search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகரங்களில்"

    • பேரூராட்சிகளின் உதவி இயக்குனரக (பொறுப்பு) உதவி செயற் பொறியாளர். எம். கணேசன் கொடியசைத்து தொங்கி வைத்தார்.
    • மேலும் அந்தியூர் காமராஜ் சாலையில் மயான பகுதிக்கு செல்லும் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் பஸ் நிலையம் அருகில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில்பகுதியில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய பசுமைப் படையினர், அல்ட்ரா டெக் தன்னார்வல அமைப்பினர், மக்கள் மகிழ் அறக்கட்டளை, அரிமா சங்கத்தினர் ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    பேரூராட்சிகளின் உதவி இயக்குனரக (பொறுப்பு) உதவி செயற் பொறியாளர். எம். கணேசன் கொடியசைத்து தொங்கி வைத்தார். அந்தியூர்பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் வரவேற்று நீர்நிலைகள் பாதுகாப்பு, மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நகரங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

    பின்பு விழிப்புணர்வு பேரணி அந்தியூர் அத்தாணி சாலை, சிங்கார வீதி, தேர்வீதி, ஜி.எச். கார்ணர், பர்கூர் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பத்ரகாளியம்மன் கோவில் அருகே நிறைவடைந்தது. மேலும் அந்தியூர் காமராஜ் சாலையில் மயான பகுதிக்கு செல்லும் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பாண்டி யம்மாள் மாதேஷ், துணைத்தலைவர் பழனி சாமி, துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, செந்தில், பொறியாளர்கள் சோம சுந்தரம், முருகேசன் மற்றும் சாந்து முகமது, தினேஷ், அல்ட்ரா தொண்டு நிறுவன தலைவர் தண்டாயுதபாணி, மக்கள் மகிழ் அறக்கட்டளை தலைவர் ராஜன்.எம்.பொன்னு சாமி, ராமகிரு ஷ்ணன் தூய்மை பணியா ளர்கள் அலுவலகப் பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×