search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு
    X

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செஞ்சட்டை சீருடை ஊர்வலம்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு

    • ஊர்வலத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • மாநாட்டின் முதல்நாளில் அரசியல், அமைப்பு நிலை மற்றும் வேலை அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட 24 - வது மாநாடு பாபநாசத்தில் அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்ட செந்தொண்டர் பேரணியில் அனைவரும் சிவப்பு வண்ணத்தில் சீருடை அணிந்து கலந்து கொண்டனர். ஊர்வலத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாநாட்டு மண்டபத்தில் வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் கொடி ஏற்றிவைத்தார்.அதனைத் தொடர்ந்து மாநாடு தொட–ங்கப்பட்டது மாநாட்டில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநாட்டின் முதல்நாளில் அரசியல், அமைப்பு நிலை மற்றும் வேலை அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

    இதில் தேசிய குழு உறுப்பினர் கோ.பழனிசாமி, மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், மாதர் சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் டி.கண்ணகி, பாபநாசம் ஒன்றிய செயலாளர் பொன்.சேகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×