search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai super kings"

    • இந்த ஐபிஎல் சீசனில் மீண்டும் பினிஷராக உருவெடுத்துள்ளார் டோனி
    • டோனியின் பேட்டிங் உத்வேகத்தை கொடுக்கிறதல்லவா? இந்த வருடம் வலைப்பயிற்சியில் கூட அவருடைய பேட்டிங் மிகவும் துல்லியமாக இருக்கிறது

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 7 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்தது.

    இந்த சீசனில் மீண்டும் பினிஷராக உருவெடுத்துள்ளார் எம்.எஸ் டோனி. இதுவரை டெல்லி, மும்பை, லக்னோவுக்கு எதிராக 37* (16), 20* (4), 28* (9) ரன்கள் விளாசி அற்புதமாக விளையாடி இருக்கிறார்

    சிஎஸ்கே அணியின் நலனுக்காக தோனி முன்கூட்டியே பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் இது தொடர்பாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேசியுள்ளார். அதில், "டோனியின் பேட்டிங் உத்வேகத்தை கொடுக்கிறதல்லவா? இந்த வருடம் வலைப்பயிற்சியில் கூட அவருடைய பேட்டிங் மிகவும் துல்லியமாக இருக்கிறது. எனவே அவருடைய ஆட்டத்தை பார்த்து எங்கள் அணி ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் ஆரம்பத்திலேயே நாங்கள் அவருடைய உச்சகட்ட திறமையை பார்த்துள்ளோம். இருப்பினும் சமீபத்திய வருடங்களில் அவருடைய முழங்காலில் பிரச்சனை இருக்கிறது"

    அதிலிருந்து மீண்டு வரும் அவரால் குறிப்பிட்ட சில பந்துகளை மட்டுமே எதிர்கொள்ள முடியும். இங்கே அனைவரும் எங்களைப் போலவே டோனி அதிக நேரம் பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புகின்றனர். இருப்பினும் நாங்கள் அவரை தொடர் முழுவதும் விளையாடுவதை பார்க்க விரும்புகிறோம். அதற்கு அவர் 2 – 3 ஓவர்கள் விளையாடுவதே சரியாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது.

    அவர் பேட்டிங் செய்ய வரும் போது அற்புதமான சூழ்நிலை ஏற்படுகிறது. அவர் அனைவரையும் மகிழ்விக்கிறார். அந்த வகையில் டோனி சாதித்துள்ள விஷயங்களுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்தியாவுக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும் அவர் செய்துள்ளதை பார்த்து எங்களுக்கு ஆச்சரியமில்லை. எங்களுடைய அணியின் இதயத்துடிப்பாகவும் ஒரு அங்கமாகவும் அவர் இருப்பதற்காக நாங்கள் பெருமையடைகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • சேப்பாக்கத்தில் நடைபெறும் 4-வது லீக் ஆட்டம் இதுவாகும்.
    • டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை காலை 10.40 மணிக்கு தொடங்கி நடைபெறும் என சிஎஸ்கே கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 23-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெறும் 4-வது லீக் ஆட்டம் இதுவாகும்.

    சென்னை- லக்னோ மோதலுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை (சனிக்கிழமை) காலை 10.40 மணிக்கு தொடங்கி நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம் என்றும், ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4 ஆயிரம், ரூ.6 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

    • சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா கடந்த 4 ஆட்டங்களில் சோபிக்கவில்லை.
    • லக்னோ ஆடுகளம் கொஞ்சம் கடினமானது.

    லக்னோ:

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், லக்னோவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (பெங்களூரு, குஜராத், கொல்கத்தா, மும்பைக்கு எதிராக) 2 தோல்வி (டெல்லி, ஐதராபாத்துக்கு எதிராக) என்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன் குவித்த சென்னை அணி, 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ருதுராஜ், ஷிவம் துபேவின் அரைசதமும், யார்க்கர் பந்து வீச்சில் மிரட்டிய பதிரானாவின் 4 விக்கெட்டும் வெற்றிக்கு உதவின. விக்கெட் கீப்பர் டோனி 4 பந்தில் 3 சிக்சருடன் 20 ரன் விளாசி கலக்கினார்.

    சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா கடந்த 4 ஆட்டங்களில் சோபிக்கவில்லை. அவர் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம். மற்றபடி சென்னை அணி எல்லா வகையிலும் வலுவாகவே விளங்குகிறது. லக்னோ ஆடுகளம் கொஞ்சம் கடினமானது. பந்து திடீரென எகிறுவதும், தாழ்ந்து செல்வதும் என்று இரு வித தன்மையுடன் காணப்படுகிறது. அதற்கு ஏற்ப வீரர்கள் ஆட வேண்டியது முக்கியம்.

    லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), 3 தோல்வி (ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தாவுக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் உள்ளது.

    கடைசியாக ஆடிய டெல்லி, கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியை தழுவிய லக்னோ வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. உள்ளூர் சூழல் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும். ஆனால் அவர்களின் பேட்டிங் ஒரு சேர 'கிளிக்' ஆகாதது தான் பின்னடைவாக உள்ளது. குயின்டான் டி காக், கேப்டன் லோகேஷ் ராகுல், நிகோலஸ் பூரன் ஆகியோரின் பேட்டிங்கையே அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று ஆடினால் பெரிய ஸ்கோரை எட்ட முடியும்.

    பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யா, யாஷ் தாக்குர் ஓரளவு நன்றாக செயல்படுகிறார்கள். காயத்தில் சிக்கிய 'புயல்' வேக பவுலர் மயங்க் யாதவ் மீண்டும் பயிற்சியை தொடங்கி விட்டார். ஆனாலும் அவர் களம் காணுவாரா என்பதில் உறுதி இல்லை. மொத்தத்தில் ஒருங்கிணைந்து விளையாடினால் சென்னை அணிக்கு சவால் அளிக்கலாம். இல்லாவிட்டால் சிக்கல் தான். நேற்று தனது 32-வது பிறந்த நாளை கொண்டாடிய லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுலுக்கு பிறந்த நாள் பரிசாக வெற்றிக்கனி கிட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    சென்னை- லக்னோ அணிகள் இதுவரை 3 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தலா ஒன்றில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    லக்னோ:

    குயின்டான் டி காக், லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், குருணல் பாண்ட்யா, அர்ஷத் கான் அல்லது தீபக் ஹூடா, மொசின் கான், ரவி பிஷ்னோய், ஷமார் ஜோசப், யாஷ் தாக்குர்.

    சென்னை:

    ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஷிவம் துபே, டேரில் மிட்செல் அல்லது தீக்ஷனா, டோனி, சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, துஷர் தேஷ்பாண்டே அல்லது ஷர்துல் தாக்குர், முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வியுற்றது.
    • சென்னை அணி மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதுவரை மும்பை அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. சென்னை அணி ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.

    அந்த வகையில் இரு அணிகள் விளையாடும் ஆறாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன. 

    • நடப்பு ஐ.பி.எல். சீசனில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
    • மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம் செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. நடப்பு சீசனில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம் செய்யப்பட்டார்.

    ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் பலர் அதிருப்தி தெரிவித்ததுடன் ஐ.பி.எல். போட்டி தொடரின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகிறார்கள். தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையின் கீழ் மும்பை அணியில் ஒரு வீரராக ரோகித் சர்மா விளையாடி வருகிறார்.

    இதற்கிடையே, அடுத்த ஆண்டு ரோகித் சர்மா வேறு அணிக்கு மாறக்கூடும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    தோனிக்கு மாற்றாக ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்வார் என நினைக்கிறேன்.

    சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு மட்டுமே இருப்பார். அடுத்த ஆண்டு ரோகித் சர்மாவை சென்னை அணி கேப்டனாக பார்க்கலாம்.

    ஹர்திக் பாண்ட்யா தற்போது கடினமான காலகட்டத்தில் இருக்கிறார். இது அவரது தவறு கிடையாது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறீர்களா என்று அணி நிர்வாகம் கேட்டால் எந்த வீரர் தான் வேண்டாம் என்று சொல்வார்.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை மும்பை அணி கேப்டனாக இந்த ஆண்டு நீட்டித்திருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும் என தெரிவித்தார்.

    • சென்னை அணி இந்த தொடரில் வெளியூரில் வெற்றி பெறவில்லை.
    • சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது.

    மும்பை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந்தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 3 ஆட்டத்திலும் சி.எஸ்.கே. (பெங்களூரு 6 விக்கெட் , குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட் ) வெற்றி பெற்றது. வெளியூரில் ஆடிய 2 போட்டியிலும் (டெல்லி 20 ரன், ஐதராபாத் 6 விக்கெட்) தோற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 6-வது போட்டியில் மும்பை இந்தியன்சை நாளை ( 14-ந் தேதி) எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    மும்பையை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை அணி இந்த தொடரில் வெளியூரில் வெற்றி பெறவில்லை. மேலும் மும்பை இந்தியன்சை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சவாலானது.

    சி.எஸ்.கே. அணியின் பேட்டிங்கில் ஷிவம் துபே (176 ரன்), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (155) நல்ல நிலையில் உள்ளனர். ரச்சின் ரவீந்திரா, மிச்சேல், ரகானே, டோனி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள். பந்துவீச்சில் முஸ்டா பிசுர் ரகுமான் 9 விக்கெட்டும், துஷார் தேஷ் பாண்டே 5 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளன.

    ஆல்ரவுண்டர் பணியில் ஜடேஜா சிறப்பான நிலையில் இருக்கிறார். நாளைய போட்டிக்கான சி.எஸ்.கே. அணியில் மாற்றம் இருக்கலாம் என்று தெரிகிறது. தீக்ஷனா நீக்கப்பட்டு பதிரனா இடம் பெறலாம்.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் முதல் 3 ஆட்டத்திலும் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தான்) தோற்றது. அதை தொடர்ந்து 2 போட்டியில் (டெல்லி, பெங்களூரு) வெற்றி பெற்றது. 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் அந்த அணி இருக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது. கடந்த 2 ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    மும்பை அணியின் பேட்டிங்கில் இஷான்கிஷன் (161) ரன், ரோகித்சர்மா (156), திலக் வர்மா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும், பந்து வீச்சில் பும்ரா (10 விக்கெட்), கோயட்சி (8 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    • சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
    • கொல்கத்தா அணி தரப்பில் வைபவ் அரோரா 2 விக்கெட்டும், சுனில் நைரன் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    சென்னை:

    ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியில் சால்ட் முதல் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருந்தாலும் அதன்பிறகு சுனில் நரைன் - அங்கிரிஷ் ரகுவன்ஷி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது.

    அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் தடுமாற்றத்துடன் விளையாடினர். இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா- ருதுராஜ் களமிறங்கினர். ரச்சின் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் விளையாடிய ருதுராஜ், சிஎஸ்கே அணியின் கேப்டனாக தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

    நிதானமாக விளையாடிய மிட்செல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துபே அவரது பாணியில் அதிரடியாக விளையாடினார். அவர் 28 ரன்னில் அவுட் ஆனார். அடுத்ததாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டோனி களமிறங்கினார். ஆனால் சிக்சர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் வைபவ் அரோரா 2 விக்கெட்டும், சுனில் நைரன், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் 10 முறை மோதி இருக்கின்றன.
    • இதில் 7-ல் சென்னையும், 3-ல் கொல்கத்தாவும் வாகை சூடியுள்ளன.

    சென்னை:

    ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் சென்னையும், 10-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் 10 முறை மோதி இருக்கின்றன. இதில் 7-ல் சென்னையும், 3-ல் கொல்கத்தாவும் வாகை சூடியுள்ளன.

    • நான் சென்னையைச் சேர்ந்தவன் என்பதால் சென்னை அணி என்னை வாங்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்
    • டோனியை வாங்கியதால் நான் எப்போதும் சி.எஸ்.கே. அணியில் இடம்பெற போவதில்லை என்பதை உணர்ந்தேன்.

    சென்னை:

    இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். இவர் கடந்த 2004-ல் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அறிமுகமானார். ஆனால் சர்வதேச அரங்கில் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்பட்டார். மறுபுறம் அதே காலகட்டத்தில் அறிமுகமான டோனி மிகச்சிறப்பாக விளையாடி கேப்டனாக முன்னேறினார்.

    ஐ.பி.எல். தொடரில் 2008 முதல் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக், டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, குஜராத் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். இருப்பினும் தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடும் வாய்ப்பு கடைசி வரை அவருக்கு கனவாகவே போயுள்ளது.

    இந்நிலையில் 2008 ஐ.பி.எல். ஏலத்தில் டோனியை எடுத்தபோதே தமக்கு எப்போதும் சி.எஸ்.கே. அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்பதை புரிந்து கொண்டதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

    இது அவர் பேசியது பின்வருமாறு:-

    நான் சென்னையைச் சேர்ந்தவன் என்பதால் சென்னை அணி என்னை வாங்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் இந்த முட்டாள்தனமான எண்ணத்தை நான் கொண்டிருந்தேன். இந்தியா ஏ அணிக்காகவும், தமிழ்நாடு ரஞ்சி அணிக்காகவும் வி.பி. சந்திரசேகர்தான் என்னை தேர்வு செய்ய முக்கிய காரணமாக இருந்தார். எனவே சி.எஸ்.கே .அணியின் ஒரு அங்கமாக இருந்த அவர் என்னை ஐ.பி.எல். தொடரிலும் தேர்வு செய்வார் என்று நினைத்தேன்.

    இருப்பினும் கடைசியில் அவர் டோனியை வாங்கியதால் நான் எப்போதும் சி.எஸ்.கே. அணியில் இடம்பெற போவதில்லை என்பதை உணர்ந்தேன். ஏனெனில் நாங்கள் இருவரும் இந்திய அணியில் அங்கமாக இருந்தோம். அதில் நான் சற்று தடுமாற்றமாக இருந்தேன். எனவே டோனியுடன் என்னையும் ஒரே அணியில் சி.எஸ்.கே. தேர்வு செய்யாது என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் அப்போதுதான் சி.எஸ்.கே. அணியின் ஒரு பகுதியாக நான் எப்போதும் இருக்கப் போவதில்லை என்பது எனக்கு புரிந்தது.

    மேலும் மும்பை அணி கொடுத்த மெகா ஆஃபரை வேண்டாமென்று துறந்து வெளியில் வந்தேன். என்னை பொறுத்தவரை மும்பை அணியில் நீடித்திருந்தால், நான் இன்னும் நல்ல கிரிக்கெட் வீரராக இருந்திருப்பேன். ஏனென்றால் கூக்குபரா பந்தில் பயிற்சி செய்ய முடியும்.

    ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு கூக்குபரா பந்தின் விலை ரூ.15 ஆயிரம். ஒருநாள் பயிற்சிக்கு பந்திற்காக மட்டும் ரூ.4 லட்சம் வரை செலவு செய்ய தயங்க மாட்டார்கள்.

    இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடருடன் தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடர் தொடங்கி 17 சீசன்களாக தொடர்ந்து விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், இதுவரை ஐ.பி.எல். வரலாற்றில் 2 போட்டிகளை மட்டுமே தவறவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சி.எஸ்.கே. முதல் 2 ஆட்டத்தில் சொந்த மண்ணில் வென்ற பிறகு அடுத்த 2 போட்டிகளில் வெளியூரில் தோற்றது.
    • கடந்த 2 போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் மோசமாக இருந்தது.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் 7 லீக் ஆட்டம், குவாலிபையர்-2 மற்றும் இறுதிப்போட்டி ஆகிய 9 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழாவே சேப்பாக்கத்தில் தான் நடைபெற்றது. கடந்த 22-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. 26-ந் தேதி நடைபெற்ற 2-வது போட்டியிலும் சி.எஸ்.கே. வெற்றி பெற்றது. குஜராத்தை 63 ரன்னில் தோற்கடித்தது.

    சேப்பாக்கம் மைதானத்தில் 3-வது ஐ.பி.எல். ஆட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த கோலாகலத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சி.எஸ்.கே. முதல் 2 ஆட்டத்தில் சொந்த மண்ணில் வென்ற பிறகு அடுத்த 2 போட்டிகளில் வெளியூரில் தோற்றது. விசாகப்பட்டினத்தில் கடந்த 31-ந் தேதி நடந்த போட்டியில் டெல்லியிடம் 20 ரன் வித்தியாசத்திலும், ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இதுவரை நடந்த 3 ஆட்டத்திலும் கொல்கத்தா தோல்வியை தழுவாமல் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.

    கடந்த 2 போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் மோசமாக இருந்தது. கொல்கத்தா போன்ற பலமான அணியுடன் விளையாடும் போது அதில் இருந்து மீள்வது அவசியமாகும். சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இந்த ஆட்டத்தை ஆவலுடன் கோலாகலத்துக்காக காத்திருக்கிறார்கள்.

    உள்ளூர் ரசிகர்கள் ஆதரவால் சேப்பாக்கத்தில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் வேட்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறது. பேட்டிங்கில் ஷிவம் துபே தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த போட்டியில் விளையாடாத முஸ்டாபிசுர் ரகுமான் நாளைய ஆட்டத்தில் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    2 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த சீசனில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்சல், பில்சால்ட், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், புதுமுக வீரர் ரகுவன்சி, வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கிலும், ஹர்திக் ரானா, வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் 28 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 18-ல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10-ல வெற்றி பெற்றுள்ளன. 

    • பொறுப்புடன் விளையாடிய மார்க்ரம் அரை சதம் அடித்து அவுட் ஆனார்.
    • சிஎஸ்கே தரப்பில் மொயின் அலி 2 விக்கெட்டும் தீபக் சாஹர் தீக்‌ஷனா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துபே 45 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக அபிஷேக் சர்மா - ஹெட் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இவரை தீபக் சாஹர் அவுட் செய்தார். அடுத்து வந்த மார்க்ரம் மற்றும் ஹெட் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    ஹெட் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய மார்க்ரம் அரை சதம் அடித்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஷபாஸ் அகமது 18 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து கிளாசன் மற்றும் நிதிஷ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    இறுதியில் ஐதராபாத் அணி 19.1 ஓவரில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிஎஸ்கே தரப்பில் மொயின் அலி 2 விக்கெட்டும் தீபக் சாஹர் தீக்ஷனா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.  

    • சென்னை அணி தரப்பில் ஷிவம் துபே 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர், கம்மின்ஸ், உனத்கட், ஷபாஸ் அகமது, நட்ராஜன் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ்- ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ரச்சின் 16 ரன்னிலும் ருதுராஜ் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ரகானேவுடன் துபே ஜோடி சேர்ந்து ஸ்கோரை உயர்த்தினர்.

    ரகனே ஆட்டம் மந்தமாக இருந்தது. ஆனால் மறுமுனையில் இருந்த துபே-ன் ஆட்டம் வெறித்தனமாக இருந்தது. அதிரடியாக விளையாடி துபே 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் 35 (30) ரன்னில் வெளியேறினார். இதனை தொடந்து மிட்செல் - ஜடேஜா ஜோடி ரன்களை உயர்த்த முயற்சித்தனர். ஆனால் ஐதராபாத் சிறப்பாக பந்து வீசி பவுண்டரி சிக்சர்களை தடுத்தனர்.

    இதனால் இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர், கம்மின்ஸ், உனத்கட், ஷபாஸ் அகமது, நட்ராஜன் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ×