search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துாய்மை பணி"

    • சி.பி.எம். மாநில குழு உறுப்பினர் எச்சரிக்கை
    • இந்த பகுதியில் தேங்கி இருக்கும் குப்பைகளை உள்ளாட்சி நிர்வாகம் அகற்றி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபால பட்டினம் அவுலியா நகரில் 250க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் மீனவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சாக்கடைகள், சகதிகள் தேங்கி கிடக்கின்றன. இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு பல நோய்கள் உருவாக கூடிய வகையில் அவலமான நிலை இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் அப்பகுதி மக்களுடன் பார்வையிட்டார். இது குறித்து அவர் கூறும்போது, குழந்தைகள், பெரியவர்களை பாதிக்ககூடிய வகையில் இந்த பகுதியில் தேங்கி இருக்கும் சாக்கடை, சகதி மற்றும் குப்பைகளை உள்ளாட்சி நிர்வாகம் அகற்றி இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். துாய்மை பணி மேற்கொள்ளா விட்டால், இங்கு வாழும் மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கட்சி மிக பெரிய மறியல் போராட்டம் நடத்தும் என்றுஅவர் கூறினார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சங்கர் ஒன்றிய செயலாளர் நெருப்பு முருகேசன் ஒன்றிய குழு உறுப்பினர்கள். எம்.எஸ் கலந்தர், அமீர் ஆகியோர் உடன் இருந்தனர்.


    ×