search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய அளவில் காங்கிரசுடன் கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை - சீதாராம் யெச்சூரி தகவல்
    X

    தேசிய அளவில் காங்கிரசுடன் கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை - சீதாராம் யெச்சூரி தகவல்

    தேசிய அளவில் காங்கிரசுடன் கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று சீதாராம் யெச்சூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #SitaramYechury

    கொல்கத்தா:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு அணியை உருவாக்குவதற்காக காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏன் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு பதில் அளித்து சீதாராம் யெச்சூரி கூறுகையில், “அரசியல் சூழ்நிலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. எனவே காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை முதலில் மாநில அளவில் தொடங்கப்பட வேண்டும்” என்றார்.

    மேற்கு வங்காளத்தில் பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசையும், பா.ஜனதாவையும் வீழ்த்துவதற்காக காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில்தான் காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இடையே தேசிய அளவிலான கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என்று சீதாராம் யெச்சூரி மறைமுகமாக கூறியுள்ளார். #SitaramYechury

    Next Story
    ×