search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் விடுதியில் மாணவர் சேர்க்கை- கலெக்டர் கார்த்திகேயன் தகவல்
    X

    கலெக்டர் கார்த்திகேயன்

    நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் விடுதியில் மாணவர் சேர்க்கை- கலெக்டர் கார்த்திகேயன் தகவல்

    • நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகளுக்கு என்று மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
    • விடுதி மாணவ- மாணவிகளுக்கு உணவும், உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாணவர் விடுதி

    தமிழக அரசால் நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகளுக்கு என்று மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர் களுக்கு என்று 18 விடுதிகளும், பள்ளி மாணவிகளுக்கு என்று 15 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்கு என்று 3 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்கு என 3 விடுதிகள், முதுகலை பட்டப்படிப்பு மாணவர் களுக்கான ஒரு விடுதியும் செயல்பட்டு வருகின்றன.

    இந்த விடுதிகளில் 2023-2024-ம் ஆண்டில் புதிதாக மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ-மாணவிகள், கல்லூரியில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படிக்கும் மாணவ-மாண விகள் இந்த விடுதிகளில் சேரலாம். ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் 85 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10 சதவீதமும், இதர வகுப்பினர் 5 சதவீதமும் சேர்க்கப்படு கின்றனர்.

    அனைத்து விடுதி மாணவ- மாணவிகளுக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும். 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 4 செட் சீருடைகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் இலவசமாக வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி இலவசமாக வழங்கப்படும்.

    இலங்கை தமிழர்

    இந்த விடுதிகளில் மதிப்பெண் அடிப்படையில் மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும், மாணவர் வசிக்கும் இடத்திற்கும் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும். 5 கிலோமீட்டர் நிபந்தனை மாணவிகளுக்கு பொருந்தாது. ஒரு விடுதிக்கு தலா 5 நபர்கள் வீதம் அனைத்து விடுதிகளிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகள் சேர்க்கப் படுவார்கள்.

    தகுதி உடைய மாணவ-மாணவி கள் விண்ணப்ப ங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பாஸ்போர்ட் அளவு போட்டோ 3, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், மதிப்பெண் பட்டியல் நகல் நடத்தை சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்வி நிலைய தலைவரால் அளிக்கப்படும் படிப்பு சான்றிதழ் ஆகியவற்றுடன் பள்ளி விடுதிகளுக்கு நாளையும் (வியாழக்கிழமை), கல்லூரி விடுதிக்கு வருகிற 14-ந் தேதிக்குள்ளும் காப்பா ளரிடம் ஒப்படைத்துவிட்டு https://tnadw-hms.in என்ற இணைய தளத்தில் பதி வேற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×