search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழா
    X

    தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழா

    • தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழா நடந்தது.
    • முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மேரி அனைவரையும் வரவேற்றார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் ஆணையர் அறிவுரையின்படியும், சிவகங்கை மண்டல உதவி இயக்குநர் அறிவுறுத்தலின் படியும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழா நடைபெற்றது.

    இதில் திடக்கழிவு மேலாண்மை குறித்து மீனாட்சி ஆச்சி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ரமேஷ்பாபு, பேரூராட்சி தலைவர் ராதிகா ராமச்சந்திரன், வார்டு உறுப்பினர் அன்புக்கரசி மற்றும் பாண்டிச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மேரி அனைவரையும் வரவேற்றார். முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×