search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cosmetics"

    • ஒருவரின் அழகை வெளியில் காட்டுவது சிரிப்பு.
    • சிரிப்பு தான் முகத்திற்கு அழகை சேர்க்கிறது.

    பொதுவாகவே அனைவருக்கும் தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதீத ஆசை இருக்கும். அதற்காக வீட்டில் இருந்துக்கொண்டே பல விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பதும் உண்டு.

    சருமத்திற்கு தரும் அதே அக்கரையை உதட்டிற்கும் கொடுக்க வேண்டும். காரணம், ஒருவரின் அழகை வெளியில் காட்டுவது சிரிப்புதான். சிரிப்பு தான் முகத்திற்கு அழகை சேர்க்கிறது. அந்த சிரிப்பிற்கு முக்கியமாக இருப்பது உதடு. ஆகவே உதட்டை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    சிலருக்கு உதடு வறண்டு போய் இருக்கும். உதடுகள் வறண்டு விடாமல் அவற்றை பளபளப்பாக வைத்திருக்க பல முயற்சிகளை செய்யலாம். அதில் ஒன்று தான் லிப் ஆயில். இதை எப்படி எளிதான முறையில் வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கோகோ எண்ணெய் - அரை ஸ்பூன்

    வர்ஜின் தேங்காய் எண்ணெய் - அரை ஸ்பூன்

    ஆலிவ் ஆயில் - ஒரு ஸ்பூன்

    லாவண்டர் ஆயில் - 5 துளிகள்

    ஆரஞ்சு எண்ணெய் - 5 துளிகள்

    தேன் மெழுகு (பீஸ் வாக்ஸ்) - அரை தேக்கரண்டி

    வைட்டமின் ஈ டேப்ளட்ஸ் - 5 லிப்

    ஆயில் டியூப் - 3

    ரோஸ் பவுடர் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், கோகோ எண்ணெய் மற்றும் தேன் மெழுகு எண்ணெய் சேர்க்க வேண்டும்.

    டபுள் பாய்லிங் முறையில் அதாவது, அகலமான பாத்திரம் ஒன்றை எடுத்து தண்ணீர் ஊற்றி அதில் கண்ணாடி கிண்ணத்தை வைக்க வேண்டும். நீரில் மூழ்காதவாறு இருக்க வேண்டும். அதை சூடேற்ற வேண்டும். அப்போது கண்ணாடி கிண்ணத்தில் உள்ளவை உருகும்.

    இவ்வாறு 10 முதல் 15 நிமிடங்கள் வரை சூடேற்றினால் போதும். அனைத்தும் உருகி விடும். அடுத்து வைட்டமின் ஈ மாத்திரைகளை சேர்க்க வேண்டும். அதன்பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, ரோஸ் பவுடர் சேர்த்துக் கலக்க வேண்டும்.

    இறுதியாக லிப் ஆயில் டியூப்பில் ஊற்றி 30 நிமிடங்கள் வரை குளிர்ச்சிபடுத்த வேண்டும். இதை வறட்சியான உதட்டின் மேல் பூச வேண்டும். அதனால் உதட்டில் உள்ள வறட்சி நீங்கி அழகான மற்றும் மென்மையான உதடு கிடைக்கும்.

    • வீட்டிலேயே கிரீம் பயன்படுத்தி அழகுபடுத்தி கொள்வார்கள்.
    • தேன் முகத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

    ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் ஆசைப்படுகிறார்கள். ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக முகம் பளபளப்பாக இருப்பதற்காக ட்ரை செய்கின்றனர். இதற்காக பார்லருக்கு சென்று முகத்தை அழகுபடுத்திக் கொள்கின்றனர். சிலநபர்கள் வீட்டிலேயே கிரீம் பயன்படுத்தி அழகுபடுத்தி கொள்வார்கள். ஆனால் நீங்கள் இப்படி காசு கொடுத்து செலவு செய்து முகத்தை அழகுபடுத்தினாலும் சிறிது நேரத்திற்கு மட்டுமே முகத்தை அழகாக வைத்துக்கொள்ள முடியும். எனவே இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம் வாங்க...

    கற்றாழை-எலுமிச்சை

    கற்றாழை மற்றும் எலுமிச்சையில் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றி முகத்தை பளபளப்பாக மாற்றுகிறது. ஒரு பவுலில் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டுமுறை பயன்படுத்த வேண்டும்.

    கற்றாழை-தேன்

    கற்றாழை மற்றும் தேன் கலந்து முகத்தில் தேய்க்கும் போது அது முகத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் தேன் கலந்து இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின்னர் முகத்தை கழுவிவிடவும்.

    கற்றாழை-சர்க்கரை

    சர்க்கரை எக்ஸ்போலியேட்டாக பயன்படுகிறது. ஒரு பவுலில் கற்றாலை ஜெல் ஒரு ஸ்பூன், சர்க்கரை சிறிதளவு சேர்த்து கலக்கி இந்த பேக்கை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் வைத்திருந்து பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும்.

    மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை தினமும் செய்து வாருங்கள் உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகத்தை பளபளப்பாக இருப்பதை நீங்களே பார்க்கலாம்.

    • சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க மாய்ஸ்சுரைசர்கள் உதவும்.
    • பக்கவிளைவுகள் ஏற்படுத்தாமல் சருமத்தை பாதுகாக்கும்.

    மழை மற்றும் பனிக்காலங்களில் சரும வறட்சி பிரச்சினையை பலரும் சந்திப்பார்கள். இந்த நேரங்களில் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு மாய்ஸ்சுரைசர்கள் உதவும். இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே எளிதாக மாய்ஸ்சுரைசர்கள் தயாரித்து பயன்படுத்த முடியும். இவை பக்கவிளைவுகள் ஏற்படுத்தாமல் சருமத்தை பாதுகாக்கும். அதைப்பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

    ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன்

    ஆலிவ் எண்ணெய்யில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தில் ஆழமாக ஊடுருவி பழுதடைந்த செல்களை புதுப்பிக்கும். சருமத்தில் இருக்கும் மெல்லிய சுருக்கங்களையும் அகற்றும். ஆலிவ் எண்ணெய்யுடன் சம அளவு எடுத்து தேன் கலந்து நன்றாக குழைக்கவும். இதை சருமத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

    யோகர்ட் மற்றும் சர்க்கரை

    சருமத்தில் படிந்து இருக்கும் இறந்த செல்களை நீக்கி, சருமத்துக்கு புத்துணர்வு அளிக்கும் தன்மை யோகர்ட்டில் உள்ளது. இதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து சருமத்தில் பூசி, வட்ட இயக்கத்தில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இது சருமத்திற்கு பொலிவையும், மென்மையையும் அளிக்கும்.

    கற்றாழை

    கற்றாழையின் மேல் தோலை சீவி, அதன் உள்ளே இருக்கும் சதைப்பற்றான ஜெல்லை எடுக்க வேண்டும். அதை பலமுறை தண்ணீரில் நன்றாக சுத்தப்படுத்திய பின்னர் பசை போல அரைத்துக்கொள்ள வேண்டும். இப்போது அந்த ஜெல்லை சருமத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். சருமத்தில் உண்டாகும் காயங்களை குணப்படுத்தும் தன்மையும் கற்றாழைக்கு உண்டு.

    தேங்காய் எண்ணெய்

    தேவையான அளவு தேங்காய் எண்ணெய்யை சிறு கிண்ணத்தில் ஊற்றி மிதமாக சூடுபடுத்த வேண்டும். அதை இரவில் தூங்க செல்வதற்கு முன்பு உடலில் வறைட்சி அடைந்து இருக்கும் இடங்களில் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஆழமாக ஊடுருவி, வறட்சி நீக்கி பொலிவை அதிகரிக்கும்.

    பப்பாளி மற்றும் தேன்

    பப்பாளியில் இருக்கும் மூலக்கூறுகள் வெயிலால் சருமத்தில் ஏற்படும் கருமையை நீக்கும். பழுத்த பப்பாளி பழத்தின் மேல் தோலை நீக்கி சதைப்பற்றான பகுதியை எடுத்துக்கொள்ளுங்கள் அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து பசைபோல கலந்துகொள்ளுங்கள். இதனை சருமத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

    பால் மற்றும் பாலாடை:

    பாலாடையுடன் சிறிதளவு பால் சேர்த்து பசை போல அரைத்துக்கொள்ள வேண்டும். இதை சருமத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். பால், சருமத்தின் மிருதுவான தன்மையை பாதுகாக்கும். சருமத்துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தும்.

    • நெய், கூந்தல் பராமரிப்புக்கு பல வழிகளில் பயன்படுகிறது.
    • பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.

    சமையலுக்கு உபயோகிக்கும் நெய், கூந்தல் பராமரிப்புக்கு பல வழிகளில் பயன்படுகிறது. நெய்யில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது. முடி உதிர்வை தடுத்து, வளர்ச்சியை தூண்டக்கூடிய வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ ஆகியவை நெய்யில் நிறைந்திருக்கின்றன. நெய்யுடன் தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, தேன் மற்றும் வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வீட்டிலேயே ஹேர் மாஸ்க் தயாரித்து உபயோகிக்கலாம்.

    நெய் ஹேர் மாஸ்க்

    போதுமான அளவு நெய்யை எடுத்து தலையிலும். கூந்தலிலும் நன்றாக பூசவும். 20 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும். நுனி முடி பிளவுப்படும் பிரச்சினைக்கு இது சிறந்த தீர்வாகும். நெய், வறண்ட தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்கும், முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.

    நெய், வேப்பம்பூ ஹேர் மாஸ்க்:

    ஒரு கிண்ணத்தில் 3 டீஸ்பூன் நெய், 1 டீஸ்பூன் தேன், 10 முதல் 15 வேப்பிலைகள் கலந்து இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். காலையில் அதை சிறு தீயில் வைத்து 3 முதல் 4 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். பின்பு அதில் இருந்து வேப்பிலைகளை வெளியே எடுக்கவும், பின்பு அந்த நெய் கலவையை மிதமான சூட்டில் எடுத்து தலை முழுவதும் பூசவும். 30 நிமி டங்கள் கழித்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். வேப்பிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள் பொடுகு பிரச்சினையை நீக்கும், உடல் சூட்டை குறைக்கும், இளநரை உண்டாகாமல் தடுக்கும்.

    நெய், தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்:

    2 டீஸ்பூன் நெய்யுடன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறு தீயில் 10 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். பின்பு அதில் உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு எசன்ஷியல் எண்ணெய்யை சில துளிகள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தலை பகுதியிலும், கூந்தலிலும் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர் மாஸ்க் பொடுகை நீக்கி, முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.

    நெய், எலுமிச்சம் பழச்சாறு ஹேர் மாஸ்க்:

    2 டீஸ்பூள் நெய்யை உருக்கி, அதனுடன் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்கவும். இதை மித மான சூட்டில் எடுத்து தலையில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர்மாஸ்க் முடிக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

    நெய், தேன் ஹேர் மாஸ்க்:

    போதுமான அளவு நெய்யுடன் சில துளிகள் தேன் கலந்து தலையில் பூசவும். சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர்மாஸ்க் முடியின் வேர்க்கால்களுக்கு புத்துயிர் அளிக்கும். தலைமுடியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

    • குளிர்காலங்களில் சருமம் அதிக வறட்சியாக காணப்படும்.
    • சருமம் எரிச்சலின்றி பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும்.

    பொதுவாகவே குளிர்காலங்களில் சருமம் அதிக வறட்சியாக காணப்படும். இந்த சமயங்களில் சிலர் சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துகின்றனர். சிலர் இதற்கென பேசியல் செய்து சருமத்தை பேணுகின்றனர். சரும வறட்சி பிரச்சினைகளில் இருந்து விடுபட ஒவ்வொரு முறைகளை பெண்கள் பின்பற்றினாலும் கிளிசரின் சோப் அதற்கு நல்ல தீர்வாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

    தற்போது சமூக வலைதளங்களில் பலரும் ஆர்கானிக் சோப்புகளை தயார் செய்து விற்று வருகின்றனர். ஆனால் செலவு அதிகம் இருக்கும் என எண்ணி அதனை வாங்கி உபயோகம் செய்ய மக்கள் தயங்குகின்றனர். குறைந்த செலவில் நாமே வீட்டில் ஆர்கானிக் சோப்புகளை செய்ய முடியும். கிளிசரின் சோப் எளிய முறையில் செய்யக் கூடியது. நாம் வீட்டிலேயே சோப்களை தயார் செய்து பயன்படுத்தலாம். திரவ வடிவில் இருக்கும் கிளிசரின் சருமத்தை அழகுபடுத்துவதோடு ஈரப்பதமாகவும் வைக்கிறது. இதனை சோப்பாக செய்து பயன்படுத்தும் சருமம் எரிச்சலின்றி பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும். இதனை வீட்டிலேயே செய்து உபயோகம் செய்ய முடியும்.

    கிளிசரின் சோப் செய்ய சில வாசனை திரவியங்கள் (ரோஸ் ஆயில், லாவெண்டர் எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய்), கிளிசரின் பேஸ், இயற்கை நிறமூட்டிகள் ஆகியவை தேவை. இயற்கை நிறமூட்டியாக மஞ்சள் தூள், குங்குமப்பூ பயன்படுத்தலாம். சோப் தயார் செய்ய சிலிக்கான் மோல்ட் எனும் அச்சுகளை வாங்க வேண்டும்.

    கிளிசரின் பேசை எடுத்து குட்டி துண்டுகளாக நறுக்கி வையுங்கள். ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதனை மிதமான வெப்பத்தில் அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். நல்ல கைபிடியுடன் வாட்டமான பாத்திரத்தில் நறுக்கிய கிளிசரினை எடுத்து ஏற்கனவே சூடாகி கொண்டிருக்கும் நீரில் வைக்க வேண்டும். கவனமாக இருங்கள் பாத்திரம் மூழ்க கூடாது. இதை தான் டபுள் பாயிலிங் என்பார்கள். இந்த கிளிசரின் துண்டுகள் நன்கு உருகும் வரை சுத்தமான கரண்டியால் கிளறிவிடுங்கள். உருகிய பிறகு அதனை இறக்கி வையுங்கள். இதனுடன் தேவையான வாசனை திரவியங்களை ஊற்றி கொள்ள வேண்டும். இந்த செயல்முறைக்கு பிறகு அறை வெப்பநிலையில் 2 மணி நேரம் குளிர விடவேண்டும். சருமத்திற்கு ஏற்ற ஆர்கானிக் சோப் தயார்.

    வாசனை திரவியங்கள் கலந்த கிளிசரின் கலவையினை தாமதிக்காமல் சோப் மோல்டில் ஊற்ற வேண்டும். கிளிசரின் தன்மையே உடனடியாக குளிர்வதுதான். ஆகவே அடுத்தடுத்த செய்முறைகளுக்கு கிளிசரின் உறையும் முன்பு தயாராக இருப்பது அவசியம். சோப் மோல்டில் ஊற்றிய பிறகு நமக்கு தேவைப்பட்டால் ரோஜா, பன்னீர் சோப், நலங்கு மாவு சோப், கற்றாலை சோப், சந்தனம் சோப், வேப்பிலை சோப், துளசி சோப் ஆகியவற்றை செய்யலாம்.

    • ஹோம்மேட் ஆர்கானிக் சோப்புகளில் பல நன்மைகள் இருக்கிறது.
    • வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் தயார் செய்யலாம்.

    குளிர்காலமோ, வெயில் காலமோ எந்த காலமாக இருந்தாலும் சிலருக்கு எந்த குளியல் சோப்பும் ஒத்துக் கொள்வதே இல்லை அவர்களும் தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டப்படும் அத்தனை நிறங்களிலான சோப்புகளையும் ஒன்று விடாமல் பயன்படுத்தி ஓய்ந்திருப்பார்கள். சிலர் கலர், கலராக சோப் எதற்கு என்று வெள்ளை நிற சோப்புக்கு மாறிய பின்னரும் கூட சருமம் என்னவோ அவர்களது ஆசைப்படி பளபளக்காமல் மேலும் பொலிவிழந்து வறண்டும், வெடித்தும் தோற்றமளிப்பதைக் கண்டு மனச்சோர்வில் வீழ்ந்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள்.. சோப்போடு நிறுத்திக் கொள்வதில்லை. சோப்பில் கிடைக்காத சரும மென்மை மாய்சரைசர்களில் கிடைக்கிறதா பார்க்கலாம் என பல்வேறு நிறங்களில் மாய்சரைசர்களைப் பயன்படுத்தி சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள முயன்று கொண்டிருப்பார்கள்.

    இந்த தொல்லைகளை எல்லாம் தவிர்க்க வேண்டுமானால் கடைகளில் விற்கப்படும் விதம், விதமான செங்கல் கட்டிகளை தூக்கிக் கடாசி விட்டு நமக்கே, நமக்கேயான நேச்சுரல் பாடி வாஷ் மற்றும் சோப்களை நாமே தயாரித்துக் கொள்வது ஒன்று தான் சிறந்த வழி.

    திரவ சோப்பின் சிறப்பு என்னவென்றால் அது சருமத்தோடு ஒட்டி உறவாடி பின் பிரிய மாட்டேன் என்று படிந்து சரும வறட்சிக்கு காரணமாவதில்லை. அதனால் தான் நட்சத்திர விடுதிகளில் பெரும்பாலும் திரவ சோப்களையே தங்கள் விருந்தினர்களுக்கு காம்ப்ளிமெண்ட்டரியாகத் தருகிறார்கள். ஆர்கானிக் முறையில் ஹோம்மேட் சோப்களின் கை வண்ணத்தில் அனைவரது சருமமும் விரும்பிய வண்ணம் பொலிவு பெற்றால் சரி தான்.

    ஹோம்மேட் ஆர்கானிக் சோப்புகளில் பல நன்மைகள் இருக்கிறது. ஆயில் சருமம், உலர் சருமம்... என சரும வகைகளுக்கு ஏற்ற சோப்புகளை நாமே நம் சருமத்திற்கு ஏற்றவாறு வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் தயார் செய்யலாம். குப்பைமேனி இலையில் தயாராகும் சோப்புக்கு சரும அலர்ஜிகளை கட்டுப்படுத்தும் திறன் உண்டு. உருளைக்கிழங்கு சோப் 'பிளிச்' செய்த உணர்வை தரும்.

    ரோஜா இதழ் சோப் சருமத்தை மென்மையாக்கும். கற்றாழை முகத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும். இப்படி, சரும தேவைக்கு ஏற்ப, தக்காளி, கேரட், வேப்பிலை-துளசி, அஸ்வகந்தா, ஆவாரம் பூ, ஆட்டுப்பால், தேங்காய்ப்பால்... என பலவிதமான மூலிகைகளில் சோப்புகளை தயாரிக்கலாம். இதனால்தான், ஆர்கானிக் ஹோம்மேட் சோப்புகளை டீன்-ஏஜ் வயதினர் விரும்பி வாங்குகிறார்கள்.

    உதாரணத்திற்கு, சோப் போன்ற பொருட்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்போது, அதற்கென ஒருசில ரசாயனங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதை தவிர்க்க வேண்டுமானால், அந்த கெமிக்கலுக்கு ஒத்துபோகும், இயற்கை பொருளை சரிவர சேர்க்க வேண்டும். அப்போதுதான், அது 100 சதவிகித ஆர்கானிக் பொருளாகிறது.

    • வீட்டிலேயே சோப் தயாரிக்கலாம்.
    • பணிபுரிய விரும்பும் பெண்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

    முதலில் நீங்கள் உங்கள் உடலுக்கு ஏற்ற அல்லது உங்கள் சருமத்திற்கு ஏற்ற சோப்புகளில் எந்த சோப்பை பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் சிகப்பழகையும், உடல் நறுமணத்தையும், மென்மையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கக்கூடியதாக அந்த சோப் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் தேவையான பொருட்களை சேர்த்து வீட்டிலேயே சோப் தயாரிக்கலாம். அதை நீங்கள் சந்தைப்படுத்தவும் செய்யலாம். வீட்டில் இருந்து பணிபுரிய விரும்பும் பெண்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். முதலில் உங்கள் வீட்டில் உள்ளவர்கள், அருகில் உள்ளவர்கள் என கொடுத்து பரிசோதித்துவிட்டு பின்னர் சந்தைப்படுத்த தயார் ஆகலம். இப்படி விதவிதமான சோப்புகள் உள்ளன. வீட்டிலேயே தயாரிக்க கூடிய சில சோப் வகைகளை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்...

    ஸ்கின் ஒயிட்டனிங் சோப்

    மைசூர் பருப்பு 50 கிராம் எடுத்து மிக்சியில் பொடித்துக்கொள்ள வேண்டும். அதனுனர் ஒரு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 விட்டமின் ஈ கேம்ஸ்யூல், ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ரெகுலர் சைஸ் டிரான்ஸ்பரண்ட் கிளிசரின் பேஸ் பார் சோப் வாங்கி அதை மெல்லிய ஸ்லைஸ்களாக துண்டாக்கி கொள்ள வேண்டும். ஸ்லைஸ் செய்த சோப் துண்டுகளை டபுள் பாய்லிங் முறையில் நன்கு சூடாக்கினால் அது உருகிவிடும். உருகிய சோப் கலவையுடன் நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள கலவையையும் சோப் கலவையில் சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். சூடு கைபொறுக்கும் பதமானதும் அதை உங்களுக்கு பிடித்த சோப் மோல்டுகளில் ஊற்றி அறைவெப்ப நிலையில் ஆறவிடவும். ஆறிய பிறகு மோல்டுகளில் இருந்து பிரித்து எடுக்கலாம்.

    வேப்பிலை சோப்

    ஒரு கைப்பிடி வேப்பிலைகளை எடுத்து அதனை நன்றாக கழுவி மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இதனுடன் 2 வைட்டமின் ஈ எண்ணெய்யும் சேர்த்து கலந்து இதனை டிரான்ஸ்பரண்ட் கிளிசரின் பேஸ் பார் எடுத்து டபுள் பாய்லிங் முறையில் சூடாக்கி இந்த கலவையை அதனுடன் கலந்து சோப் மோல்டில் ஊற்றி எடுத்தால் வேப்பிலை சோப் தயார். இது நாம் வீட்டிலேயே தயாரிக்கும் சோப் என்பதால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. வேப்பிலை சோப் உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை விரட்டவும், சருமத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது.

    கற்றாலை சோப்

    சுத்தமான கற்றாலை ஜெல் ஒரு கப் எடுக்க வேண்டும். அதில் வைட்டமின் ஈ எண்ணெய் 2 கேப்ஸ்யூல் சேர்க்க வேண்டும், இதனுடன் பாதாம் ஆயில் ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் மற்றும் இதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து க்ரீம் பதத்து கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை டிரான்ஸ்பரண்ட் கிளிசரின் பேஸ் பார் எடுத்து டபுள் பாய்லிங் முறையில் சூடாக்கி இந்த க்ரீமையும் அதனுடன் கலந்து சோப் மோல்டில் ஊற்றி எடுத்தால் கற்றாலை சோப் தயார். இந்த சோப் ஸ்கின் ஒயிட்டனிங்கிற்கும் பயன்படும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது உடலுக்கு நல்ல சைனிங் மற்றும் குளோவாக இருப்பதற்கும் உதவுகிறது.

    • ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல்.
    • இளமை பொலிவைத் தக்கவைக்க உதவும்.

    இயற்கையான அணுகுமுறைகளை உங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம், உங்களை அழகாகக் காட்டலாம். உங்கள் சருமத்தைப் பாதுகாத்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல், மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் சீரான தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுதல் ஆகியவை உங்கள் இளமை பொலிவைத் தக்கவைக்க உதவும். என்றும் இளமையுடன் அழகாக இருப்பதற்கு உதவும் இயற்கை முறைகளை குறித்து இங்கு காணலாம்.

    * பப்பாளி பழத்தை எடுத்து துருவிக்கொள்ள வேண்டும். அதில் காபி தூள் கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், தேன் கால் டீஸ்பூன் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து மிதமான தண்ணீரில் கழுவ வேண்டும்,

    * ஒரு பவுலை அடுப்பில் வைத்து அதில் 100 கிராம் பாலை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அந்த கலவை கெட்டியானதும் இறக்கி வைத்து அதில் கால் டீஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் கற்றாலை ஜெல் சேர்த்து நன்றாக கலக்கி பயன்படுத்தலாம்.

    முகத்தில் உள்ள கருமை நீங்கவும், முகம் பொலிவு பெறவும், சருமம் வறண்டு விடாமல் இருப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம். முகத்திற்கு நல்ல பளபளப்பு கிடைக்கும்.

    * 2 ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து ஒரு வாணலியில் போட்டு அதனை நன்றாக நிறம் மாறி வருகிற அளவுக்கு வறுத்து எடுக்க வேண்டும். அது பார்ப்பதற்கு மஞ்சள் நிறம் மாறி காபி பொடி கலரில் இருக்கும். இதனை ஒரு கின்னத்தில் போட்டு அதில் ஒரு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ள வேண்டும். இதனை முகம், கை, கழுத்து பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து நன்றாக கழுவ வேண்டும். இது ஒரு சிறப்பான டீடேன் பேக்காக இருக்கும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது வெயிலினால் ஏற்படும் கருமை மற்றும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மாறி முகம் மென்மையாக இருக்கும்.

    * உதடு கருமை நீங்க பீட்ருட்டை மிக்சி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை வடிகட்டி அதில் நெய் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். இந்த கலவை கெட்டியானதும் அதனை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இப்போது இயற்கையான முறையில் லிப் பாம் தாயார்.

    * முதலில் உதட்டை ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து இதனை உதட்டில் ஸ்க்ரப்பாக பயன்படுத்தி தேய்த்து எடுக்க வேண்டும். அதன்பிறகு தயார் செய்து வைத்துள்ள லிப் பாமை பயன்படுத்தலாம்.

    * முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகளை அகற்றுவதற்கு ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், காய்ச்சாத பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் மாதிரி தயார் செய்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து ஒரு ஈரமான துணிகொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகள் நீங்கி விடும்.

    • முக அழகை கெடுக்கும் வகையில் மங்கு எனும் கருப்பு நிற படைகள் இருக்கும்.
    • பெண்களுக்கு தான் அதிகமாக வரும்.

    உங்கள் முக அழகை கெடுக்கும் வகையில் மங்கு எனும் கருப்பு நிற படைகள் இருக்கும். இதனை போக்க வீட்டு வைத்தியங்களை நீங்கள் பின்பற்றினால் போதும்.

    சிலருக்கு ஒவ்வாமை அல்லது அலர்ஜி காரணமாக அவர்கள் பலவித தோல் நோய்களால் தாக்கப்படுகின்றனர். அதில் ஒன்றுதான் மங்கு. கன்னத்தில் கருப்பு நிறத்தில் வரக்கூடிய இதனை மெலஸ்மா என்று அழைப்பர். மங்கு வருவதே நீங்கள் முன்கூட்டியே அறிந்தால் அதனை வீட்டில் இருந்தபடியே சரி செய்து விடலாம்.

    பொதுவாக இது கண்ணம் மூக்கு நிச்சயம் மற்றும் முழங்கால் பகுதியில் வரும். குறிப்பாக இது முகத்தில் கருப்பான புள்ளிகள் படர்ந்து காணப்படும். பொதுவாக இது பெண்களுக்கு தான் அதிகமாக வரும். அதுபோலவே ஹார்மோன் பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மொனோபாஸ் இது போன்ற காரணத்தினால் மங்கு வரக்கூடும்.

    செய்முறை:

    முதலில் உங்கள் முகத்தை நன்கு தண்ணீரால் கழுவிக்கொள்ள வேண்டும். குறிப்பாக மங்கு உள்ள இடத்தை நன்கு கழுவ வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு பஞ்சை தொட்டு முகத்தில் தேய்த்து 5 நிமிடம் கழித்து நன்றாக கழுவ வேண்டும். பால் கொண்டு நம் முகத்தை சுத்தம் செய்யும் போது முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள் நீங்கும்.

    அதன்பிறகு கொழுந்தாக இருக்கும் வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து அதனை விழுந்தாக அரைத்து எடுத்து அதனை மங்கு எங்கு இருக்கிறதோ அதன் மீது தடவி நன்றாக காய்ந்த பிறகு கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் போது முகத்தில் மங்கு சிறிது சிறிதாக மறைவதை கண்கூடாக பார்க்கலாம்.

    • டேன் இருந்தால் சருமமே பொலிவிழந்து காணப்படும்.
    • தயிர் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

    நாம் அதிகமாக வெளியில் சூரிய ஒளியில் பயணிக்கும்போது நமது முகம், கை மற்றும் கால்களில் டேன் ஏற்படுவது சகஜம். பொதுவாக வெளியில் வேலை செய்பவர்களுக்கு இது சிரமமானதாக கூட இருக்கலாம். வீட்டிலேயே இந்த டானை எப்படி சரிசெய்யலாம் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

    சருமப் பராமரிப்பு என்றாலே முகத்தை ஆரோக்கியமாகவும் பளிச்செனவும் வைத்துக் கொள்வது முக்கியம். நம்முடைய முகம், கை மற்றும் கால்களின் ஒரு சில பகுதிகளில் மட்டும் சருமம் அதிக கருமையுடன் டேனாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. டேன் இருந்தால் சருமமே பொலிவிழந்து காணப்படும்.

    நம் வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் தக்காளி. தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளதால் இது இயற்கையான சன் ஸ்கிரீனாக நமது சருமத்தில் செயல்படுகிறது. மேலும் வயதானது போல தோற்றத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

    தேவையான பொருட்கள்:

    கடலைமாவு

    தேங்காய் எண்ணெய்

    கஸ்தூரி மஞ்சள்

    தயிர்

    தக்காளி சாறு

    எலுமிச்சை சாறு

    செய்முறை:

    ஒரு பவுலில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து இதில் தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கி ஃபேஸ் பேக் தயார் செய்துகொள்ள வேண்டும். இதை நீங்கள் குளிக்கச் செல்வதற்கு முன் இந்த கலவையை உங்கள் முகம், கழுத்து, கைகளில் தடவி குறைந்தது 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும், அதன்பிறகு மிதமான நீரில் கழுவலாம்.

    இந்த பேஸ்டை தொடர்ந்து வாரத்திற்கு 2 தடவை பயன்படுத்தி வர முகம், கழுத்து, கைகளில் உள்ள கருமை நிறம் நீங்கி பளபளப்பாகும். தயிர் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

    • உதட்டுச் சாயத்தை பெரும்பாலான பெண்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.
    • லிப்ஸ்டிக் வகைகளுக்கு இப்போது வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

    உதடுகளுக்கு அழகு சேர்க்கும் 'லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச் சாயத்தை பெரும்பாலான பெண்கள் உபயோகப்படுத்துகிறார்கள். ரசாயனம் கலக்காமல், முழுவதும் இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக் வகைகளுக்கு இப்போது வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இல்லத்தரசிகள் இத்தகைய லிப்ஸ்டிக் தயாரிப்பை பகுதிநேர தொழிலாக மேற்கொள்ள முடியும். அதைப்பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்...

    சாக்லெட் லிப்ஸ்டிக் தயாரிக்க தேவையான பொருட்கள்:

    கோகோ பவுடர்- ஒரு ஸ்பூன்

    தேங்காய் எண்ணெய்- 1/2 ஸ்பூன்

    தேன்மெழுகு (துருவியது)- 1/4 ஸ்பூன்

    லாவண்டர் எண்ணெய்- 2 துளிகள்

    செய்முறை:

    ஒரு சிறிய கிண்ணத்தில் கோகோ பவுடரை போட்டு, அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்மெழுகு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனை டபுள் பாயிலிங் முறையில் உருக்கிக்கொள்ள வேண்டும். அதாவது, ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும். கோகோ பவுடர் இருக்கும் கிண்ணத்தை அதன் உள்ளே வைக்க வேண்டும். தண்ணீரின் வெப்பத்தால் கிண்ணத்தில் இருக்கும் கலவை உருக ஆரம்பிக்கும். முழுவதுமாக உருகியதும் அதில் லாவண்டர் எண்ணெய்யை ஊற்றி கலக்க வேண்டும்.

    இந்த கலவையை ஒரு லிப்ஸ்டிக் குப்பியில் மாற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். அரை மணிநேரம் கழித்து வெளியே எடுத்தால் அந்த கலவை லிப்ஸ்டிக் வடிவில் கடினமாகி இருக்கும். அதன் முனையை லேசாக கைவிரலால் ஷேப் செய்து விடுங்கள். இப்போது சாக்லெட் லிப்ஸ்டிக் தயார். இதனை ஆறு மாதம் வரை பயன்படுத்த முடியும்.

    சந்தைப்படுத்தும் முறை:

    சாக்லெட் லிப்ஸ்டிக்' தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளிலேயே கிடைக்கும். முதலில் சிறிய அளவில் தயாரித்து தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி அதன் நிறை குறைகளை தெரிந்துகொள்ளுங்கள். பிறகு உங்களுடைய தோழிகள் வட்டத்தில் கொடுத்து அவர்களுடைய பின்னூட்டத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

    அதன்பிறகு தன்னம்பிக்கையுடன் சந்தைப்படுத்துங்கள். உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் இருக்கும் அழகு நிலையங்கள், பொட்டீக், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் இலவச சாம்பிள் அளித்து உங்கள் பிராண்ட் பெயரை பிரபலப்படுத்தலாம். சமூகவலை தளங்களிலும் காட்சிப்படுத்தலாம்.

    • பாலில் ரெட்டினோல் உள்ளது.
    • பால் பொருட்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும்.

    பாலில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலுசேர்க்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் பால் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனை ஆய்வுகளும் உறுதிபடுத்தி உள்ளன.

    * கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை சருமத்திற்கு அழகூட்டும் இரண்டு முக்கியமான ஊட்டச்சத்துக்கள். இவை இரண்டுமே பாலில் உள்ளன. இவை சருமத்திற்கு மட்டும் நன்மை செய்யாமல் மற்ற ஊட்டச்சத்துக்களுடன் சேர்ந்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகின்றன.

    * பாலில் ரெட்டினோல் உள்ளது. இது வைட்டமின் ஏ-ன் வடிவமாகும். விரைவில் வயதாகும் அறிகுறிகள் வெளிப்படுவதை தடுக்கும் எதிர்ப்பு பண்புகளை கொண்டது. அத்துடன் முகப்பருவை தடுத்து சருமத்திற்கு பொலிவு சேர்க்கக்கூடியது.

    * பாலில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும செல்கள் சேதம் அடைவதை தடுக்கின்றன. சருமத்தை அழகாக்கவும், இயற்கையான பிரகாசத்தை மீட்டெடுக்கவும் துணைபுரிகின்றன. சருமத்திற்கு கூடுதல் பளபளப்பு சேர்க்கவும் உதவுகின்றன.

    * சருமத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பண்புகளைக் கொண்டிருந்தாலும் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பாலுக்கும், முகப்பருவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    * முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பால் அதிகம் பருகும்போது பாதிப்பு அதிகரிக்கக்கூடும். ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள்தான் அதற்கு காரணமாகும்.

    * பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உட்கொள்வது முகப்பருவை ஏற்படுத்தும் ஆண்ட்ரோஜன்கள் போன்ற ஹார்மோன்களின் செயல்பாடுகளை தூண்டிவிடும்.

    * தயிர் போன்ற புளிக்கவைக்கப்படும் பால் பொருட்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், தோல் அழற்சி போன்ற தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அதில் இருக்கும் புரோபயாட்டிக்குகள் உதவும். ஆனால் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

    * முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முகப்பரு ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் பால் அருந்துவதை கூடுமானவரை தவிர்க்கவும். சரும நிபுணரிடம் ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது சிறந்தது.

    ×