search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மைக்கான"

    • செல்வகுமார் தலைமையில் ,தூய்மை பணியாளர்களைக் கொண்டு,சுத்தம் செய்யப்பட்டது
    • சிவசக்தி நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    அந்தியூர், ஜூன்.12-

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த 18 வார்டுகளிலும்,தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கி ஒரு ஆண்டு நிறை வடைந்து உள்ளது.

    இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவின்படி பொதுமக்களிடம் சுகாதாரம், தூய்மை, திடக்கழிவு மேலாண்மை பிரித்து வழங்கல் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை பொது மக்களிடத்தில் விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை செய்யப்பட்டது.

    மேலும், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, தவிட்டுப்பா ளையம் பூக்கடை கார்னர் பகுதி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குப்பைகளையும் அனுமதியின்றி அந்தியூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர்களையும் அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் ,தூய்மை பணியா ளர்களைக் கொண்டு,சுத்தம் செய்யப்பட்டது. அந்தியூர் பஸ் நிலையத்தில், பொது மக்கள் மத்தியில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

    மேலும் சிவசக்தி நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.சிறந்த முறையில் தூய்மைப் பணி செய்த தூய்மை பணியா ளர்கள் அனைவருக்கும் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ், துணைத் தலைவர் பழனி ச்சாமி ஆகியோர் நினைவு பரிசுகள் வழங்கி ஊக்கி வித்தனர்.

    இதில் துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி,செந்தில் முதுநிலை எழுத்தர் தாமரை அலுவலக பணியாளர் சாந்து முகமது, தங்கராசு, அரிமா தனபாலன், உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன், கவுன்சிலர்கள், தன்னல ஆர்வலர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் தேர்வுநிலை பேரூராட்சியில் வாரந்தோறும் நடைபெற்று வரும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்தல், டெங்கு ஒழப்பு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது

    பரமத்தி வேலூர்:

    சென்னை பேரூராட்சி களின் இயக்குநரின் அறி வுரைகளின்படி, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் தேர்வுநிலை பேரூராட்சியில் வாரந்தோறும் நடைபெற்று வரும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், நம்ம ஊரு சூப்பரு திட்டங்களின்படி பொத்தனூர் பேரூ ராட்சிக்குட்பட்ட 13,14 வார்டு பகுதிகளில் பேரூ ராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில், செயல் அலுவலர் கணேசன் முன்னிலையில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், அலுவலக பணியாளர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள், அனைத்து தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் உட்பட 80-க்கும்

    மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பொது சுகாதாரப்பணிகளான, செடி,கொடி,முட்புதர்கள் அகற்றுதல், மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெருமின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மரக்கன்றுகள் நடுதல், சுவரொட்டிகள் அகற்றுதல், விளம்பர பதாகைகள் அகற்றுதல், பொது மக்களுக்கு குப்பைகள் தரம் பிரித்து வழங்குதல் போன்ற பணிகளும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்தல், டெங்கு ஒழப்பு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது

    • பேரூராட்சிகளின் உதவி இயக்குனரக (பொறுப்பு) உதவி செயற் பொறியாளர். எம். கணேசன் கொடியசைத்து தொங்கி வைத்தார்.
    • மேலும் அந்தியூர் காமராஜ் சாலையில் மயான பகுதிக்கு செல்லும் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் பஸ் நிலையம் அருகில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில்பகுதியில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய பசுமைப் படையினர், அல்ட்ரா டெக் தன்னார்வல அமைப்பினர், மக்கள் மகிழ் அறக்கட்டளை, அரிமா சங்கத்தினர் ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    பேரூராட்சிகளின் உதவி இயக்குனரக (பொறுப்பு) உதவி செயற் பொறியாளர். எம். கணேசன் கொடியசைத்து தொங்கி வைத்தார். அந்தியூர்பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் வரவேற்று நீர்நிலைகள் பாதுகாப்பு, மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நகரங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

    பின்பு விழிப்புணர்வு பேரணி அந்தியூர் அத்தாணி சாலை, சிங்கார வீதி, தேர்வீதி, ஜி.எச். கார்ணர், பர்கூர் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பத்ரகாளியம்மன் கோவில் அருகே நிறைவடைந்தது. மேலும் அந்தியூர் காமராஜ் சாலையில் மயான பகுதிக்கு செல்லும் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பாண்டி யம்மாள் மாதேஷ், துணைத்தலைவர் பழனி சாமி, துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, செந்தில், பொறியாளர்கள் சோம சுந்தரம், முருகேசன் மற்றும் சாந்து முகமது, தினேஷ், அல்ட்ரா தொண்டு நிறுவன தலைவர் தண்டாயுதபாணி, மக்கள் மகிழ் அறக்கட்டளை தலைவர் ராஜன்.எம்.பொன்னு சாமி, ராமகிரு ஷ்ணன் தூய்மை பணியா ளர்கள் அலுவலகப் பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×