search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து செயல்முறை விளக்கம் நடைபெற்ற காட்சி

    உடுமலையில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • குப்பைகளை தரம் பிரித்து செயல்முறை விளக்கம் மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • நகர்மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் "என் குப்பை என் பொறுப்பு" சார்பில் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தல் நிகழ்ச்சியானது பொது சுகாதாரப்பிரிவு-II ஐஸ்வர்யா நகர்(ஆர் சி லே அவுட்) பகுதியில் நகராட்சி ஆணையாளர் ப.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.

    சுகாதார ஆய்வாளர் ராஜமோகன் , பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து செயல்முறை விளக்கம் மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×