அந்தியூர் பேரூராட்சியில் தூய்மைக்கான இயக்கம் விழிப்புணர்வு

செல்வகுமார் தலைமையில் ,தூய்மை பணியாளர்களைக் கொண்டு,சுத்தம் செய்யப்பட்டதுசிவசக்தி நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
அந்தியூர் பேரூராட்சியில் தூய்மைக்கான இயக்கம் விழிப்புணர்வு
Published on

அந்தியூர், ஜூன்.12-

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த 18 வார்டுகளிலும்,தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கி ஒரு ஆண்டு நிறை வடைந்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவின்படி பொதுமக்களிடம் சுகாதாரம், தூய்மை, திடக்கழிவு மேலாண்மை பிரித்து வழங்கல் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை பொது மக்களிடத்தில் விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை செய்யப்பட்டது.

மேலும், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, தவிட்டுப்பா ளையம் பூக்கடை கார்னர் பகுதி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குப்பைகளையும் அனுமதியின்றி அந்தியூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர்களையும் அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் ,தூய்மை பணியா ளர்களைக் கொண்டு,சுத்தம் செய்யப்பட்டது. அந்தியூர் பஸ் நிலையத்தில், பொது மக்கள் மத்தியில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

மேலும் சிவசக்தி நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.சிறந்த முறையில் தூய்மைப் பணி செய்த தூய்மை பணியா ளர்கள் அனைவருக்கும் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ், துணைத் தலைவர் பழனி ச்சாமி ஆகியோர் நினைவு பரிசுகள் வழங்கி ஊக்கி வித்தனர்.

இதில் துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி,செந்தில் முதுநிலை எழுத்தர் தாமரை அலுவலக பணியாளர் சாந்து முகமது, தங்கராசு, அரிமா தனபாலன், உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன், கவுன்சிலர்கள், தன்னல ஆர்வலர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com