search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சிஎஸ்கே அணியை 165 ரன்னில் கட்டுப்படுத்தியது ஐதராபாத்
    X

    சிஎஸ்கே அணியை 165 ரன்னில் கட்டுப்படுத்தியது ஐதராபாத்

    • சென்னை அணி தரப்பில் ஷிவம் துபே 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர், கம்மின்ஸ், உனத்கட், ஷபாஸ் அகமது, நட்ராஜன் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ்- ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ரச்சின் 16 ரன்னிலும் ருதுராஜ் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ரகானேவுடன் துபே ஜோடி சேர்ந்து ஸ்கோரை உயர்த்தினர்.

    ரகனே ஆட்டம் மந்தமாக இருந்தது. ஆனால் மறுமுனையில் இருந்த துபே-ன் ஆட்டம் வெறித்தனமாக இருந்தது. அதிரடியாக விளையாடி துபே 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் 35 (30) ரன்னில் வெளியேறினார். இதனை தொடந்து மிட்செல் - ஜடேஜா ஜோடி ரன்களை உயர்த்த முயற்சித்தனர். ஆனால் ஐதராபாத் சிறப்பாக பந்து வீசி பவுண்டரி சிக்சர்களை தடுத்தனர்.

    இதனால் இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர், கம்மின்ஸ், உனத்கட், ஷபாஸ் அகமது, நட்ராஜன் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    Next Story
    ×