search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cleanliness"

    • பேரூராட்சிகளின் உதவி இயக்குனரக (பொறுப்பு) உதவி செயற் பொறியாளர். எம். கணேசன் கொடியசைத்து தொங்கி வைத்தார்.
    • மேலும் அந்தியூர் காமராஜ் சாலையில் மயான பகுதிக்கு செல்லும் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் பஸ் நிலையம் அருகில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில்பகுதியில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய பசுமைப் படையினர், அல்ட்ரா டெக் தன்னார்வல அமைப்பினர், மக்கள் மகிழ் அறக்கட்டளை, அரிமா சங்கத்தினர் ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    பேரூராட்சிகளின் உதவி இயக்குனரக (பொறுப்பு) உதவி செயற் பொறியாளர். எம். கணேசன் கொடியசைத்து தொங்கி வைத்தார். அந்தியூர்பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் வரவேற்று நீர்நிலைகள் பாதுகாப்பு, மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நகரங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

    பின்பு விழிப்புணர்வு பேரணி அந்தியூர் அத்தாணி சாலை, சிங்கார வீதி, தேர்வீதி, ஜி.எச். கார்ணர், பர்கூர் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பத்ரகாளியம்மன் கோவில் அருகே நிறைவடைந்தது. மேலும் அந்தியூர் காமராஜ் சாலையில் மயான பகுதிக்கு செல்லும் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பாண்டி யம்மாள் மாதேஷ், துணைத்தலைவர் பழனி சாமி, துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, செந்தில், பொறியாளர்கள் சோம சுந்தரம், முருகேசன் மற்றும் சாந்து முகமது, தினேஷ், அல்ட்ரா தொண்டு நிறுவன தலைவர் தண்டாயுதபாணி, மக்கள் மகிழ் அறக்கட்டளை தலைவர் ராஜன்.எம்.பொன்னு சாமி, ராமகிரு ஷ்ணன் தூய்மை பணியா ளர்கள் அலுவலகப் பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழா நடந்தது.
    • முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மேரி அனைவரையும் வரவேற்றார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் ஆணையர் அறிவுரையின்படியும், சிவகங்கை மண்டல உதவி இயக்குநர் அறிவுறுத்தலின் படியும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழா நடைபெற்றது.

    இதில் திடக்கழிவு மேலாண்மை குறித்து மீனாட்சி ஆச்சி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ரமேஷ்பாபு, பேரூராட்சி தலைவர் ராதிகா ராமச்சந்திரன், வார்டு உறுப்பினர் அன்புக்கரசி மற்றும் பாண்டிச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மேரி அனைவரையும் வரவேற்றார். முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
    • நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்படுவது பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி சார்பில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

    பேரணிக்கு உடுமலை நகராட்சி தலைவர் மு.மத்தின் தலைமை வகித்தார். ஆணையர் சத்தியநாதன் முன்னிலை வகித்தார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். பாரதியார் நூற்றாண்டு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணி மாணிக்கம் வீதி வித்யாசாகர் கல்லூரி ராஜேந்திரா சாலை வழியாக நுண்ணுயிர் உரக்கிடங்கை அடைந்தது. அங்கு நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்படுவது பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் நகர் அலுவலர் கௌரி கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், ஆறுமுகம், ராஜ்மோகன், விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை சுற்றுலா பிரச்சார ஊர்தியை மாநகராட்சி மேயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 100 மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சிப் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற தூய்மை சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு முதல் நிகழ்ச்சியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைக்கான உறுதிமொழி கலெக்டர் கார்மேகம் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை சுற்றுலா பிரச்சார ஊர்தியை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் , துணை மேயர் சாரதா தேவி, மண்டல க்குழுத்தலைவர்கள் எஸ்.டி. கலையமுதன், அசோகன், மாநகர பொறியாளர் ரவி, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும், மூங்கப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோகுல்நாத் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 100 மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து தூய்மை சுற்றுலா மேற்கொள்ளும் வகையில் 4 மண்டலங்களுக்கு தனிதனியாக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் 25 மாணவ- மாணவியர்களை கலந்து கொள்ள செய்து, குப்பைகளை பிரிக்கும் செயல்முறை பணிகளையும், வீடு வீடாக பிரித்த நிலையில் குப்பைகளை பெறும் பணிகளையும், நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று நேரடியாக மாணவ- மாணவியர்களுக்கு தூய்மை குறித்தும், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரிப்பது குறித்தும், குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் முறைக்குறித்தும் நேரடியாக எடுத்துரைக்கப்பட்டது.

    இதையடுத்து அஸ்தம்பட்டி மண்டலம் சங்கர் நகர் பகுதியில் வீடு வீடாக பிரித்த நிலையில் குப்பைகளை பார்வையிடும் நிகழ்ச்சி, காக்காயன்காடு நுண் உயிரி உரம் தயாரிக்கும் நிலையம் பார்வையிடும் நிகழ்ச்சியில் மூங்கப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 25 மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • வாரந்தோறும் சனிக்கிழமை தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம், என் குப்பை - என் பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது
    • மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம், காணொலி வாயிலாக நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில் வாரந்தோறும் சனிக்கிழமை தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம், என் குப்பை - என் பொறுப்பு என்ற தலைப்பில் பல்வேறு வகையில் தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த இயக்கத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம், காணொலி வாயிலாக நடைபெற்றது.

    முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட மற்றும் வட்டக்கல்வி அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இதில் அறிவுறுத்தப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:-

    பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக என் குப்பை என் பொறுப்பு என்ற உறுதிமொழி ஏற்பு நடத்த வேண்டும். தூய்மை இயக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது தொடர்பான தலைப்பு களில் போட்டிகள் நடத்த வேண்டும்.பள்ளி வளாகம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறத்தின் தூய்மை பாதுகாக்கும் வகையில் மாணவர்கள் செயல்பட அறிவுறுத்த வேண்டும். தூய்மை இயக்கம் குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நடத்த மாநகராட்சி சுகாதார பிரிவினர் தயாராக உள்ளனர். கல்வி நிறுவனங்கள் அதைப் பயன்படுத்தி, மாணவர்கள் மத்தியில் இந்த இயக்கத்தை வெற்றிகரமாக கொண்டு சேர்க்க ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    • அலங்காநல்லூர், பாலமேடு அரசு பள்ளிகளில் தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • பேரூராட்சியில் உள்ள 15 வார்டு பணியாளர்கள் ஊர்வலமாக சென்று பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் கூட்டங்களில் கலந்து கொண்டு பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரித்து வழங்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டனர்.

    மேலும் இது தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து "என் குப்பை எண் பொறுப்பு" தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, துணை தலைவர் சுவாமிநாதன், செயல் அலுவலர் ஜீலான் பானு மற்றும் கவுன்சிலர்கள், உடற்கல்வி ஆசிரியர் காட்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பாலமேடு பேரூராட்சி சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு தலைவர் மனோகரவேல் பாண்டியன், யூனியன் ஆணையாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர். தூய்மை மேற்பார்வையாளர் முத்தழகு வரவேற்றார். பேரூராட்சியில் உள்ள 15 வார்டு பணியாளர்கள் ஊர்வலமாக சென்று பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • குப்பைகளை தரம் பிரித்து செயல்முறை விளக்கம் மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • நகர்மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் "என் குப்பை என் பொறுப்பு" சார்பில் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தல் நிகழ்ச்சியானது பொது சுகாதாரப்பிரிவு-II ஐஸ்வர்யா நகர்(ஆர் சி லே அவுட்) பகுதியில் நகராட்சி ஆணையாளர் ப.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.

    சுகாதார ஆய்வாளர் ராஜமோகன் , பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து செயல்முறை விளக்கம் மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். 

    • தூய்மை குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சி வார்டு வாரியாக நடந்தது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி புதன்கிழமை தோறும் உலர் கழிவுகளை மட்டும் தனியாக பிரித்து வாங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் வீடுகளில் தினசரி சேகரமாகும் குப்பை கழிவுகளை மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இந்த நிகழ்ச்சி வார்டு வாரியாக நடந்தது.

    ஆணையாளர்அசோக் குமார் தலைமையில் ெபாதுமக்களுக்கு தூய்மை குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. பின்னர் ''என் குப்பை என் பொறுப்பு'' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

    ×