search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cosmetics"

    • உதட்டுச் சாயத்தை பெரும்பாலான பெண்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.
    • லிப்ஸ்டிக் வகைகளுக்கு இப்போது வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

    உதடுகளுக்கு அழகு சேர்க்கும் 'லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச் சாயத்தை பெரும்பாலான பெண்கள் உபயோகப்படுத்துகிறார்கள். ரசாயனம் கலக்காமல், முழுவதும் இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக் வகைகளுக்கு இப்போது வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இல்லத்தரசிகள் இத்தகைய லிப்ஸ்டிக் தயாரிப்பை பகுதிநேர தொழிலாக மேற்கொள்ள முடியும். அதைப்பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்...

    சாக்லெட் லிப்ஸ்டிக் தயாரிக்க தேவையான பொருட்கள்:

    கோகோ பவுடர்- ஒரு ஸ்பூன்

    தேங்காய் எண்ணெய்- 1/2 ஸ்பூன்

    தேன்மெழுகு (துருவியது)- 1/4 ஸ்பூன்

    லாவண்டர் எண்ணெய்- 2 துளிகள்

    செய்முறை:

    ஒரு சிறிய கிண்ணத்தில் கோகோ பவுடரை போட்டு, அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்மெழுகு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனை டபுள் பாயிலிங் முறையில் உருக்கிக்கொள்ள வேண்டும். அதாவது, ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும். கோகோ பவுடர் இருக்கும் கிண்ணத்தை அதன் உள்ளே வைக்க வேண்டும். தண்ணீரின் வெப்பத்தால் கிண்ணத்தில் இருக்கும் கலவை உருக ஆரம்பிக்கும். முழுவதுமாக உருகியதும் அதில் லாவண்டர் எண்ணெய்யை ஊற்றி கலக்க வேண்டும்.

    இந்த கலவையை ஒரு லிப்ஸ்டிக் குப்பியில் மாற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். அரை மணிநேரம் கழித்து வெளியே எடுத்தால் அந்த கலவை லிப்ஸ்டிக் வடிவில் கடினமாகி இருக்கும். அதன் முனையை லேசாக கைவிரலால் ஷேப் செய்து விடுங்கள். இப்போது சாக்லெட் லிப்ஸ்டிக் தயார். இதனை ஆறு மாதம் வரை பயன்படுத்த முடியும்.

    சந்தைப்படுத்தும் முறை:

    சாக்லெட் லிப்ஸ்டிக்' தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளிலேயே கிடைக்கும். முதலில் சிறிய அளவில் தயாரித்து தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி அதன் நிறை குறைகளை தெரிந்துகொள்ளுங்கள். பிறகு உங்களுடைய தோழிகள் வட்டத்தில் கொடுத்து அவர்களுடைய பின்னூட்டத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

    அதன்பிறகு தன்னம்பிக்கையுடன் சந்தைப்படுத்துங்கள். உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் இருக்கும் அழகு நிலையங்கள், பொட்டீக், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் இலவச சாம்பிள் அளித்து உங்கள் பிராண்ட் பெயரை பிரபலப்படுத்தலாம். சமூகவலை தளங்களிலும் காட்சிப்படுத்தலாம்.

    • பாலில் ரெட்டினோல் உள்ளது.
    • பால் பொருட்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும்.

    பாலில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலுசேர்க்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் பால் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனை ஆய்வுகளும் உறுதிபடுத்தி உள்ளன.

    * கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை சருமத்திற்கு அழகூட்டும் இரண்டு முக்கியமான ஊட்டச்சத்துக்கள். இவை இரண்டுமே பாலில் உள்ளன. இவை சருமத்திற்கு மட்டும் நன்மை செய்யாமல் மற்ற ஊட்டச்சத்துக்களுடன் சேர்ந்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகின்றன.

    * பாலில் ரெட்டினோல் உள்ளது. இது வைட்டமின் ஏ-ன் வடிவமாகும். விரைவில் வயதாகும் அறிகுறிகள் வெளிப்படுவதை தடுக்கும் எதிர்ப்பு பண்புகளை கொண்டது. அத்துடன் முகப்பருவை தடுத்து சருமத்திற்கு பொலிவு சேர்க்கக்கூடியது.

    * பாலில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும செல்கள் சேதம் அடைவதை தடுக்கின்றன. சருமத்தை அழகாக்கவும், இயற்கையான பிரகாசத்தை மீட்டெடுக்கவும் துணைபுரிகின்றன. சருமத்திற்கு கூடுதல் பளபளப்பு சேர்க்கவும் உதவுகின்றன.

    * சருமத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பண்புகளைக் கொண்டிருந்தாலும் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பாலுக்கும், முகப்பருவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    * முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பால் அதிகம் பருகும்போது பாதிப்பு அதிகரிக்கக்கூடும். ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள்தான் அதற்கு காரணமாகும்.

    * பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உட்கொள்வது முகப்பருவை ஏற்படுத்தும் ஆண்ட்ரோஜன்கள் போன்ற ஹார்மோன்களின் செயல்பாடுகளை தூண்டிவிடும்.

    * தயிர் போன்ற புளிக்கவைக்கப்படும் பால் பொருட்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், தோல் அழற்சி போன்ற தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அதில் இருக்கும் புரோபயாட்டிக்குகள் உதவும். ஆனால் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

    * முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முகப்பரு ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் பால் அருந்துவதை கூடுமானவரை தவிர்க்கவும். சரும நிபுணரிடம் ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது சிறந்தது.

    • முக அழகை மேம்படுத்த உதவுகின்றன.
    • பெர்ரி பழங்கள் கொண்டு ஃபேஸ்பேக் மற்றும் ஃபேஸ் ஸ்கிரப் தயாரிக்கலாம்.

    ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி, கிரான்பெர்ரி என பல்வேறு வகைகளில் இருக்கும் பெர்ரி பழங்கள், உடல் ஆரோக்கியயத்தை பாதுகாப்பதோடு, முக அழகையும் மேம்படுத்த உதவுகின்றன. இவற்றில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவை சரும பிரச்சினைகளை போக்கி, முகத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

    வீட்டிலேயே பெர்ரி பழங்கள் கொண்டு ஃபேஸ்பேக் மற்றும் ஃபேஸ் ஸ்கிரப் தயாரிக்கலாம். அதைப் பற்றிய குறிப்புகள் இதோ..

    ஃபேஸ்பேக், தேன் பேஸ்பேக்:

    முதலில் பெர்ரி பழங்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும், அந்த கூழுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இது சருமத்தை சுத்தம் செய்து, சருமம் பளபளப்பாக இருக்க உதவும்.

    பெர்ரி, ரோஸ் வாட்டர் பேஸ்பேக்:

    பெர்ரி பழக்கூழுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் கடலை மாவு கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைகழுவவும். இந்த ஃபேஸ்பேக், திறந்திருக்கும் சருமத் துளைகளை இறுகச்செய்து, முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும்.

    பெர்ரி, எலுமிச்சை பேஸ்பேக்:

    பெர்ரி பழக்கூழுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கெட்டியாக பசைபோல தயாரிக்கவும். இதை முகத் தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இந்த பேக்கை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தினால், முகத்தில் இயற்கையான பொலிவு மற்றும் பளபளப்பு உண்டாகும்.

    பெர்ரி அரிசி மாவு பேஸ்பேக்:

    பெர்ரி பழக்கூழுடன் சிறிதளவு தயிர், அரிசி மாவு மற்றும் சில துளிகள் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும், இந்த ஃபேஸ்பேக் வறட்சியை நீக்கி, சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

    பெர்ரி, ஓட்ஸ் ஃபேஸ்பேக்:

    பழக்கூழுடன், 2 டீஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து அரைக்கவும். அதனுடன் மண்பூன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசைபோல தயாரிக்கவும். பின்பு அதை முகத்தில் தடவி 10 முதல் 12 நிமிடங்கள் கழிந்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

    பெர்ரி, தேங்காய் எண்ணெய் ஸ்கிரப்:

    பெர்ரி பழங்களுடன், அரை டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், அதை முகம் மற்றும் கழுத்தில் தடவவும், இந்த ஸ்கிரப் முகப்பரு, வடுக்கள் மற்றும் கறைகளை விரைவாக அகற்ற உதயும்.

    • அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.

    பொதுவாக, வயதாகும்போது நமது உடலில் பல மாற்றங்களை சந்திக்கிறது. அதில் ஒன்று தான் தோல் சுருக்கும். இது வயதாகும்போது வருவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், ஒரு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கி போய் காட்சியளிக்கும். இதற்கு காரணம் உடலில் நீரிழப்பு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாத்திரங்கள் கழுவுதல் போன்றவை ஆகும். இருப்பினும், சில பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.

    ஏனென்றால், முகம் அழகாக தெரிந்தால் போதும் என்று நினைப்பது தான். அதுமட்டுமல்லாமல், அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியிருக்குமே என்றும் நினைப்பார்கள். பார்லருக்கு போய் அதையும் இதையும் பண்றதுக்கு பதிலாக வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தியே கைகளில் இருக்கும் சுருக்கங்களை போக்கி அழகான சருமத்தை பெற முடியும். மேலும் உங்க சருமத்தை மினுமினுப்பாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளும். இவ்வாறு இயற்கை பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.

    எலுமிச்சை ஸ்க்ரப்

    நமது சருமத்தில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த எலுமிச்சை ஸ்க்ரப் தான். அதற்கு ஒரு கப்பில் 3 அல்லது 4 ஸ்பூன் சர்க்கரையும், 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர், கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவிவிட்டு, இந்த கலவை கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். காய்ந்தவுடன் சாதாரண தண்ணீரில் கைகளை கழுவிடுங்கள். இதை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர மென்மையான கைகளை பெறலாம்.

    பால்

    பால் ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசர். இதை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கவும் உதவும். முதலில் எலுமிச்சை ஸ்க்ரப் செய்துக் கொள்ளவும். பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் பால், அதனுடன் பாதாம் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையில் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு கைகளை அப்படியே வைத்திருக்கவும். பின் கைகளை வெளியே எடுத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். இதை வாரத்தில் 4 அல்லது 5 முறை செய்துவர கைகளில் உள்ள சுருக்கங்கள் மறையத் தொடங்கும்.

    அன்னாசி கூழ்

    வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ள அன்னாசி பழத்தை சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியது. முதலில் அன்னாசி பழத்தை நன்றாக கூழ் போன்று பிசைந்துக் கொள்ளவும். அந்த கூழை கைகள் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி விடவும். மென்மையான மற்றும் சுருக்கமில்லாத கைக்கு இந்த ஹேண்ட் மாஸ்க்கை தினமும் பயன்படுத்தலாம்.

    ஆலிவ் ஆயில்

    தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு கைகளை மசாஜ் செய்துக் கொள்ளுங்கள். பின்னர், பருத்தி கையுறைகளை அணிந்து அவற்றை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். மீண்டும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்துவர கைகளை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும்.

    வாழைப்பழம்

    மேற்கூறிய எதுவும் செய்ய முடியாதவர்கள் வாழைப்பழத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தில் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, அவை சுருக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதாக அமைகின்றன. வாழைப்பழத்தை நசுக்கி கூழ் போன்று செய்துக் கொள்ளவும். அந்த கூழை உங்கள் கைகளில் தடவி காய்ந்தவுடன் கழுவிவிடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர மென்மையான கைகளை பெறலாம்.

    • சருமத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்கை அகற்றி, சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.
    • அற்புதமான ஸ்கிரப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

    அந்த காலம் முதல் பெண்கள் தங்கள் சருமத்தை பராமரித்துக்கொள்ள பல இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவது உண்டு. அது அவர்களின் சருமத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்கை அகற்றி, சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும். ஆனால் தற்போதைய அவசர உலகத்தில் தாங்களே தயாரித்து சருமப்பொலிவை பாதுக்காக்க பெண்களுக்கு நேரம் இல்லாததால், கெமிக்கல் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இது சருமத்திற்கு மட்டும் கெடுதல் செய்வது மட்டுமல்லாமல், உடலிற்கும் தீங்கு விளைவிக்க கூடும். அதனை தடுக்க, வெறும் மூன்றே பொருட்களை வைத்து வீட்டில் சருமப்பொலிவை அதிகரிக்க அற்புதமான ஸ்கிரப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

    ஸ்ட்ராபெர்ரி பிரவுன் சுகர் ஸ்கிரப்

    உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது ஸ்ட்ராபெர்ரி பழம். இதில் இருக்கும் வைட்டமின் சி சரும பாதிப்பை குறைகிறது. மேலும் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்சை எதிர்த்துப் போராடி சருமப்பொலிவை தக்க வைக்க பயன்படுகிறது. சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதோடு மட்டும் இல்லாமல் சரும சுருக்கத்தை குறைத்து இளமையாக இருக்க உதவி செய்கிறது.

    தேவையான பொருட்கள்:

    ஸ்ட்ராபெர்ரி - 3 அல்லது 4

    பிரவுன் சுகர் - 2 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

    செய்முறை:

    ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு கழுவி அதில் இருக்கும் கம்பு மற்றும் நடுவில் இருக்கும் தண்டை அகற்ற வேண்டும். அதன்பிறகு துண்டு துண்டாக நறுக்கி ஸ்ட்ராபெர்ரியை நன்றாக மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் பிரௌன் சுகர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். அவ்ளோ தான் சருமத்தை அழகாக பராமரிக்கும் ஸ்கிரப் தயார். இந்த ஸ்கிரப்பை சுத்தமான சருமத்தில் பயன்படுத்தினால் தான் வித்தியாசம் நன்றாக இருக்கும். எனவே, முதலில் உங்கள் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அதன் பின்னர் தயார் செய்த ஸ்கிரப்பை முகத்தில் அப்ளை செய்து வட்ட வடிவில் விரல்களால் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அடுத்து 10 நிமிடம் கழித்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்து கொள்ளவும். இப்போது உங்களின் முகத்தை பார்த்தால் உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும். முகம் அவ்ளோ பொலிவுடன் இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

    • கடுகு எண்ணெய்யை பலரும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
    • கடுகு எண்ணெய்யில் வைட்டமி ஈ நிறைந்துள்ளது.

    கடுகு எண்ணெய்யை பலரும் சமைய லுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் இதை மேற்பூச்சாகவும் யோகிக்க முடியும் இந்த எண்ணெய்யில் கால்சியம், மெக்னீசியம், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்டுகள் சல்பர், அப்லோ டாக்சின், சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக் அலிக் பாவமிடிக் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன.

    சரும நிறம்:

    கடுகு எண்ணெய்யில் வைட்டமி ஈ நிறைந்துள்ளது. இது பிரி-ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவும். இதில், சிறந்த ஆக்சிஜனேற்றங்கள் உள்ளதால் சரும செல்களை மேம்படுத்தும். இளமையிலேயே ஏற்படும் வயதான தோற்றத்தை தடுக்கும் ஆற்றலும் இந்த எண்ணெய்க்கு உண்டு. இதைத்தொடர்ந்து முகத்தில் தடவும்போது மெல்லிய கோடுகள். சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளை குறைக்க உதவும். தோல் அமைப்பு மற்றும் நிறத்தை மேம்படுத்தும். முகத்தில் உள்ள கருந்திட்டுகள், கரும்புள்ளிகளை குறைக்க உதவுவதுடன், முகத்திற்கு இயற்கையான பளபளப்பையும் தரும்.

    சன்ஸ்கிரீன்:

    கடுகு எண்ணெய்யில் மாய்ஸ்சுரைசர் பண்புகள் உள்ளன. அவை உலர்ந்த மற்றும் வெடிப்பு ஏற்பட்ட உதடுகளை குணப்படுத்தி ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவும். இந்த எண்ணெய்யில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலங்கள். இறந்த சரும செல்களை அகற்றவும். வெயிலினால் முகம் கறுத்துப்போவதை தடுக்கவும் உதவிபுரியும். இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து, இயற்கையான சன்ஸ்கிரின்போல் செயல்பட்டு, சூரியனின் புறஜாதா கதிர்களால் உண்டாகும் சரும பாதிப்பை தடுக்கும்.

    முடி வளர்ச்சி

    தற்போது பல பெண்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வுதான். வறட்சி, உதிர்தல் மற்றும் போலிவில்லாத கூந்தலுக்கு சுடுகு எண்ணொய் சிறந்த தீர்வாகும். கடுகு எண்ணெய்யில் உள்ள புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து மேம்படுத்தும். இதில் உள்ள ஆஸ்டி-பாக்டீரியல் பண்புகள் ' வழுக்கை விழவது மற்றும் ஸ்கால்ப் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும். கடுகு எண்ணெய்யை, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தடவி வரும்போது பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

    பாத வெடிப்பு:

    பலருக்கும் வறட்சி காரணமாக கால்களில் வெடிப்பு. நகங்கள் வெடிப்பு, தோல் உரிதல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். மழை மற்றும் குளிர்காலங்களில் இதுமேலும் அதிகரிக்கும். இதை தவிர்க்க கடுகு எண்ணெய்யை பாதங்களில் பூசி வரலாம்.

    கொழுப்பைக் குறைக்கும்:

    கடுகு எண்ணெய் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்றுப்பகுதியில் கொழுப்பு தேங்கி உள்ளவர்கள். அப்பகுதியில் இந்த எண்ணெய்யை, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தினமும் தடவி வரலாம். இதுபோன்று மசாஜ் செய்யும்போது, உடலில் இருந்து ஒருவித சூடு வெளியேறும். இது உடலில் பல நாட்களாக தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.

    • வைட்டமின் சி சீரமில் ஆன்டிஆக்சிடென்ட்கள் அதிகமாக இருக்கும்.
    • சருமத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள வைட்டமின் சி சீரம் உதவுகிறது.

    வைட்டமின் சி நம்முடைய உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல தான் நம்முடைய சருமத்துக்கும் வைட்டமின் சி அவசியம். இது சருமத்தில் உண்டாகும் இன்ஃபிளமேஷன்கள் முதல் தீவிரமான சருமப் பிரச்சினைகள் வரை தீர்க்கச் செய்யும். இந்த வைட்டமின் சி சீரமில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அதிகமாக இருக்கும். நம்முடைய உடலுக்கு எப்படி ஆக்சிடென்ட்கள் தேவையோ, அதேபோல தான் சருமத்திற்கும் வைட்டமின் சி அவசியம்.

    சருமத்தில் உள்ள ப்ரீ - ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடி சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் புறஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதில் இந்த வைட்டமின் சி முக்கியப் பங்கு வகிக்கிறது.

    சருமத்தில் அதிக சுருக்கங்கள் ஏற்படுவது இளம் வயதிலேயே வயதான தோற்றத்தைக் கொடுக்கும். நம்முடைய சருமத்தில் கொலாஜன் உற்பத்தி குறைவாக இருக்கும் போது சருமம் அதிக வறட்சி அடையும். சருமத்தை நீரேற்றத்துடனும் மென்மையாகவும் சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் இல்லாமல் இளமையாகவும் வைத்திருப்பதில் கொலாஜன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க வைட்டமின் சி சீரம் உதவி செய்கிறது.

    சருமம் நெகிழ்வுத் தன்மையுடனும் இளமையாகவும் இருக்க வேண்டுமென்றால் உங்களுடைய பகல் நேர சரும பராமரிப்பில் வைட்டமின் சி சீரம் பயன்படுத்துங்கள்.

    சருமத்தில் கரும்புள்ளிகள், தடிப்புகள், பருக்கள் ஆகியவை இல்லாமல் தெளிவான க்ளியர் சருமத்தையும், பளபளக்கும் சருமத்தையும் பெறுவதற்கு வைட்டமின் சி மிக முக்கியம். குறிப்பாக வைட்டமின் சி -யில் உள்ள ப்ளீச்சிங் பண்பு சருமத்தின் மேல் அடுக்குகளில் உள்ள கருமை, சன் டேன் ஆகியவற்றை போக்கி சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவி செய்யும்.

    குறிப்பாக சருமத்தில் ஆங்காங்கே காணப்படும் கருந்திட்டுக்கள், பெண்களுக்கு 40 வயதிற்குமேல் ஏற்படும் மங்கு பிரச்சனை, சூரிய வெப்பத்தால் ஏற்படும் சன் டேன் அதிகரிப்பதால் ஏற்படும் பிக்மண்டேஷன்கள் ஆகியவற்றை குறைத்து சருமத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள வைட்டமின் சி சீரம் உதவுகிறது.

    உடலுக்கு நீர்ச்சத்து எவ்வளவு அடிப்படையோ அவசியமோ அதே அளவிற்கு சருமமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு நீர்ச்சத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியம். அந்த வகையில் வைட்டமின் சி சீரம் பயன்படுத்தும் போது சருமம் அதிக நீர்ச்சத்துடன் இருக்கும்.

    வைட்டமின் சி சீரமில் நீர்ச்சத்துக்கான மூலக்கூறுகள் அதிக அளவில் இருக்கின்றன. இவை சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வதோடு தோலின் வறட்சியைப் போக்கி நல்ல மாய்ஸ்ச்சரைசராகவும் செயல்படும்.

    இயற்கையாகவே சருமத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கி புதிய செல்கள் உற்பத்தியாகும். அப்படி இறந்த செல்கள் நீங்கும்போது சருமத்தில் சின்ன சின்ன புள்ளிகள், கருமை, தோலுரிதல், சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக நாம் சருமத்தை எக்ஸ்போலியேட் செய்வதற்கு ஸ்க்ரப் பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தும்போது அழுத்தி தேய்ப்பதால் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். இவற்றை சரிசெய்து சருமம் சிவந்து போதல், தடித்தல் போன்ற பிரச்சினைகளை மிக வேகமாக ஆற்றும் ஹீலிங் பண்பு வைட்டமின் சி சீரமில் அதிகமாக இருக்கிறது.

    சூரிய கதிர்வீச்சில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்களின் தாக்கத்தால் சருமத்தில் நேரடியான பாதிப்புகள் உண்டாகும். சூரியக் கதிர்வீச்சின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க தவறினால் அது சருமத்தில் சிறு சிறு பாதிப்புகள் தொடங்கி, சரும புற்றுநோய் வரை கொண்டு போய்விடும். அதனால் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதோடு சேர்த்து வைட்டமின் சி சீரமும் பயன்படுத்துவது நல்லது. இது உங்கள் சருமத்திற்கு டபுள் புரொடக்ஷனை கொடுக்கும். புற ஊதா கதிர்களின் தாக்கத்தின் தன்மையை குறைத்து இளமையாக வைத்திருக்கச் செய்யும்.

    ஸ்கின் டோன் பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. முகம் மற்றும் சருமத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் ஒரு நேரத்திலும் மற்ற இடங்கள் கருமையாகவும் அதாவது வாயைச் சுற்றிய பகுதிகள், கண்ணுக்கு அடியில், கைகளில் முட்டிக்கு மேல் என சில பகுதிகள் கருமையாகவும் மற்ற பகுதிகள் வேறு நிறத்திலும் என இருப்பவர்கள் மிக அதிகம்.

    இந்த பிரச்சினையை சரிசெய்வதில் வைட்டமின் சி சீரம் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இந்த வைட்டமின் சி சீரமில் உள்ள ப்ளீச்சிங் பண்பு சருமத்தில் ஆங்காங்கே இருக்கும் கருமை, கருத்திட்டு ஆகியவற்றைச் சரிசெய்து சருமத்தை ஒரே நிறமாக வைத்திருக்க உதவி செய்யும். எனவே சருமத்தில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனையை சரிசெய்ய உதவும்.

    வைட்டமின் சி சீரமை உங்களுடைய சரும பராமரிப்பில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் ஏராளமான நன்மைகளை பெற முடியும்.

    • இயற்கையான ஸ்கின் ஒயிட்னிங் கிரீம்.
    • காலை மாலை இருவேளையும் பயன்படுத்தலாம்.

    சரும அழகை மேம்படுத்த பல கிரீம்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவை அனைத்தும் செயற்கையாக கலக்கப்படும் கெமிக்கல் ஏராளம். இதனால், நன்றாக இருக்கும் சருமம் கூட மோசமாகவிடுகிறது. எனவே, அவற்றை தடுக்க இனி வீட்டிலேயே இயற்கையான ஸ்கின் ஒயிட்னிங் கிரீமை தயாரித்து பயன்படுத்தலாம். இது முழுக்க முழுக்க வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி தயாரிப்பதால், எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. இதை உடல் முழுவதும் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே வாரத்தில் அப்பகுதியில் இருக்கும் கருமை நீங்கி சருமம் ஜொலிப்பதை நீங்களே கண்டு ஆச்சரியப்படுவீர்கள். வாங்க! இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை மற்றும் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீர் ரோஸ் - 3 பூக்கள்

    ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன்

    கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன்

    கிளிசரின் - 1 ஸ்பூன்

    வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் - 2

    பாதாம் எண்ணெய் - 1 ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் நாம் எடுத்து வைத்துள்ள பன்னீர் ரோஜாவை பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு, மையாக பசைபோன்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதில் 2 ஸ்பூன் அளவிற்கு ரோஸ் வாட்டர் ஊற்றி மீண்டும் அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அந்த விழுதை ஒரு வெள்ளை துணியில் கொட்டி நன்றாக பிழிந்து சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் பாதாம் எண்ணெய், கற்றாழை ஜெல், கிளிசரின் மற்றும் 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் இருக்கும் ஜெல் ஆகியவற்றை சேர்த்து ஒரு ஸ்பூனை பயன்படுத்தி நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். இவ்வாறு அடித்துக் கலக்கும்போது ஜெல் ரோஸ் கலரில் கிடைக்கும். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் ரோஸ் க்ரீம் தயார்.

    எப்படி பயன்படுத்துவது?

    தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவி விட்டு நாம் தயாரித்து வைத்துள்ள க்ரீமை அப்ளை செய்து கொள்ள வேண்டும். அடர்த்தியாக அப்ளை செய்யக்கூடாது. அதாவது, நாம் முகத்தில் சீரம் எப்படி பயன்படுத்துவோமோ அதேபோல் அப்ளை செய்ய வேண்டும். அதாவது, க்ரீமை விரலால் தொட்டு முகத்தில் ஆங்காங்கே புள்ளிகள் வைத்து அப்படியே தடவ வேண்டும்.

    இவ்வாறு செய்யும்போது முகம் இந்த க்ரீமை அப்படியே உறிஞ்சிக் கொள்ளும். அதன்பிறகு தூங்க செல்லலாம். வேண்டுமென்றால், காலை மாலை இருவேளையும் பயன்படுத்தலாம். மேலும், உடல் முழுவதும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். விரைவில் சருமம் ஜொலி ஜொலிப்பாக மாறும். ஆனால், தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

    • மழைக்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை தடுக்கிறது.
    • இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.

    ஓட்சில் உள்ள சபோனின் எனும் மூலக்கூறு சருமத்தில் ஆழமாக ஊடுருவி சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. இது சருமத்தை மென்மையாகவும், நீரேற்றத்துடனும் வைக்க உதவுவதோடு மழைக்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை தடுக்கிறது.

    ஓட்சில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்து அதில் படித்திருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. ஓட்சுடன் தயிர், வாழைப்பழம், பால், தேன், எலுமிச்சம் பழச்சாறு, ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஃபேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்துவது குறித்து தெரிந்துகொள்வோம்.

    ஓட்ஸ் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்

    பொடியாக அரைத்த ஒருகப் ஓட்ஸ் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு அதில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பசை போல தயாரிக்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி ௧௦ நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும், இந்த ஃபேஸ்பேக்கினை வார்த்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வரலாம்.

    ஓட்ஸ் மற்றும் வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்

    பொடியாக அரைத்த ஓட்ஸ் ஒரு கப், நன்றாக பழுத்த வாழைப்பழம் இவை இரண்டையும் மிக்சியில் போட்டு அரைக்கவும். அதனுடன் வெதுவெதுப்பான பால் சிறிதளவு சோர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சருமத்தில் ஏற்படும் தழும்புகளை குணப்படுத்தும். 'விட்டமின் சி' முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களை அழிக்கும்.

    ஓட்ஸ் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்

    2 கப் ஓட்சுடன், ஒரு கப் பால் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பசை போல தயாரிக்கவும். அதை, முகத்தில் பூசி ௧௫ நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த ஃபேஸ்பேக்கை வாரத்திற்கு 5 முறை பயன்படுத்தலாம்.

    ஓட்ஸ் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க்

    2 டேபிள் ஸ்பூன் ஓட்சில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அது ஆறிய பிறகு 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் ௨ டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த ஃபேஸ்பேக்கை முகம், கை மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழிந்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

    ஓட்ஸ் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் மாஸ்க்

    ஒரு டீஸ்பூன் பொடியாக அரைத்த ஓட்ஸ், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதில் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசவேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    • முதலில் ஹென்னாவை கலக்கி ஊறவைக்க வேண்டும்.
    • 2 மணிநேரம் முதல் 4 மணிநேரமாவது அப்படியே வைக்க வேண்டும்.

    இப்போதெல்லாம் சிறுவயதிலேயே நரைமுடி வருவது என்பது இயல்பாகி விட்டது. அது வருவதற்கு ஹெரிடிட்டி, டெஃபிஷியன்சி, நிறைய கெமிக்கல் கலந்த பொருட்களை உட்கொள்வது இந்த மாதிரி பல காரணங்களால் இளம்நரை ஏற்படுகிறது.

    இளம் நரையை மறைப்பதற்காக கெமிக்கல் ஹேர் டையை பயன்படுத்தும் போது அது நிறைய பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. ஸ்கின் இரிடேஷன், உடலில் கருப்பு தழும்புகள் ஏற்படுவது, உடல்நிலையை பாதிப்படைய செய்கிறது. அதுமட்டுமல்லாமல் நரைமுடியை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. அதனால் இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு ஹேர் டை செய்யலாம் என்று பார்க்கலாம்.

    மருதாணிபொடியும், அவுரி இலைபொடியையும் பயன்படுத்தி இயற்கையான முறையில் முடிக்கு கலரிங் செய்துகொள்ளலாம். அதற்கு முதலில் ஹென்னாவை கலக்கி ஊறவைக்க வேண்டும். அதற்கு இரும்பு பாத்திரமாக இருந்தால் வசதியாக இருக்கும். இதற்கு ஒரு இரும்பு கடாயில் சூடான ஒரு கப் தண்ணீர் ஊற்றவேண்டும். அதில் ஒரு ஸ்பூன் இன்ஸ்டண்ட் காபி பொடியை சேர்க்க வேண்டும். இதில் ஒரு அரை கப் அளவுக்கு ஹென்னா பொடியை சேர்க்க வேண்டும். இது கூடவே ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை பொடி சேர்க்க வேண்டும். கறிவேப்பிலை பொடி முடிவளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் கலரிங்கை இன்னும் கருப்பாக்கி கொடுக்கும்.

    பீட்ருட் எப்போதுமே ஒரு நல்ல நேச்சுரல் கலரிங்கை கொடுக்கும். எனவே ஒரு ஸ்பூன் பீட்ருட் பொடியை சேர்க்க வேண்டும். இது கட்டாயமல்ல, வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ள வேண்டும். பீட்ருட் பொடியை அதிகமாகவும் கலந்துவிடக்கூடாது. இந்த கலவையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி கலக்க வேண்டும். இந்த கலவையை உடனடியாக தலையில் அப்ளை செய்யக்கூடாது. ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும்.

    இந்த கலவையை மறுநாள் காலையில் எடுத்து நன்றாக கலந்துவிட்டு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்துகொள்ளவும். சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் இரண்டு சொட்டு யூக்கலிப்டிஸ் ஆயில் அல்லது டீட்ரீ ஆயில் சேர்த்துக்கொள்ளலாம். இதுவும் முடிவளர்ச்சிக்கு நல்லது.

    இந்த கலவையை எண்ணெய் இல்லாத சுத்தமான முடியில் தான் அப்ளை செய்ய வேண்டும். எண்ணெய் தேய்த்துவிட்டு அப்ளை செய்தால் கலர் ஒட்டாது. கைகளில் கலர் படியாமல் இருக்க கையுறை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தலைமுடியில் மட்டும் படுகிற மாதிரி எல்லா பகுதியிலும் தேய்க்க வேண்டும். நன்றாக எல்லா முடிகளிலும் படுகிறமாதிரி அப்ளை செய்ய வேண்டும். இந்த கலவையை முடிகளில் தேய்த்த பிறகு நல்ல கலரிங் ஆக வேண்டும் என்றால் குறைந்தது 2 மணிநேரம் முதல் 4   மணி நேரமாவது அப்படியே வைக்க வேண்டும். சைனஸ் பிரச்சினை இருந்தால் ஒரு மணிநேரம் வைத்தால் போதுமானது. 4  மணி நேரம் கழித்து நல்ல தண்ணீர் கொண்டு மட்டுமே அலசி எடுத்துக்கொள்ளவேண்டும். சோப்பு, ஷாம்பு, சீயக்காய் வகைகளைபயன்படுத்தக்கூடாது.

    தலைமுடி பிரவுன் கலரில் இருக்கும். தலைமுடி கருப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரண்டாவது கட்டமாக ஒரு பாத்திரத்தில் அரைகப் அளவுக்கு இண்டிகோ பொடியை எடுத்துக்கொள்ளவும் இதனை ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து (உப்பு கட்டாயம் சேர்க்க வேண்டும்) இண்டிகோ பொடியில் கலந்து 10 நிமிடம் மட்டுமே மூடி வைக்கவும். சூடான தண்ணீரில் மட்டும் தான் இண்டிகோ ஆக்டிவேட் ஆகும். இந்த கலவையையும் ஏற்கனவே ஹென்னா தடவி அலசிய முடியில் மறுபடியும் அப்ளை செய்ய வேண்டும்.

    இந்த இண்டிகோ கலவையை நன்றாக முடியில் தடவி ஒன்றரை மணி நேரம் முதல் 3 மணிநேரம் வரை தலையில் ஊற வைத்து வெறும் தண்ணீரில் தான் கழிவ வேண்டும்., ஷாம்பு பயன்படுத்தக்கூடாது. இரண்டும் ஒரேநாளில் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. அடுத்தடுத்த நாள் பயன்படுத்தலாம். ஆனால் இடையில் ஷாம்பு போடுவதோ, தலையில் எண்ணெய் தேய்ப்பதோ கூடாது. வெள்ளைமுடியோ, இளம் நரை பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஹேர் பேக் பயன்படுத்தி நீங்களும் பயன்பெறுங்கள்.

    • நல்ல பிராண்ட் சன்ஸ்கிரீன்களையே வாங்குங்க. காலாவதி தேதி பார்க்க மறந்துடாதீங்க….
    • சன்ஸ்கிரீனை தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு தான் நீங்க வெளியில் செல்ல வேண்டும்.

    சூரியனின் புற ஊதா கதிர்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். எப்போதும் புதிய சன்ஸ்கிரீன் லோஷன்களை உபயோகிப்பதே நல்லது. ஏற்கெனவே வாங்கி, சென்ற ஆண்டு பயன்படுத்தி மிச்சமான சன்ஸ்கிரீன் போடுவதை தவிர்க்கவும். முக்கியமாக, மருத்துவர் ஆலோசனைப்படி, நம் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.

    * நல்ல பிராண்ட் சன்ஸ்கிரீன்களையே வாங்குங்க. காலாவதி தேதி பார்க்க மறந்துடாதீங்க….

    * சன்ஸ்கிரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் `எஸ்பிஎஃப்' 15, 30, 50 என்ற ரகங்களில் இருக்கும். இந்த எண்தான், அந்த சன்ஸ்கிரீன் எந்த அளவு வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் என்பதற்கு அடையாளம். `எஸ்பிஎஃப்' 15 உள்ள சன்ஸ்கிரீன், வெயிலில் இருந்து ஒரு மணி நேரம் பாதுகாப்பு அளிக்கும். நம்ம ஊரு வெயிலுக்கு குறைந்தது 30 எஸ்பிஎஃப் சிறந்தது.

    * முகத்துக்கு மட்டும்மல்ல வெயில்படும் எல்லா இடங்களிலும் (கழுத்து, கை, கால்) சன்ஸ்கிரீன் லோஷன் தடவலாம்.

    * சன்ஸ்கிரீனை தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு தான் நீங்க வெளியில் செல்ல வேண்டும்.

    * என்னதான் நீங்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தினாலும், வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் செல்வதை தவிர்த்து விடுங்கள். தொடர்ந்து வெயிலில் இருந்தால், மூன்று மணி நேரம் கழித்து முகத்தை கழுவி மீண்டும் சன்ஸ்கிரீன் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

    தரமான பிராண்டட் சன்ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்தவும். தற்போது, ஆர்கானிக் புராடக்டுகளிலும் சன்ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. உங்களுக்கு ஏற்ற சன்ஸ்கிரீன்களை எத்தனை வருடங்கள் பயன்படுத்தலாம் என்று பரிசோதித்து வாங்குங்கள்.

    • டபுள் க்ளென்ஸிங் என்பது கொரியன் பியூட்டி நடைமுறையில் முக்கிய நடைமுறையாக இருக்கிறது.
    • பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு தினசரி போதுமான இரவு தூக்கம் அவசியம்.

    தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற யாருக்கு தான் விருப்பம் இருக்காது. பாலின வேறுபாடின்றி தற்போது அனைவருமே தங்கள் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற யாருக்கு தான் விருப்பம் இருக்காது.!! பாலின வேறுபாடின்றி தற்போது அனைவருமே தங்கள் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

    கொரியன் பியூட்டி அல்லது கே-பியூட்டி எனப்படும் ட்ரெண்டானது பலரது சரும பராமரிப்பு வழக்கத்தை மாற்றி இருக்கிறது. டிரெண்டாக இருக்கும் கொரியன் பியூட்டி சரும பராமரிப்பு டிப்ஸ்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் பயனுள்ள அணுகுமுறையை வழங்குவதால் பிரபலமாக இருக்கின்றன.

    டபுள் க்ளென்ஸ்: டபுள் க்ளென்சிங் என்பது கொரியன் பியூட்டி நடைமுறையில் முக்கிய நடைமுறையாக இருக்கிறது. உங்கள் சருமத்தில் உள்ள அழுக்கு, மேக்கப் மற்றும் சன்ஸ்கிரீன் அனைத்தையும் அகற்ற இரண்டு வெவ்வேறு க்ளென்சர்களை பயன்படுத்துவதே டபுள் க்ளென்சிங் ஆகும். இந்த டிப்சை பின்பற்றும் போது சருமத்தில் இருக்கும் மேக்கப் மற்றும் சன்ஸ்கிரீனை நீக்க எண்ணெய் சார்ந்த க்ளென்சரை முதலில் பயன்படுத்த வேண்டும். சருமத்தில் இருக்கும் மீதமுள்ளவற்றை அகற்ற இரண்டாவதாக நீர் சார்ந்த க்ளென்சரை பயன்படுத்த வேண்டும்.

    எக்ஸ்ஃபோலியேட்: எக்ஸ்ஃபோலியேட் செய்வதன் மூலம் சருமத்தில் இருந்து இறந்த செல்களை நீங்கி நமக்குபளபளப்பான மற்றும் மிருதுவான சருமம் கிடைக்கிறது. இருப்பினும், அதிகமாக எக்ஸ்ஃபோலியேட் செய்வது சருமத்தை சேதப்படுத்த கூடும் ஜென்ட்டிலாக எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும், அதே சமயம் அடிக்கடி செய்ய கூடாது. வாரத்திற்கு அதிகபட்சம் 2-3 முறை எக்ஸ்ஃபோலியேட் செய்வது நல்ல பழக்கமாக இருக்கும்.

    தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்: வெயில் காலமோ, மழை காலமோ அல்லது பனி காலமோ கிளைமேட்டை பொருட்படுத்தாமல் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க, தினசரி சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். 30 அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்.பி.எப். கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.

    போதுமான தூக்கம்: பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு தினசரி போதுமான இரவு தூக்கம் அவசியம். போதுமான அளவு தூங்காத போது, உங்கள் உடல் அதிக கார்டிசோலை உற்பத்தி செய்கிறது. கார்டிசோல்என்பது நம் சருமத்தில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றை உடைக்க கூடிய மன அழுத்த ஹார்மோன் ஆகும். எனவே தினசரி இரவு முதல் காலை வரை 7-8 மணிநேரம் நிம்மதியாக தூங்குவதை இலக்காக கொள்ளுங்கள்.

    ×