search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "communist"

    • அவனியாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து நடந்தது.

    அவனியாபுரம்

    அவனியாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரிசிக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து தாலுகா குழு செயலாளர் தனபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி, முன்னாள் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் மதுகூர் ராமலிங்கம் கண்டன உரை ஆற்றினார். இதில் குமரவேல்,நயினா செல்வம்,பால்பாண்டி, செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ஊர்வலத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • மாநாட்டின் முதல்நாளில் அரசியல், அமைப்பு நிலை மற்றும் வேலை அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட 24 - வது மாநாடு பாபநாசத்தில் அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்ட செந்தொண்டர் பேரணியில் அனைவரும் சிவப்பு வண்ணத்தில் சீருடை அணிந்து கலந்து கொண்டனர். ஊர்வலத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாநாட்டு மண்டபத்தில் வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் கொடி ஏற்றிவைத்தார்.அதனைத் தொடர்ந்து மாநாடு தொட–ங்கப்பட்டது மாநாட்டில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநாட்டின் முதல்நாளில் அரசியல், அமைப்பு நிலை மற்றும் வேலை அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

    இதில் தேசிய குழு உறுப்பினர் கோ.பழனிசாமி, மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், மாதர் சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் டி.கண்ணகி, பாபநாசம் ஒன்றிய செயலாளர் பொன்.சேகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    மத வெறியை தூண்டி விட்டு, நாட்டின் ஒற்றுமையை பா.ஜனதா சிதைக்க பார்க்கின்றது என்று சீதராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். #sitaramyechury #bjp

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.யை ஆதரித்து கோவில்பட்டி மெயின் ரோடு காமராஜர் சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசியதாவது:-

    பா.ஜனதா அரசின் உயர் பணமதிப்பு இழப்பு, சரக்கு சேவை வரி விதிப்பு போன்ற தவறான பொருளாதார கொள்கைகளால், இதுவரையிலும் இல்லாத அளவுக்கு தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. பெரு வணிக நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை மத்திய பா.ஜனதா அரசு வழங்கி விட்டு, பின்னர் அதனை வாராக்கடனாக தள்ளுபடி செய்கிறது. இதேபோன்று அந்த நிறுவனங்களுக்கு சாதகமாகவே ரபேல் உள்பட அனைத்து ஒப்பந்தங்களையும் பல ஆயிரம் கோடி மதிப்பில் வழங்குகிறது. மாறாக விவசாயிகள், தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். எனவே பா.ஜனதா அரசு தோற்கடிக்கப்பட வேண்டும், மாற்று அரசு உருவாக வேண்டும்.

    மக்களிடம் பணத்தை கொள்ளையடித்த பா.ஜனதா அரசு தற்போது அதன் தேர்தல் அறிக்கையில் பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. அதேபோன்று பா.ஜனதாவுடன் இணைந்து தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் பல ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டது. இந்த 2 அரசுகளும் அகற்றப்பட வேண்டும்.

    பா.ஜனதா அரசில் பசுகாவலர்கள், கலாசார காவலர்கள் என்ற பெயரில் சிறுபான்மை மக்கள், இஸ்லாமியர்கள், தலித் மக்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். மத வெறியை தூண்டி விட்டு, நாட்டின் ஒற்றுமையை சிதைக்க பார்க்கின்றனர். மதசார்பற்ற ஜனநாயகத்தை காக்க, மதவெறி, வகுப்புவாதம் பிடித்த பா.ஜனதா அரசை தூக்கி எறிய வேண்டும்.

    மத்திய அரசின் அனைத்து துறைகளும், அமைப்புகளும் சீரழிக்கப்பட்டு உள்ளன. எனவே பா.ஜனதாவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடிய பிரச்சினைகளை பா.ஜனதா அரசு எழுப்பி வருகிறது. நமது நாட்டில் யாரும் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் ஆதரிக்க வில்லை.

    ஆனால் பா.ஜனதாவின் ஆட்சியில் 200 சதவீதம் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதனால் ஏராளமான படைவீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை தடுத்து நிறுத்தாமல், மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் பா.ஜனதா அரசு செயல்படுகிறது. எனவே புதிய மதசார்பற்ற அரசு அமைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தேசிய அளவில் காங்கிரசுடன் கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று சீதாராம் யெச்சூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #SitaramYechury

    கொல்கத்தா:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு அணியை உருவாக்குவதற்காக காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏன் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு பதில் அளித்து சீதாராம் யெச்சூரி கூறுகையில், “அரசியல் சூழ்நிலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. எனவே காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை முதலில் மாநில அளவில் தொடங்கப்பட வேண்டும்” என்றார்.

    மேற்கு வங்காளத்தில் பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசையும், பா.ஜனதாவையும் வீழ்த்துவதற்காக காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில்தான் காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இடையே தேசிய அளவிலான கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என்று சீதாராம் யெச்சூரி மறைமுகமாக கூறியுள்ளார். #SitaramYechury

    பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கு கம்யூனிஸ்டுகளே காரணம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். #Tamilisai #BJP
    சென்னை:

    பட்டாசு தொழிலாளர்கள் பட்டாசு தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினையில் கம்யூனிஸ்டு கட்சியினர் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளார்கள்.

    சென்னையில் பட்டாசுக்கு எதிராக போராடுகிறார்கள். அதேநேரத்தில் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறார்கள்.

    பட்டாசுக்கு எதிராக பிரசாரம் செய்த ஜபருல்லா மற்றும் கம்யூனிஸ்டுகளே சிவகாசியில் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க காரணம். தொழிலாளர்களே ஆதரவாளர்கள் யார்? விரோதிகள் யார்? என்பதை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Tamilisai #BJP

    திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை என்று காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TTVDinakaran #DMK #Congress #Communist
    சென்னை:

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.

    தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதனால் அந்த 18 தொகுதிகளுக்கும் ஏற்கனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.

    தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி தொடர்பான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரும் அரசியலில் ஈடுபட்டு இருப்பதால் தேர்தலில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், வருகிற தேர்தல்களில் தி.மு.க.வுடனோ, பா.ஜனதாவுடனோ நாங்கள் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம், அது தற்கொலைக்கு சமமானது. அதே நேரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் அல்லது பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொல்ல முடியாது என தெரிவித்தார்.

    இதன்மூலம் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி சேரும் விருப்பத்தை தினகரன் வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் அவரை ஏற்கவில்லை. தாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருப்பதாகவும், அதில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை என்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி தமிழக காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கூறுகையில், தி.மு.க.வுடனான எங்கள் கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. இந்த கூட்டணியில் மற்ற கட்சிகள் சேர விரும்பினால் அதுபற்றிய இறுதி முடிவை காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் என்றார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “அ.தி.மு.க.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் எங்களைப் பொறுத்தவரை ஒன்றுதான். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மக்கள் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து போராடி வருகிறோம்.

    வருகிற தேர்தலில் பா.ஜனதா, அ.தி.மு.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து முடிவு எடுக்கக்கூடிய நிலை உருவாகும். தமிழகத்தில் தி.மு.க.வுக்கு முக்கியத்துவம் இருக்கும். புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் மக்கள் பிரச்சினையில் எந்தவிதமான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்று தெரியவில்லை. எனவே தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை” என்றார்.



    இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் கூறுகையில், “தினகரன், அ.தி.மு.க. தலைமை பதவிக்கான போட்டியில் மோதிக் கொண்டு இருக்கிறார். அதில் உடன்பாடு ஏற்பட்டு ஒருமித்த கருத்து உருவானால் அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்து விடுவார். நாங்கள் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறோம். எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும்” என்றார். #TTVDinakaran #DMK #Congress #Communist
    முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிராக அரசு நிர்வாகத்தை தலையீடு செய்த கவர்னர் கிரண் பேடிக்கு கம்யூனிஸ்டுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #KiranBedi
    புதுச்சேரி:

    புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு செலாளர் சலீம், மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம், கம்யூனிஸ்டு (எம்.எல்.) செயலாளர் பால சுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா ஆட்சி நாட்டு மக்கள் தலையில் பெரிய பொருளாதார சுமையை சுமத்தி இருக்கிறது. தாங்க முடியாத அளவில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை அறிவித்து இருக்கிறது.

    ஜனநாயக பாதையை விட்டு விட்டு எதேச்சதிகார, சர்வதிகார ஆட்சியை நடத்தி, நாட்டு மக்களுடைய வாழ்க்கையை சீரழித்து விட்ட 4ஆண்டு கால மோடியின் சீர்கெட்ட ஆட்சியை கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஆதரவு அளித்த வணிக பெருமக்கள், கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து துறையினர், திரையரங்க உரிமையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

    இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிராக அரசு நிர்வாகத்தை தலையீடு செய்த கவர்னர் கிரண் பேடியின் ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

    மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகளின் இருந்த மீள்வதற்கு, மக்களே இந்த முழு அமைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்து மோடி ஆட்சிக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். #KiranBedi
    ஜூலை-30 தியாகிகள் நினைவு தினத்தையொட்டி நினைவு சின்னத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
    புதுச்சேரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-30 தியாகிகள் நினைவு தினமாக கம்யூனிஸ்டு கட்சியினர் கடைபிடித்து வருகிறார்கள். அதுபோல இன்று ஜூலை 30-ந்தேதி தியாகிகள் நினைவு தினத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் கடைபிடித்தனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் அக்கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் சுப்பையாசிலையில் இருந்து ஊர்வலமாக வந்து புதுவை- கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி.யும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அஜிஸ் பாட்சா பங்கேற்றார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் மற்றும் நிர்வாகிகள் அபிஷேகம், தினேஷ் பொன்னைய்யா, சேது செல்வம், கீதநாதன், துரை.செல்வம், சுப்பையா, பூபதி, மூர்த்தி, மாதர் சங்கம் லதா ஹேமலதா, இந்திய வாலிபர் சங்கம் அந்தோணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் அதன் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ. சார்பில் சுதேசிமில்லில் இருந்து ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநில செயலாளர்கள் பெருமாள், முருகன் மற்றும் நிர்வாகிகள் சீனுவாசன், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    எஸ்.சி. - எஸ்.டி. பிரிவு வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருத்தணியில் கம்யூனிஸ்டு-வி.சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பள்ளிப்பட்டு:

    எஸ்.சி. - எஸ்.டி. பிரிவு வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். அதனை அரசியல் சாசனத்தில் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்தணியில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், தலித் மக்கள் முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    ரெயில் மறியலில் ஈடுபட்ட அவர்கள் திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகே இருந்து ஊர்வலமாக வந்தனர்.

    இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கோபால், மாவட்டக்குழு உறுப்பினர் மோகனா, மாவட்ட பொருளாளர் நேரு, விடுதலை சிறுத்தை நகர செயலாளர் சுப்பிரமணி மற்றும் தலித் மக்கள் முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருத்தணி ரெயில் நிலையம் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 50 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதும் டி.எஸ்.பி. சேகர் மற்றும் போலீசார் ஒரு காரில் திருத்தணி ரெயில் நிலையம் நோக்கி சென்றனர்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் பஞ்சாட்சரம் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை உடனடியாக மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×