search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Karthikeyan"

    • கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    • காலநிலை மாற்றத்தால் வறட்சியான இடங்களில் மழையும் பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் இன்றுநடைபெற்றது.கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது பேசிய விவசாயிகள் பலரும் நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் மானியமாக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் கார்த்திகேயன், காலநிலை மாற்றத்தால் மழை பெய்யும் இடங்களில் வறட்சியாகவும், வறட்சியான இடங்களில் மழையும் பெய்து வருகிறது.

    குறிப்பாக சென்னையில் தற்போது காலம் மாறி மழை பொழிந்தது. நெல்லை மாவட்டத்தில் மழை இல்லை. இதனால் விவசாயிகளின் பாதிப்புகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு எடுத்துரைத்துக ்கப்பட்டுள்ளது, விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    தொடர்ந்து மானூர், கானார்பட்டியை சேர்ந்த விவசாய சங்க தலைவர் ஆபிரகாம் என்பவர் பேசுகையில், "நெல்லை மாவட்டத்தில் வனப்பகுதிக்கு அருகே உள்ள விவசாய நிலங்களில் மான்கள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. பல ஆண்டுகளாக மானை பிடிக்க குழு அமைப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இன்னும் எந்த குழுவும் அமைக்கவில்லை. எங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் தெரிவித்தார்.

    அப்போது கலெக்டர் கார்த்திகேயன் குறுக்கிட்டு, நீங்கள் உங்கள் உரிமையை தான் கேட்கிறீர்கள். நாங்கள் உங்களுக்கு வேலை செய்யும் அதிகாரிகள். விவசாயிகளுக்கு அதிகாரிகள் எதிரிகள் அல்ல என்று கூறினார்.

    • ரத்த தானம் வழங்கிய 50 பேருக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கி கலெக்டர் கார்த்திகேயன் பாராட்டினார்.
    • உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்துவமனையில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு இன்று மனிதச் சங்கலி நடைபெற்றது.

    இதில் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடுகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.

    பாராட்டு நிகழ்ச்சி

    தொடர்ந்து மருத்துவமனை வளாக கூட்ட அரங்கில் ஆண்டுக்கு 3 முறை ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 125 முறை ரத்த தானம் வழங்கிய டவுன் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் உட்பட 50 பேருக்கு சான்றித ழும், கேடயமும் வழங்கி கலெக்டர் கார்த்திகேயன் பாராட்டினார்.

    பின்னர் மருத்துவ மாணவ, மாணவிகள் உட்பட அனைவரும் ரத்த தானம் செய்வது தொடர் பாக உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    ரத்த வங்கி துறை எனக்கு பிடித்த துறை. காரணம் நான் மருத்துவம் படிக்கும் போது ஆப்சனல் பாடமாக ரத்த வங்கி துறையைத்தான் தேர்வு செய்தேன். அரிதான ரத்த பிரிவுகள் உட்பட இன்றைக்கு ரத்தம் இல்லா மல் ஒரு உயிரிழப்புகள் நிகழாது என்ற நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ளது. அதற்கு காரணம் ரத்த கொடையாளர்கள் தான்.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை தேவைக்கு அதிகமாகவே ரத்தம் கிடைக்கிறது. அதுவும் ரத்த கொடையாளர்கள் மூலமாகவே கிடைக்கிறது. மகப்பேறு கால உயிரிழப்புகளை தடுப்பதில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா உள்ளது. அதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது.

    மகப்பேறு காலத்தில் தாய், சேய் என இருவரையும் காப்பாற்றுவதில் ரத்த கொடையாளர்களின் பங்கும் முக்கியமானது. சமூக அக்கறையுடன் பலர் ரத்த தானம் செய்ய முன்வருவதால் உயிரிழப்பு களை படிபடியாக குறைத்து வருகிறோம்.

    இன்றைக்கு ரத்த தானம், கண் தானம் என வளர்ந்து இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடப்பதற்கு அடிப்படையே இந்த ரத்த தானம்தான். இதற்காக தமிழக மக்கள் ரத்ததான கொடையாளர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளா ர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வாழ்நாள் சாதனையாளர் விருது

    நிகழ்ச்சியின் போது நெல்லை அரசு மருத்துவ மனையின் ரத்த வங்கி துறை தலைவர் டாக்டர் மணிமாலாவிற்கு கலெக்டர் கார்த்திகேயன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினார்.

    அப்போது டாக்டர் மணிமாலா பேசுகையில், நெல்லை அரசு மருத்துவ மனையில் கடந்த 22 ஆண்டுகளில் ரத்தம் இல்லாமல் ஒரு உயிரிழ ப்புகள் கூட நிகழவில்லை. கடந்த ஆண்டு 10 ஆயிரத்து 38 யூனிட் ரத்தம் தானமாக சேகரிக்கப்பட்டது. இதன் மூலம் 23 ஆயிரத்து 500 பேர் காப்பாற்றப்ப ட்டுள்ளனர் என்றார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி உதவி முதல்வர் சுரேஷ் துரை, மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், நிலைய மருத்துவ அலுவலர் ஷியாம் சுந்தர் மற்றும் பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) லதா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் அமலவளன், திட்ட மேற்பார்வையாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகளுக்கு என்று மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
    • விடுதி மாணவ- மாணவிகளுக்கு உணவும், உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாணவர் விடுதி

    தமிழக அரசால் நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகளுக்கு என்று மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர் களுக்கு என்று 18 விடுதிகளும், பள்ளி மாணவிகளுக்கு என்று 15 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்கு என்று 3 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்கு என 3 விடுதிகள், முதுகலை பட்டப்படிப்பு மாணவர் களுக்கான ஒரு விடுதியும் செயல்பட்டு வருகின்றன.

    இந்த விடுதிகளில் 2023-2024-ம் ஆண்டில் புதிதாக மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ-மாணவிகள், கல்லூரியில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படிக்கும் மாணவ-மாண விகள் இந்த விடுதிகளில் சேரலாம். ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் 85 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10 சதவீதமும், இதர வகுப்பினர் 5 சதவீதமும் சேர்க்கப்படு கின்றனர்.

    அனைத்து விடுதி மாணவ- மாணவிகளுக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும். 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 4 செட் சீருடைகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் இலவசமாக வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி இலவசமாக வழங்கப்படும்.

    இலங்கை தமிழர்

    இந்த விடுதிகளில் மதிப்பெண் அடிப்படையில் மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும், மாணவர் வசிக்கும் இடத்திற்கும் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும். 5 கிலோமீட்டர் நிபந்தனை மாணவிகளுக்கு பொருந்தாது. ஒரு விடுதிக்கு தலா 5 நபர்கள் வீதம் அனைத்து விடுதிகளிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகள் சேர்க்கப் படுவார்கள்.

    தகுதி உடைய மாணவ-மாணவி கள் விண்ணப்ப ங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பாஸ்போர்ட் அளவு போட்டோ 3, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், மதிப்பெண் பட்டியல் நகல் நடத்தை சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்வி நிலைய தலைவரால் அளிக்கப்படும் படிப்பு சான்றிதழ் ஆகியவற்றுடன் பள்ளி விடுதிகளுக்கு நாளையும் (வியாழக்கிழமை), கல்லூரி விடுதிக்கு வருகிற 14-ந் தேதிக்குள்ளும் காப்பா ளரிடம் ஒப்படைத்துவிட்டு https://tnadw-hms.in என்ற இணைய தளத்தில் பதி வேற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேரன்மாதேவி தாலுகாவில் மேலச்செவல் குறுவட்டத்துக்கு 24, 25, 26-ந்தேதிகளில் ஜமாபந்தி நடைபெறுகிறது.
    • நெல்லை டி.ஆர்.ஓ. செந்தில்குமார் தீர்வாய அதிகாரியாக கலந்து கொள்கிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    பாளை-சேரன்மாதேவி

    பாளை தாலுகாவில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மற்றும் 25-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மேலப்பாட்டம் குறுவட்டத்து க்கான ஜமாபந்தி நடைபெறுகிறது. 26-ந்தேதி, 30-ந்தேதி முன்னீர்பள்ளம் குறுவட்டத்துக்கும், சிவந்தி ப்பட்டிக்கு 31-ந்தேதியும், பாளை குறுவட்டத்துக்கு 1-ந்தேதி, 2-ந்தேதி மற்றும் 6-ந்தேதி ஆகிய 3 நாட்கள் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் வருவாய் தீர்வாய அலுவலராக கலெக்டர் கார்த்திகேயன் (நான்) கலந்து கொள்கிறார்.

    இதேபோல் சேரன்மாதேவி தாலுகாவில் மேலச்செவல் குறுவட்டத்துக்கு 24, 25, 26-ந்தேதிகளிலும், முக்கூடல் குறுவட்டத்துக்கு 30-ந்தேதி, 31-ந்தேதி, பாப்பாக்குடி குறுவட்டத்துக்கு 31-ந்தேதி, சேரன்மாதேவி குறுவட்டத்து க்கு 1, 2-ந்தேதி ஆகிய நாட்கள் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் நெல்லை டி.ஆர்.ஓ. செந்தில்குமார் தீர்வாய அதி காரியாக கலந்து கொள்கிறார்.

    திசையன்விளை-நாங்குநேரி

    திசையன்விளை தாலுகாவில் விஜயநாராயணம் குறுவட்டத்துக்கு 24, 25-ந்தேதி, திசையன்விளை குறு வட்டத்துக்கு 25, 26-ந்தேதிகளில் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் வருவாய் தீர்வாய அதிகாரியாக சேரன்மாதேவி சப்- கலெக்டர் முகமது சமீர் ஆலம் பங்கேற்கிறார்.

    நாங்குநேரி தாலுகாவில் 24, 25-ந்தேதி களக்காடு குறுவட்டம், 26, 30, 31-ந்தேதி ஏர்வாடி, 31, 1-ந்தேதி பூலம், 1, 2-ந்தேதி மூலைக்கரைப்பட்டி, 2, 6, 7-ந்தேதி நாங்குநேரி குறுவட்டத்துக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் நெல்லை சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் விம ல்ராஜ் கலந்துகொள்கிறார்.

    ராதாபுரம்-மானூர்

    ராதாபுரம் தாலுகாவில் 24-ந்தேதி லெவிஞ்சிபுரம், 24, 25-ந்தேதி சமூகரெங்கபுரம், 25, 26-ந்தேதி பழவூர், 26, 30-ந்தேதி பணகுடி, 30-ந்தேதி வள்ளியூர், 31-ந்தேதி ராதாபுரம் குறுவட்ட பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் நெல்லை மாவட்ட ஒழுங்கு நடவடிக்கை ஆணை யர் சுகன்யா பங்கேற்கிறார். இந்த ஜமாபந்திகளில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தாசில்தார் தலைமையில் வருவாய்துறையினர் அடங்கிய குழுவினர் பள்ளிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    • தனியார் பள்ளிகளில் தற்போதே மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடு முறை அளிக்கப் பட்டுள்ளது.

    மீண்டும் பள்ளிகள் திறப்பு

    இந்நிலையில் வருகிற ஜூன் மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்கவும், வகுப்பறைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை துரித படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்வதற்காகவும், அவற்றை சீரமைத்து சான்று வழங்கிடவும் நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் செல்வராஜ் சமீபத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தாசில்தார்களுக்கு உத்தர விட்டார்.

    குழு ஆய்வு

    இதைதொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவிலும் தாசில்தார் தலைமையில் வருவாய்துறை யினர் அடங்கிய குழுவினர் பள்ளிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு பழுதடைந்த வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் இதர கட்டிடங்களை பள்ளி திறப்பதற்கு முன்பாக சரிசெய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளிலும், கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்து தீயணைப்புத்துறை அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் தாசில்தார்கள் மூலம் கூட்டுப் புலத்தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

    மாணவர் சேர்க்கை

    மேலும் ஜூன் மாதம் முதல் வாரம் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் தற்போதே மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க மும்முரம் காட்டி வருகின்றனர்.

    குறிப்பாக 6-ம் வகுப்பில் சேர்ப்பதற்காக அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் குவிந்து வருகின்றனர்.

    தகவல் தெரிவிக்கலாம்

    எனவே பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கச் செல்லும் பெற்றோர், அந்தப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் ஏதும் இருப்பதை கண்டறிந்தால் கலெக்டர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 'வணக்கம் நெல்லை கைப்பேசி எண் -97865 66111 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்கள் மனு அளிக்கலாம்.
    • பயனாளர் உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை (13-ந்தேதி) நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் கீழ்க்கண்ட சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் அளித்தல். குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்க செல்லும் பயனாளர் உரிய ஆவணங்களுக்குரிய ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும். கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட கைபேசியினை கொண்டு செல்ல வேண்டும்.

    மேற்படி முகாம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை எண். 9342471314-ல் தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் குறித்துஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • வழிகாட்டு ஆலோசனை சிறப்பு முகாம் வருகிற 29-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-

    ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 2023-24-ம் கல்வி ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் குறித்து தன்னார்வ இயக்கத்தால் தொழில் வழிகாட்டு ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் அனைத்து ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டு ஆலோசனைகள் வழங்க வண்ணார்பேட்டை எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெற்றது. இதேபோல் இந்த வழிகாட்டு ஆலோசனை சிறப்பு முகாம் வருகிற 29-ந் தேதியும் ( சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்து 601 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
    • 21 ஆயிரத்து 932 பயனாளிகளுக்கு தென்னங்கன்று உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பாளை ஜவஹர் திடல் அருகே உள்ள மாநகராட்சி பல்நோக்கு அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் இந்த வருடம் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்ட விவசாயிகள் நடப்பு பிசான பருவத்தில் பயன்பெறும் வகையில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 62 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க ப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்து 601 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 47 கோடியே 40 லட்சத்து 18 ஆயிரத்து 478 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்ப ட்டுள்ளது.

    மண்வளத்தை மேம்படு த்திட குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க 251 குளங்கள் தேர்வு செய்ய ப்பட்டு அறிவிப்பு வெளியிட ப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மாவட்டத்தில் 56 கிராம பஞ்சாயத்துகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ரூ. 62.02 லட்சம் மதிப்பில் 21 ஆயிரத்து 932 பயனாளி களுக்கு தென்னங்கன்று, விசை, தெளிப்பான், தார்பாய் உள்ளிட்டவை வழங்கப்ப ட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் ஓராண்டு சராசரி மழை அளவு 814.8 மில்லி மீட்டர் ஆகும். இந்தாண்டு ஏப்ரல் மாதம் வரை 181.5 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 71.88 மில்லிமீட்டர் மழையே பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறு ப்பு) சுகன்யா, வேளாண் இணை இயக்குநர் முருகா னந்தம், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (விவசாயம்) கிருஷ்ண குமார், தோட்ட க்கலை துறை துணை இயக்கு னர் பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 814.8 மில்லி மீட்டர் ஆகும்.
    • விவசாயிகள் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்து பயனடைய வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிசான பருவத்தில் நடவு செய்யப்பட்ட 24 ஆயிரத்து 409 ஹெக்டேர் நெல் சாகுபடி பரப்பில், 17,500 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி முடிந்துள்ளது.

    விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊக்கத்தொகையுடன் கூடிய ஆதார விலையாக முதல் ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,160-ம், சாதாரண வகை நெல்லுக்கு ரூ.2,115-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண் வளத்தை பெருக்கிட குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து தங்கள் நிலங்களுக்கு பயன்படுத்தும் பொருட்டு சென்ற ஆண்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் 251 குளங்கள் தேர்வு செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 56 கிராம பஞ்சாயத்துக்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு தென்னங் கன்றுகள், விசை தெளிப்பான் உள்ளிட்ட இடு பொருட்கள் ரூ.62 லட்சம் மதிப்பில் 21 ஆயிரத்து 932 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 814.8 மில்லி மீட்டர் ஆகும். இந்த மாதம் வரை பெற வேண்டிய மழை அளவு 121.7 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் இதுவரை 58.88 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. எனவே விவசாயிகள் குறைந்த நீரினை பயன்படுத்தி நீர் மேலாண்மை முறைகளான சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் ஆகிய உத்திகளை கையாண்டு சாகுபடி செய்ய வேண்டும்.

    இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதால் விவசாயிகள் தண்ணீர் குறைவாக பயன்படுத்தப்படும் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்து பயனடைய வேண்டும்.

    மாவட்டத்தில் 267 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளது. இங்கு இதுவரை 1,620 விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 39 மாதிரிகள் தரமற்றதாக தெரிய வந்துள்ளது.

    37 விதை விற்பனை உரிமையாளர்கள் மீது துறை நடவடிக்கையும், 2 விற்பனையாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விற்பனைக்கு வைக்கப்பட்ட 57.76 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.77.50 லட்சம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமார், சப்-கலெக்டர் சபிர் ஆலம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி பாளை தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
    • இதில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மொழி ஊக்குவிக்கப்படுகிறது என்றார்.

    நெல்லை:

    தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி பாளை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்த்தி கேயன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மொழி ஊக்குவிக்கப் படுகிறது. மாணவர்கள் இதனை பயன்படுத்தி தமிழ் மொழி வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் தங்களை கட்டமைத்து கொள்ளலாம். நெல்லை மாவட்டத்தில் இது 2-வது நிகழ்ச்சி. இங்கு மிக சிறந்த பேச்சாளர்கள் உள்ளார்கள். அவர்களது பேச்சை உள்வாங்கி நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

    தொடர்ந்து மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் வேலூர் புரட்சி 1806 குறித்தும், ஆறுமுக தமிழன் தமிழ் பண்பாடும், தொன்மையும் என்பது குறித்தும் பேசினார். கல்லூரி முதல்வர் உஷா வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியையொட்டி அங்கு கருத்தரங்கம், கைவினை கண்காட்சி அமைக்கப் பட்டிருந்தது. மாவட்ட நூலகம் சார்பில் புத்தக கண்காட்சியும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியும், வங்கிகளில் கடனுதவி பெறுவது எப்படி என்பது குறித்தும் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

    கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தயாரித்த கைவினை பொருட்கள் இடம் பெற்றிருந்தது.

    அதனை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து வ.உ.சி. மைதா னத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

    • கொண்டாநகரம் பகுதியில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப்பணிகளை கலெக்டர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.
    • நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி யூனியன் கொண்டாநகரம் பகுதியில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அதே பகுதியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டிட பணிகளையும், நடுக்கல்லூரில் இயங்கி வரும் வாழை நாரில் இருந்து கைவினைப்பொருட்கள் தயார் செய்யும் கூடத்தையும் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கொண்டா நகரம் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம், கோடகநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிர மணியம் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு வாழை பயிரிடப்பட்டு வருகிறது.
    • நாங்குநேரி அருகே ராஜாக்கள்மங்கலம் ஊராட்சியில் திருமதி வாழை நார் உற்பத்தி நிறுவனத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு வாழை பயிரிடப்பட்டு வருகிறது.

    வாழைக்குலை அறுவடை க்கு பின்னர் வீணாகும் வாழை மரத்தில் உள்ள வாழை நார் மூலம் அழகு சாதன பொருட்கள் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு பயிற்சி கொடுத்து அந்த பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் கோடகநல்லூர், சுத்தமல்லி, மானூர் ஆகிய பகுதிகளில் 190 மகளிர் பணிபுரியும் விதமாக 3 வாழை நார் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சுய உதவிக்குழுக்கள் வணிக நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை லாபம் ஈட்டி உள்ளது. இந்நிலையில் நாங்குநேரி அருகே ராஜாக்கள்மங்கலம் ஊராட்சியில் திருமதி வாழை நார் உற்பத்தி நிறுவனத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள 50 சுய உதவி குழு பெண்களுக்கு முதல் கட்டமாக 45 நாட்கள் பயிற்சி கொடுக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின் திருமதி வாழைநார் உற்பத்தி நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வாழை நார் அழகு பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டது.

    ×