search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Natural Body Wash"

    • குளிர்காலங்களில் சருமம் அதிக வறட்சியாக காணப்படும்.
    • சருமம் எரிச்சலின்றி பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும்.

    பொதுவாகவே குளிர்காலங்களில் சருமம் அதிக வறட்சியாக காணப்படும். இந்த சமயங்களில் சிலர் சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துகின்றனர். சிலர் இதற்கென பேசியல் செய்து சருமத்தை பேணுகின்றனர். சரும வறட்சி பிரச்சினைகளில் இருந்து விடுபட ஒவ்வொரு முறைகளை பெண்கள் பின்பற்றினாலும் கிளிசரின் சோப் அதற்கு நல்ல தீர்வாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

    தற்போது சமூக வலைதளங்களில் பலரும் ஆர்கானிக் சோப்புகளை தயார் செய்து விற்று வருகின்றனர். ஆனால் செலவு அதிகம் இருக்கும் என எண்ணி அதனை வாங்கி உபயோகம் செய்ய மக்கள் தயங்குகின்றனர். குறைந்த செலவில் நாமே வீட்டில் ஆர்கானிக் சோப்புகளை செய்ய முடியும். கிளிசரின் சோப் எளிய முறையில் செய்யக் கூடியது. நாம் வீட்டிலேயே சோப்களை தயார் செய்து பயன்படுத்தலாம். திரவ வடிவில் இருக்கும் கிளிசரின் சருமத்தை அழகுபடுத்துவதோடு ஈரப்பதமாகவும் வைக்கிறது. இதனை சோப்பாக செய்து பயன்படுத்தும் சருமம் எரிச்சலின்றி பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும். இதனை வீட்டிலேயே செய்து உபயோகம் செய்ய முடியும்.

    கிளிசரின் சோப் செய்ய சில வாசனை திரவியங்கள் (ரோஸ் ஆயில், லாவெண்டர் எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய்), கிளிசரின் பேஸ், இயற்கை நிறமூட்டிகள் ஆகியவை தேவை. இயற்கை நிறமூட்டியாக மஞ்சள் தூள், குங்குமப்பூ பயன்படுத்தலாம். சோப் தயார் செய்ய சிலிக்கான் மோல்ட் எனும் அச்சுகளை வாங்க வேண்டும்.

    கிளிசரின் பேசை எடுத்து குட்டி துண்டுகளாக நறுக்கி வையுங்கள். ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதனை மிதமான வெப்பத்தில் அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். நல்ல கைபிடியுடன் வாட்டமான பாத்திரத்தில் நறுக்கிய கிளிசரினை எடுத்து ஏற்கனவே சூடாகி கொண்டிருக்கும் நீரில் வைக்க வேண்டும். கவனமாக இருங்கள் பாத்திரம் மூழ்க கூடாது. இதை தான் டபுள் பாயிலிங் என்பார்கள். இந்த கிளிசரின் துண்டுகள் நன்கு உருகும் வரை சுத்தமான கரண்டியால் கிளறிவிடுங்கள். உருகிய பிறகு அதனை இறக்கி வையுங்கள். இதனுடன் தேவையான வாசனை திரவியங்களை ஊற்றி கொள்ள வேண்டும். இந்த செயல்முறைக்கு பிறகு அறை வெப்பநிலையில் 2 மணி நேரம் குளிர விடவேண்டும். சருமத்திற்கு ஏற்ற ஆர்கானிக் சோப் தயார்.

    வாசனை திரவியங்கள் கலந்த கிளிசரின் கலவையினை தாமதிக்காமல் சோப் மோல்டில் ஊற்ற வேண்டும். கிளிசரின் தன்மையே உடனடியாக குளிர்வதுதான். ஆகவே அடுத்தடுத்த செய்முறைகளுக்கு கிளிசரின் உறையும் முன்பு தயாராக இருப்பது அவசியம். சோப் மோல்டில் ஊற்றிய பிறகு நமக்கு தேவைப்பட்டால் ரோஜா, பன்னீர் சோப், நலங்கு மாவு சோப், கற்றாலை சோப், சந்தனம் சோப், வேப்பிலை சோப், துளசி சோப் ஆகியவற்றை செய்யலாம்.

    • ஹோம்மேட் ஆர்கானிக் சோப்புகளில் பல நன்மைகள் இருக்கிறது.
    • வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் தயார் செய்யலாம்.

    குளிர்காலமோ, வெயில் காலமோ எந்த காலமாக இருந்தாலும் சிலருக்கு எந்த குளியல் சோப்பும் ஒத்துக் கொள்வதே இல்லை அவர்களும் தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டப்படும் அத்தனை நிறங்களிலான சோப்புகளையும் ஒன்று விடாமல் பயன்படுத்தி ஓய்ந்திருப்பார்கள். சிலர் கலர், கலராக சோப் எதற்கு என்று வெள்ளை நிற சோப்புக்கு மாறிய பின்னரும் கூட சருமம் என்னவோ அவர்களது ஆசைப்படி பளபளக்காமல் மேலும் பொலிவிழந்து வறண்டும், வெடித்தும் தோற்றமளிப்பதைக் கண்டு மனச்சோர்வில் வீழ்ந்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள்.. சோப்போடு நிறுத்திக் கொள்வதில்லை. சோப்பில் கிடைக்காத சரும மென்மை மாய்சரைசர்களில் கிடைக்கிறதா பார்க்கலாம் என பல்வேறு நிறங்களில் மாய்சரைசர்களைப் பயன்படுத்தி சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள முயன்று கொண்டிருப்பார்கள்.

    இந்த தொல்லைகளை எல்லாம் தவிர்க்க வேண்டுமானால் கடைகளில் விற்கப்படும் விதம், விதமான செங்கல் கட்டிகளை தூக்கிக் கடாசி விட்டு நமக்கே, நமக்கேயான நேச்சுரல் பாடி வாஷ் மற்றும் சோப்களை நாமே தயாரித்துக் கொள்வது ஒன்று தான் சிறந்த வழி.

    திரவ சோப்பின் சிறப்பு என்னவென்றால் அது சருமத்தோடு ஒட்டி உறவாடி பின் பிரிய மாட்டேன் என்று படிந்து சரும வறட்சிக்கு காரணமாவதில்லை. அதனால் தான் நட்சத்திர விடுதிகளில் பெரும்பாலும் திரவ சோப்களையே தங்கள் விருந்தினர்களுக்கு காம்ப்ளிமெண்ட்டரியாகத் தருகிறார்கள். ஆர்கானிக் முறையில் ஹோம்மேட் சோப்களின் கை வண்ணத்தில் அனைவரது சருமமும் விரும்பிய வண்ணம் பொலிவு பெற்றால் சரி தான்.

    ஹோம்மேட் ஆர்கானிக் சோப்புகளில் பல நன்மைகள் இருக்கிறது. ஆயில் சருமம், உலர் சருமம்... என சரும வகைகளுக்கு ஏற்ற சோப்புகளை நாமே நம் சருமத்திற்கு ஏற்றவாறு வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் தயார் செய்யலாம். குப்பைமேனி இலையில் தயாராகும் சோப்புக்கு சரும அலர்ஜிகளை கட்டுப்படுத்தும் திறன் உண்டு. உருளைக்கிழங்கு சோப் 'பிளிச்' செய்த உணர்வை தரும்.

    ரோஜா இதழ் சோப் சருமத்தை மென்மையாக்கும். கற்றாழை முகத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும். இப்படி, சரும தேவைக்கு ஏற்ப, தக்காளி, கேரட், வேப்பிலை-துளசி, அஸ்வகந்தா, ஆவாரம் பூ, ஆட்டுப்பால், தேங்காய்ப்பால்... என பலவிதமான மூலிகைகளில் சோப்புகளை தயாரிக்கலாம். இதனால்தான், ஆர்கானிக் ஹோம்மேட் சோப்புகளை டீன்-ஏஜ் வயதினர் விரும்பி வாங்குகிறார்கள்.

    உதாரணத்திற்கு, சோப் போன்ற பொருட்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்போது, அதற்கென ஒருசில ரசாயனங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதை தவிர்க்க வேண்டுமானால், அந்த கெமிக்கலுக்கு ஒத்துபோகும், இயற்கை பொருளை சரிவர சேர்க்க வேண்டும். அப்போதுதான், அது 100 சதவிகித ஆர்கானிக் பொருளாகிறது.

    ×