search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பளபளப்பான உதடு"

    • ஒருவரின் அழகை வெளியில் காட்டுவது சிரிப்பு.
    • சிரிப்பு தான் முகத்திற்கு அழகை சேர்க்கிறது.

    பொதுவாகவே அனைவருக்கும் தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதீத ஆசை இருக்கும். அதற்காக வீட்டில் இருந்துக்கொண்டே பல விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பதும் உண்டு.

    சருமத்திற்கு தரும் அதே அக்கரையை உதட்டிற்கும் கொடுக்க வேண்டும். காரணம், ஒருவரின் அழகை வெளியில் காட்டுவது சிரிப்புதான். சிரிப்பு தான் முகத்திற்கு அழகை சேர்க்கிறது. அந்த சிரிப்பிற்கு முக்கியமாக இருப்பது உதடு. ஆகவே உதட்டை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    சிலருக்கு உதடு வறண்டு போய் இருக்கும். உதடுகள் வறண்டு விடாமல் அவற்றை பளபளப்பாக வைத்திருக்க பல முயற்சிகளை செய்யலாம். அதில் ஒன்று தான் லிப் ஆயில். இதை எப்படி எளிதான முறையில் வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கோகோ எண்ணெய் - அரை ஸ்பூன்

    வர்ஜின் தேங்காய் எண்ணெய் - அரை ஸ்பூன்

    ஆலிவ் ஆயில் - ஒரு ஸ்பூன்

    லாவண்டர் ஆயில் - 5 துளிகள்

    ஆரஞ்சு எண்ணெய் - 5 துளிகள்

    தேன் மெழுகு (பீஸ் வாக்ஸ்) - அரை தேக்கரண்டி

    வைட்டமின் ஈ டேப்ளட்ஸ் - 5 லிப்

    ஆயில் டியூப் - 3

    ரோஸ் பவுடர் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், கோகோ எண்ணெய் மற்றும் தேன் மெழுகு எண்ணெய் சேர்க்க வேண்டும்.

    டபுள் பாய்லிங் முறையில் அதாவது, அகலமான பாத்திரம் ஒன்றை எடுத்து தண்ணீர் ஊற்றி அதில் கண்ணாடி கிண்ணத்தை வைக்க வேண்டும். நீரில் மூழ்காதவாறு இருக்க வேண்டும். அதை சூடேற்ற வேண்டும். அப்போது கண்ணாடி கிண்ணத்தில் உள்ளவை உருகும்.

    இவ்வாறு 10 முதல் 15 நிமிடங்கள் வரை சூடேற்றினால் போதும். அனைத்தும் உருகி விடும். அடுத்து வைட்டமின் ஈ மாத்திரைகளை சேர்க்க வேண்டும். அதன்பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, ரோஸ் பவுடர் சேர்த்துக் கலக்க வேண்டும்.

    இறுதியாக லிப் ஆயில் டியூப்பில் ஊற்றி 30 நிமிடங்கள் வரை குளிர்ச்சிபடுத்த வேண்டும். இதை வறட்சியான உதட்டின் மேல் பூச வேண்டும். அதனால் உதட்டில் உள்ள வறட்சி நீங்கி அழகான மற்றும் மென்மையான உதடு கிடைக்கும்.

    ×