search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleaning work"

    • சீனியப்பன் திருத்து பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.
    • கழிவு நீர் ஓடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாக துணை மேயருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் பகுதிக்கு உட்பட்ட 1-வது வார்டு சீனியப்பன் திருத்து பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. அப்போது தோண்டிய மணல்கள் கழிவு நீர் ஓடையில் விழுந்து அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி பொது மக்கள் துணை மேயர் கே.ஆர்.ராஜுக்கு கோரிக்கை வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து துணை மேயர், மாநகராட்சி கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்று கூட்டு துப்புரவு பணி செய்து உடனடியாக பணியை முடிக்க உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் துப்புரவு பணி ஆய்வாளர் ஜானகிராமன், மேஸ்திரி முருகன் உள்ளிட்ட துப்புரவு பணியாளர்கள் 25 பேர் கொண்ட குழுவினர் உடனடியாக பணியை தொடங்கி சரி செய்தனர். 

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 கிராமங்களுக்கு தூய்மை பணிக்காக 41 மின்கலன் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி, செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் பாபு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு ரூ.1.16 கோடி மதிப்புள்ள 41 மின்கலன் வாகனங்களை 30 கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் தூய்மைப் பணிக்காக வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், ஜே. கே. சீனிவாசன், திராவிட முருகன், தினகரன், தொண்டரணி செயலாளர் ராம் ரவி, ஒப்பந்ததாரர் கோபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து ஒ.ஜோதி எம்எல்ஏ செங்குட்டான் பகுதியில் அங்கன்வாடி கட்டிடத்தையும், அனக்காவூர்ஒன்றியம் பெண் இலுப்பை கிராமத்தில் அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார்.

    • 4 ரத வீதிகளிலும் சாலைகளில் இருந்த மணல் குவியல்கள் வெட்டி எடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
    • பேட்டையில் தொடங்கி கேடிசி நகர் பாலம் வரையிலும் மாபெரும் சாலை தூய்மை பணி நடைபெற உள்ளது

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் வருகிற 8, 9 மற்றும் 10-ந்தேதிகளில் சாலை தூய்மை பணியை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் நெல்லை மாநகர பகுதிக்கு உட்பட்ட நெல்லை, பாளை, தச்சநல்லூர் மற்றும் மேலப்பாளையம் மண்டலங்களில் மாபெரும் சாலை தூய்மை பணி நடைபெற உள்ளது.

    இதற்கு முன்னோட்டமாக நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ள 4 ரத வீதிகளிலும் டவுன் மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் சாலையை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. 4 ரத வீதிகளிலும் சாலைகளில் இருந்த மணல் குவியல்கள் வெட்டி எடுக்கப்பட்டு பேட்டரி வண்டி மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

    இதன் காரணமாக அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக காற்றின் வேகத்தால் தூசி பறந்து வாகன ஓட்டிகள் அவதி அடைந்த நிலை மாறியது.

    தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு அமைந்துள்ள வாறுகாலில் சாக்கடை கழிவு தேங்கி மாவட்ட கல்வி அலுவலகத்திற்குள் செல்லும் நிலை இருந்தது. உடனடியாக மாநகராட்சி பணியாளர்கள் அங்கு விரைந்து சென்று அடைப்பை சரி செய்தனர். வரும் நாட்களில் பேட்டை பகுதியில் ஆரம்பித்து கேடிசி நகர் பாலம் வரையிலும் மாபெரும் சாலை தூய்மை பணி நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • தென்திருப்பேரைக்கு திருவிழா காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
    • தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் மெகா தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்.

    தென்திருப்பேரை:

    ஆன்மீக சிறப்பு வாய்ந்த தென்திருப் ேபரையில் நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான மகர நெடுங்குழைக்காதர் கோவி லும், நவகைலாயங்களில் ஒன்றான சிவன் கோவிலும் உள்ளது. தென்திருப் பேரைக்கு திருவிழா காலங்களில் பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், பேரூராட்சி உதவி இயக்குனர் கண்ணன் ஆகியோரது உத்தரவின் பேரில், தென்திருப்பேரை பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி குப்பை இல்லா நகரத்தை உருவாக்குவதற்காக, 'என் குப்பை என் பொறுப்பு' என்ற அடிப்படை யில் வீடு தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தென்திருப்பேரை யில் நேற்று ஒட்டுமொத்த மெகா தூய்மை பணி நடைபெற்றது. தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் மெகா தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்.

    ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம் ஆகிய 3 பேரூராட்சி அலுவல கங்களில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தென் திருப்பேரை தூய்மை பணி யாளர்களுடன் இணைந்து மெகா தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    தென்திருப்பேரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு, பேரூராட்சி உறுப்பினர்கள் ஆனந்த், சண்முக சுந்தரம், கொடி, மாரியம்மாள், இளநிலை அலுவலர் சேக் அகமது மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு மெகா தூய்மை பணியில் பொதுமக்களிடம் குப்பை இல்லா நகரை உருவாக்கி சுகாதாரத்தை பேணிக் காப்போம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • சாயர்புரம் தேர்வுநிலை பேரூராட்சியில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாம் 10-வது வார்டு புளியநகரில் நடைபெற்றது.
    • புளிய நகர் வார்டு முழுவதும் கொசு மருந்துகள் வீடுவீடாக தெளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் தேர்வுநிலை பேரூராட்சியில் சிறப்பு ஒட்டு மொத்த தீவிர தூய்மை பணி முகாம் 10-வது வார்டு புளியநகரில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.சாயர்புரம் தி.மு.க. செயலாளர் கண்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்து கொண்ட அனைவரும் எனது குப்பை எனது பொறுப்பு, எனது சுத்தமான கிராமம் எனது பெருமை என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    முகாமில் புளிய நகர் வார்டு முழுவதும் கொசு மருந்துகள் வீடுவீடாக தெளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளும் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்த உள்ளது. இதில் சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் முத்துராஜ், சாயர்புரம், நாசரேத், ஏரல் பேரூராட்சி ஊழியர்கள், பரப்புரை யாளர்கள் ஜெயா, பெனிட்டா மேரி மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சாயர்புரம் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் செய்து இருந்தார்.

    • சி.பி.எம். மாநில குழு உறுப்பினர் எச்சரிக்கை
    • இந்த பகுதியில் தேங்கி இருக்கும் குப்பைகளை உள்ளாட்சி நிர்வாகம் அகற்றி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபால பட்டினம் அவுலியா நகரில் 250க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் மீனவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சாக்கடைகள், சகதிகள் தேங்கி கிடக்கின்றன. இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு பல நோய்கள் உருவாக கூடிய வகையில் அவலமான நிலை இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் அப்பகுதி மக்களுடன் பார்வையிட்டார். இது குறித்து அவர் கூறும்போது, குழந்தைகள், பெரியவர்களை பாதிக்ககூடிய வகையில் இந்த பகுதியில் தேங்கி இருக்கும் சாக்கடை, சகதி மற்றும் குப்பைகளை உள்ளாட்சி நிர்வாகம் அகற்றி இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். துாய்மை பணி மேற்கொள்ளா விட்டால், இங்கு வாழும் மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கட்சி மிக பெரிய மறியல் போராட்டம் நடத்தும் என்றுஅவர் கூறினார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சங்கர் ஒன்றிய செயலாளர் நெருப்பு முருகேசன் ஒன்றிய குழு உறுப்பினர்கள். எம்.எஸ் கலந்தர், அமீர் ஆகியோர் உடன் இருந்தனர்.


    • என்.சி.சி. 10-வது பட்டாலியன் சார்பில் நடந்தது
    • 100 பேர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    பிரதமர் தொடங்கிய "புனித் சாகர் அப்யான்" திட்டப்படி காட்பாடி காந்திநகர் 10-வது பட்டாலியனின் என்சிசி மாணவர்கள் பாலாற்றில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுப் பொருட்களை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

    என்சிசி 10-வது பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய் ஷர்மா தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் எஸ். கே. சுந்தரம், என்சிசி மக்கள் தொடர்பு அலுவலர் க. ராஜா, என்சிசி அலுவலர்கள் லெப்டினன்ட் காயத்திரி, லெப்டினன்ட் ஷைனி, லெப்டினன்ட் பரசுராமன், சுபேதார் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சுபேதார் தினேஷ்சிங், ராணுவ வீரர்கள் அவில்தார்கள் வெங்கடேசன், தீபு, துரைமுருகன், ரஞ்சித், சுனில்தத் உள்பட பலர் பாலாறு சுத்தம் செய்யும் பணியை ஒருங்கிணைத்தனர்.

    வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, தனபாக்கியம் மகளிர் கல்லூரி, ஊரீஸ் கல்லூரி மற்றும் ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த என்சிசி மாணவ, மாணவிகள் 100 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலா சுத்தம் செய்தனர்.

    • அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படையினர், புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் ராசிபுரம் ஏரிக்கு அருகே கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
    • இப்பணிகள் கல்லூரி யின் என்.சி.சி அதிகாரி மேஜர் சிவகுமார் முன்னிலையில் நடைபெற்றது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படையினர், புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் ராசிபுரம் ஏரிக்கு அருகே கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். இப்பணிகள் கல்லூரியின் என்.சி.சி அதிகாரி மேஜர் சிவகுமார் முன்னிலையில் நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சித் தலைவர் கவிதா சங்கர், நகராட்சி துப்புரவு பணியாளர்களை அனுப்பி வைத்து நீர் நிலைகளில் உள்ள குப்பைகளை அகற்ற உதவி செய்தார். இந்த நிகழ்ச்சியில் ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் முத்தமிழன் மற்றும் 40 தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர்.

    • எஸ்.எஸ்.எம்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்தனர்.
    • மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டு சுகாதாரம் பற்றிய அறிவுரைகளை வழங்கினர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணா தலைமையில், எஸ்.எஸ்.எம்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியினை மேற் கொண்டனர்.

    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முருகன் பணியினை தொடங்கி வைத்தார். மருத்துவமனை ஊழியர்கள் பலவேசம் மூக்கன், செவிலியர்கள் கண்காணிப்பாளர் மலர்விழி, செவிலியர்கள் ராணி, அப்பாஸ் மீரான் மருந்தாளுநர் ஆகியோர் கலந்து கொண்டு சுகாதாரம் பற்றிய அறிவுரைகளை வழங்கினர்.

    • திருப்பூர் மாநகராட்சியின் பகுதிகளில் கூட்டுத் தூய்மைப் பணி நடைபெற உள்ளது.
    • பொது மக்கள் அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி, திருப்பூர் மாநகராட்சி தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் என்னும் தலைப்பில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி நாளை 12.11.2022 அன்று திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம் 1ல் உள்ள அவினாசி சாலை, மண்டலம் 2ல் உள்ள பெருமாநல்லூர் சாலை, மண்டலம் 3ல் உள்ள பழைய பேருந்து நிலையம் மற்றும் காமராஜ் சாலை,மண்டலம் 4ல் உள்ள பல்லடம் சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியபகுதிகளில் கூட்டுத் தூய்மைப் பணி நடைபெற உள்ளது.

    மேலும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள மற்றும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகள் ,விளம்பரப் பலகைகள் மற்றும் அவற்றை வைப்பதற்காக அமைக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் உள்ள பழைய கட்டமைப்புகள், சிதிலமடைந்த சாலைகள் தெருக்களின் பெயர்ப் பலகைகள், சாலைகளின் ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இயக்க இயலா நிலையில் உள்ள வாகனங்கள் மற்றும் இதர கழிவுகள் ஆகியவற்றை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே பொது மக்கள் அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார். 

    • நாட்டு நலப்பணி முகாம் நடந்தது
    • மாணவிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    தமிழ்நாட்டில் மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு உயர்நிலை பள்ளிகள் 2 அமைந்துள்ளது.

    ஏலகிரி மலை மாணவ மாணவிகள், ஜவ்வாது மலை பகுதிகளில் இருந்தும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் இப்பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் நாட்டு நலப்பணி முகாம் கடந்த 3-ந்தேதி உயர்நிலை பள்ளிகளில் நாட்டு நல திட்ட பணிகள் துவங்கப்பட்டது.

    இந்த நாட்டு நலப்பணி திட்ட முகாம் 7 நாட்கள் நடைபெற உள்ளது. நாட்டு நலப்பணி திட்ட தூய்மை பணி, அத்தனாவூர் பகுதிகளில் மாரியம்மன் கோவில், பள்ளிகளில் அருகிலுள்ள நெடுஞ்சாலை பகுதிகளிலும், பெருமாள் கோவில் சாலைகளிலும் தூய்மை பணி, சாலை மேம்படுத்துதல், போன்ற பணிகள் நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் விக்டோரியா அருள் ராணி, அருள் ஆரோக்கிய, நாட்டு நலப்பணி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பாபு, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

    • தூய்மை பாரதம் திட்டம் மூலம் நகரின் பல பகுதிகளில் தூய்மை பணிகளை, மாவட்டத் தலைவர் மோகன் ராஜ் தொடங்கி வைத்தார்.
    • மகாத்மா காந்தி ஜெயந்தி விழா உதகை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிக சிறப்பாக நடைபெற்றது

    ஊட்டி

    மகாத்மா காந்தி ஜெயந்தி விழா உதகை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிக சிறப்பாக நடைபெற்றது

    காந்திஜெயந்தியை முன்னிட்டு, ஊட்டி சேரிஙகிராஸ் பகுதியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கதர் துணியின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் காதிகிராப்ட் சென்று நிர்வாகிகள் அனைவருக்கும், காதி துணி வாங்கிக் கொடுத்தார்.

    தொடர்ந்து தூய்மை பாரதம் திட்டம் மூலம் நகரின் பல பகுதிகளில் தூய்மை பணிகளை, மாவட்டத் தலைவர் மோகன் ராஜ் தொடங்கி வைத்தார்.

    இதில் மண்டல் தலைவர் பிரவீன்,பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், ராஜேந்திரன், கார்த்திக், துணைத்தலைவர்கள் சுதாகர், ஹரி கிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் பிரேமி யோகன், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் அனிதா கிருஷ்ணன் ,மாவட்ட கூட்டுறவு துறை செயலாளர் விசாலி, மாவட்ட முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் கண்ணன், நகர செயலாளர் ராகேஷ். தடவியல் துறை மாவட்டத் தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்,

    ×