search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை குறித்த துண்டு பிரசுரம் விநியோகம்
    X

    தூய்மை குறித்த துண்டு பிரசுரம் விநியோகம்

    • தூய்மை குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சி வார்டு வாரியாக நடந்தது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி புதன்கிழமை தோறும் உலர் கழிவுகளை மட்டும் தனியாக பிரித்து வாங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் வீடுகளில் தினசரி சேகரமாகும் குப்பை கழிவுகளை மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இந்த நிகழ்ச்சி வார்டு வாரியாக நடந்தது.

    ஆணையாளர்அசோக் குமார் தலைமையில் ெபாதுமக்களுக்கு தூய்மை குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. பின்னர் ''என் குப்பை என் பொறுப்பு'' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×