திருத்துறைப்பூண்டியில், கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 குடிசை வீடுகள் எரிந்து நாசம் அடைந்தது.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில், கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 குடிசை வீடுகள் எரிந்து நாசம் அடைந்தது. தீ விபத்தின்போது வீடுகளில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பெரியநாயகிபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஓரு சில ஓட்டு வீடுகளை தவிர அனைத்துமே கூரை வீடுகள் ஆகும். நேற்று மதியம் 1 மணியளவில் இந்த பகுதியில் உள்ள குருமூர்த்தி(வயது 50) என்பவர் வீடு திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது.



    சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அருகில் இருந்த வீடுகளிலும் பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் பெரியநாயகிபுரத்தை சேர்ந்த சிவகுமார், தங்கையன், முத்துக் கிருஷ்ணன், பாலு, ராஜூ, சாமிக்கண்ணு, குமர கண்ணன், விவேகானந்தன், நாகராஜன், ராஜப்பன், அய்யப்பன், மணிகண்டன் சிவபாலன், பக்கிரிசாமி, மெய்க்கண்டவேல், மகேந்திரன், சண்முகம், குபேஸ்குப்தா, ராஜேந்திரன், ராஜீவ்காந்தி, வடிவேலு, இந்திரா, அண்ணாத்துரை, கருணாநிதி, பொதியப்பன், வாசுகி, ராமசாமி, பாஸ்கர், ரமணி, தங்கவேல், வைரக்கண்ணு, சித்ரவேல், பரசுராமன் ஆகியோரது வீடுகள் உள்பட 45 வீடுகள் எரிந்து நாசமாயின.

    தீ விபத்து ஏற்பட்டபோது அங்குள்ள வீடுகளில் இருந்த 10-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் பயங்கர வெடிச் சத்தம் ஏற்பட்டது. அப்போது அங்கு தீயை அணைத்துக் கொண்டு இருந்த நெடும் பாலத்தை சேர்ந்த ராஜூ(48) தலையில் வெடித்த சிலிண்டரின் ஒரு பகுதி வந்து விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து திருத்துறைப்பூண்டி, திருவாரூர், முத்துப்பேட்டை, கோட்டூர் ஆகிய ஊர்களில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் 50்-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீ விபத்தில் அனைத்து வீடுகளும் எரிந்து நாசமாயின.

    தீ விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வராமல் கால தாமதமாக வந்ததால் தான் அனைத்து வீடுகளும் முழுமையாக எரிந்ததாகக் கூறி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) இனிக்கோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த தீ விபத்தின்போது வீடுகளில் இருந்த நகை, பணம், டி.வி., மிக்சி, கிரைண்டர், கட்டில், மெத்தை, பீரோ, துணிகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாச மானது. சேத மதிப்பு லட்சக் கணக்கில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வில்லை. இதுகுறித்து திருத் துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கலெக்டர் நிர்மல்ராஜ், தாசில்தார் மகேஷ்குமார், நகராட்சி ஆணையர் நாகராஜன் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆறுதல் கூறினர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஓவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம், வேட்டி, சேலை, 5 கிலோ அரிசி, 1 லிட்டர் மண் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டது. 
    பெண்ணாடம் அருகே தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகின. இந்த விபத்தில் ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகின.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த வடகரை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது45). விவசாயி. இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென ராஜாவின் குடிசை வீட்டில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த ராஜாவையும் அவரது குடும்பத்தினரையும் சத்தம் போட்டு எழுப்பினர்.

    சத்தம் கேட்டு எழுந்த ராஜா வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக வீட் டில் இருந்து வெளியே வந்தனர்.

    பின்னர் அந்த பகுதி பொது மக்கள் உதவியுடன் ராஜா தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்து சிதறியது.

    இதில் தீயின் வேகம் மேலும் அதிகரித்து அருகில் இருந்த ராஜாவின் தாய் ஞானாம்பாளின் குடிசை வீட்டிற்கும் தீ பரவியது.

    இது குறித்து திட்டக்குடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் ராஜாவின் வீட்டில் உள்ள 20 ஆயிரம் பணம் மற்றும் 8 பவுன் நகை மற்றும் 2 வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்தன.

    இது குறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவின் வீட்டில் மின்கிசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது வேறு எதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    எண்ணூர் காசி விஸ்வநாதர் கோவில் குப்பம் விரிவாக்கம் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 60 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல் ஆயின.
    திருவொற்றியூர்:

    எண்ணூர் காசி விஸ்வநாதர் கோவில் குப்பம் விரிவாக்கம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இங்கு ஆந்திராவை சேர்ந்த ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் தங்கி உள்ளனர்.

    இன்று காலை பூட்டி இருந்த ஒரு வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் அருகில் இருந்த மற்ற குடிசைகளுக்கும் தீ பரவியது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் 60 குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, பணம், நகை அனைத்தும் நாசமானது. இதனை கண்டு பெண்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    தீவிபத்து பற்றி அறிந்ததும் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் கே.பி.சங்கர், அ.தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணன், தாசில்தார் ராஜ்குமார் மற்றும் வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுககு ஆறுதல் கூறினர். #Tamilnews
    ×