search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheating"

    • பெட்ரோல் பங்க் வைப்பதற்காக இடம் தேவைப்படுவதாக சில புரோக்கர்களிடம் தெரிவித்துள்ளார்.
    • பின்னர் அந்த இடத்தை முடித்துக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    பாளை பெருமாள் புரத்தை சேர்ந்தவர் பெர்க்மான்ஸ் (வயது 65). இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவர் பெட்ரோல் பங்க் வைப்பதற்காக இடம் தேவைப்படுவதாக சில புரோக்கர்களிடம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவருக்கு மேலப்பாளையத்தை சேர்ந்த பரித் புகாரி (52), தாழையூத்தை சேர்ந்த துரை (48) ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

    இவர்கள் 2 பேரும் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை மற்றும் ஒரு கல்லூரி உள்ளிட்ட பகுதியை ஒட்டி அமைந்துள்ள சில இடங்களை தங்களுக்கு சொந்தமான இடம் என்று காட்டி முன் தவணை தொகையாக ரூ.1½ கோடி பெற்றுள்ளனர்.

    பின்னர் அந்த இடத்தை முடித்துக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த பெர்க்மான்ஸ் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் காட்டிய இடம் அவர்கள் 2 பேருக்கும் சொந்தமானது இல்லை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பண மோசடியில் ஈடுபட்ட புகாரி மற்றும் துரை ஆகியோரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.

    • சிறுமிகளை ஏமாற்றி திருமணம் செய்த சிறுவன்-வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • கடந்த 11-ந் தேதி வீட்டில் இருந்து வெளியேறியதாகவும், பின்னர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றதாகவும் தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் அக்பர்கான், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பி.முகைதீன், தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கீதாதேவி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் நகர் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அழகர்கோவிலுக்கு செல்லும் வழியில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் அதில் வந்த வாலிபர் மற்றும் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி, வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தில் கடந்த 11-ந் தேதி வீட்டில் இருந்து வெளியேறியதாகவும், பின்னர் கொடைக்கா னலுக்கு சுற்றுலா சென்ற தாகவும் தெரிவித்தார்.

    விசாரணையில் அந்த வாலிபரும், சிறுமியும் கேரள மாநிலம் கண்ணூர் சென்று அங்குள்ள ஒரு ேகாவிலில் திருமணம் செய்துள்ளனர் என்பதும், அதன் பிறகு இருவரும் சிறுமியின் தோழி வீட்டில் தங்க முயன்றபோது அவர்கள் அனுமதிக்காததால் அழகர்கோவில் வந்ததும் தெரியவந்தது. பிடிபட்ட வாலிபர் மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர். இவரும் 17 வயது சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறுவனிடமிருந்து இருந்து சிறுமியை மீட்ட முத்துப்பட்டி அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, வலுக்கட்டாயமாக திருமணம் செய்தது உள்பட பல்வேறு பிரிவுகளில் சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதேபோல் தனிப்படை போலீசார் கள்ளந்திரி பகுதியில் சோதனை செய்தபோது அந்த வழியாக ஜோடியாக வந்த ஒரு வாலிபரையும், சிறுமியையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.

    விசாரணையில் அந்த வாலிபர் செல்லூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் யுவராஜ் (வயது 19) என்பதும், அவருடன் வந்தவர் 16 வயது சிறுமி என்பதும் தெரியவந்தது. சிறுமியை போலீசார் மீட்டனர்.

    போலீசார் நடத்திய விசாரணையின்போது அந்த சிறுமி கூறியதாவது:-

    நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். தந்தை இறந்துவிட்டதால் தாய் மறுமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நான் யுவராஜை காதலித்தேன். எங்களின் காதலுக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் நண்பர்களுடன் கொடைக்கானல் செல்ல திட்டமிட்டிருந்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத்தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய யுவராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி முத்துப்பட்டி அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    • இணையதளத்தில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட நவீன எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதனை வாங்குவதற்கு தங்களிடம் அணுகலாம் எனவும் வந்த விளம்பரத்தை பார்த்தார்.
    • கடந்த வாரம் செல்பேனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் செல்வநாயகம் (வயது 74). இவர் ஓய்வு பெற்ற தனியார் பள்ளி முதல்வர் ஆவார்.

    இவர் இணையதளத்தில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட நவீன எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதனை வாங்குவதற்கு தங்களிடம் அணுகலாம் எனவும் வந்த விளம்பரத்தை பார்த்தார்.

    பின்னர் அதில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய போது, நவீன காரை வாங்குவதற்கு முதலில் பணம் கட்ட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

    அதன்பேரில் 7 தவணையாக ரூ.13 லட்சத்தை செல்வநாயகம் அனுப்பி உள்ளார். எனினும் அந்த நபர் காரை வாங்கி கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும், பதில் இல்லை.

    கடந்த வாரம் செல்பேனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வ நாயகம் நெல்லை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நர்சிங் கல்லூரி, சொசைட்டி அமைக்கப் போவதாக பொதுமக்களிடம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குள்ளனம்பட்டி:

    மதுரை மேலூரை சேர்ந்தவர்கள் டேவிட் பீட்டர் (வயது47), பாக்கியலட்சுமி (36). இவர்கள் கொடைக்கானலில் நர்சிங் கல்லூரி அமைக்கப்போவதாக கூறி பரணிகுமார் என்பவரிடம் ரூ.6 லட்சம் வாங்கி உள்ளனர்.

    பரணி குமாரின் மனைவி மீனாகுமாரியை கல்லூரியின் முதல்வராக நியமிப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர். ஆனால் கல்லூரி கட்டாமல் மோசடி செய்துள்ளனர்.

    மேலும் சிலரிடமும் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளனர். இது குறித்து டி.எஸ்.பி. ஜஸ்டின் பிரபாகரன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ரெய்கானா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம், சொகுசு கார், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் சொசைட்டி அமைக்கப்போவதாக கூறி மேலும் பலரிடம் மோசடி செய்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    தேனி அருகே வேலை வாங்கித்தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    போடியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 44) மற்றும் அருண்குமார், செல்லமுத்து மற்றொரு விஜயகுமார், குமரவேல், பாலமுருகன் ஆகியோர் உள்பட 7 பேரிடம் வேலை வாங்கித் தருவதாக பெரியகுளத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சாம்சுல்ரகுமான் ஆகியோர் கூறியுள்ளனர்.

    மேலும் இதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் என கூறி 7 பேரிடமும் தலா ரூ.5 லட்சம் வசூல் செய்துள்ளனர். ஆனால் வேலை வாங்கித் தராமல் தாமதம் செய்து வந்துள்ளனர்.

    இதனால் 7 பேரும் அவர்களிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் சாம்சுல் ரகுமான் பணத்தை திருப்பி தர முடியாது. மீண்டும் வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

    இது குறித்து 7 பேரும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தனர். எஸ்.பி. உத்தரவின் பேரில் தென்கரை போலீசார் மணிகண்டன் மற்றும் சாம்சுல் ரகுமான் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் போலி ரசீது தயாரித்து கொடுத்து ரூ.21 லட்சம் மோசடி செய்த கிளை மேலாளர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கோர்ட்டு வீதியில் பிரபல தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கிளை அலுவலகம் உள்ளது.

    இந்த நிறுவனத்தில் கிளை மேலாளராக நாகராஜன் முருகன் பணியாற்றி வருகிறார். இதே கிளையில் பிரிவு மேலாளர்களாக கோவை டாடாபாத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 30), கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ்பாபு (54), திருப்பூர் கவுண்டம்பாளையம் நால்ரோட்டை சேர்ந்த திவாகர்(30), மற்றும் சங்கர், மணிகண்டன் ஆகியோர் பணியாற்றினார்கள்.

    இவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அதை நிறுவனத்துக்கு செலுத்தாமல், அதற்கு போலியாக ரசீது தயாரித்து கொடுத்து கையாடல் செய்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர் சம்மதம் இல்லாமல் அவர்களின் பாலிசிகளையும் ரத்து செய்துள்ளனர்.

    இதுகுறித்து அறிந்த மேலாளர் நாகராஜன் முருகன் இதுதொடர்பாக திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், கிளை மேலாளர்கள் அருண்குமார், வெங்கடேஷ் பாபு, திவாகர் மற்றும் சங்கர், மணிகண்டன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இதில் 5 பேரும் சேர்ந்து போலியாக ரசீது தயாரித்து கொடுத்ததுடன் பாலிசிகளை ரத்து செய்து வாடிக்கையாளர்கள் 30 பேரிடம் ரூ.21 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அருண்குமார், வெங்கடேஷ்பாபு, திவாகர் ஆகிய 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 3 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    மதுரை அழகப்பன் நகரில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் 8 பவுன் தங்க செயினை மோசடி செய்த நபர்கள் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை அழகப்பன் நகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி முத்து ராக்கு (வயது 55). இவர் அந்தப்பகுதியில் நடந்து சென்றபோது 2 மர்ம வாலிபர்கள் முத்துராக்குவிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். இந்தப்பகுதியில் அடிக்கடி திருட்டு நடக்கிறது.

    எனவே நீங்கள் அணிந்திருக்கும் நகையை கொடுங்கள், பத்திரமாக மடித்து தருகிறோம் என்று கூறினர்.

    இதை நம்பிய முத்துராக்கு, தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலிச்செயினை அவர்களிடம் கொடுத்தார். அதை வாங்கிய 2 வாலிபர்களும் ஒரு காகிதத்தில் வைத்து பொட்டலமாக மடித்துக் கொடுத்தனர்.

    வீடு திரும்பிய முத்து ராக்கு பொட்டலத்தை பிரித்து பார்த்த போது அதில் காகிதங்கள் சுற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த முத்து ராக்கு இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    இதேபோல் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த கருப்பையா மனைவி பாண்டியம்மாள் (வயது 45). இவர் ஆரப்பாளையத்தில் இருந்து எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்சில் சென்றார்.

    கோரிப்பாளையம் அருகில் சென்றபோது பாண்டியம்மாள் வைத்திருந்த மணிபர்சை யாரோ அபேஸ் செய்து விட்டனர். அதில் அவர் 7 பவுன் தங்க தாலிச்செயினை வைத்திருந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்து ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்தது அம்பலமாகியுள்ளது.

    கோவை, டிச.7-

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருப்பலூரை சேர்ந்தவர் கிரிஷ்(வயது 32).

    இவர் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு வேலைக்காக விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் சென்றார். அங்கு கணவரை பிரிந்து 3 குழந்தைகளுடன் தனி யாக வசித்து வந்த அன்ன லட்சுமி(வயது 26) என்ற பெண்ணுடன் கிரிசுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    தான் சி.பி.ஐ. அதிகாரியாக வேலை பார்ப்பதாக கிரிஷ் கூறியதை நம்பிய அன்னலட்சுமி அவரது வலையில் விழுந்தார். நாள டைவில் இருவரும் குடும்பம் நடத்த தொடங்கினர்.

    கிரிஷ் கடந்த 2 மாதங் களுக்கு முன்பு அன்ன லட்சுமியை அழைத்து கொண்டு கோவைக்கு குடி பெயர்ந்தார். இருவரும் பி.கே. புதூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். சமீப காலமாக வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற கிரிஷ் சரியாக வீட்டுக்கு வருவது இல்லை. அவர் மீது அன்னலட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் கிரிசின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தார்.

    அப்போது கிரிசுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் தன்னை ஏமாற்றிய கிரிஷ் மீது அன்னலட்சுமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று கிரிஷ் வீட்டுக்கு வந்த போது அன்னலட்சுமி நீங்கள் உண்மையிலேயே சி.பி.ஐ.யில் தான் வேலை பார்க்கிறீர்களா? என கேட்டு தகராறு செய்தார். அப்போது கிரிஷ் தகாத வார்த்தைக ளால் அன்னலட்சுமியை திட்டினார்.

    இதுகுறித்து அன்னலட்சுமி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். அப்போது கிரிஷ் சி.பி.ஐ. அதிகாரி என கூறி பலரிடமும் பணம் வசூலிக்கிறார். அவர் மீது சந்தேகம் உள்ளது என கூறி னார்.

    உஷாரான குனியமுத் தூர் போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்று கிரிசை மடக்கிப் பிடித்து விசாரணை நடத் தினர். அப்போது அவர் சி.பி.ஐ. என அச்சிடப்பட்டிருந்த அடையாள அட்டை களை வைத்திருந்தார். அவற்றை சரி பார்த்த போது அவை போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    கிரிஷ் என்ற தனது பெயரை ராஜகிரி என மாற்றி அடையாள அட்டை அச்சிட்டு பலரையும் ஏமாற் றியதை அவர் ஒப்புக் கொண் டார்.இதைத் தொடர்ந்து போலி அடையாள அட்டைகளை கைப்பற்றிய போலீசார் கிரிசை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 419(ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது.

    பின்னர் அவரை கோர்ட் டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத் தனர். கிரிஷ் சி.பி.ஐ.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏரா ளமானவர்களிடம் லட்சக் கணக்கில் பணம் மோசடி செய்ததும், தன்னை சி.பி.ஐ. அதிகாரி எனக்கூறி பல பெண்களை ஏமாற்றி உல்லா சமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. எனினும் இது தொடர்பாக புகார்கள் இல்லை. எனவே கிரிசிடம் ஏமாந்தவர்கள் முறையாக புகார் அளிக்கலாம் என போலீசார் கூறினர். அவ்வாறு புகார்கள் வந்ததும் கிரிசை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீ சார் திட்டமிட்டுள்ளனர்.

    சென்னையில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் வங்கி அதிகாரி, மோசடி பணத்தில் சொகுசு கார், படகு, பங்களா வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது. #BankOfficer #CheatingCase
    சென்னை:

    சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன். முன்னாள் தனியார் வங்கி அதிகாரி. இவர் மீது நெல்லையை சேர்ந்த தொழில் அதிபர் ஜெபரத்தினம் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் கொடுத்தார்.

    அதில், “கமலக்கண்ணன் என்னிடம் வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறினார். இதனால் அவரை நம்பினேன். ஆனால் கமலக்கண்ணன், எனது பெயரில் பலகோடி மதிப்பில் நிலங்கள் இருப்பதாக போலி ஆவணங்கள் தயார் செய்து 3 வங்கிகளில் கொடுத்து ரூ.1.83 கோடி கடன் வாங்கி உள்ளார். அந்த வங்கியில் இருந்து எனக்கு நோட்டீசு வந்த பிறகுதான் கமலகண்ணன் மோசடி செய்தது தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

    இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் வங்கி அதிகாரியான கமலக்கண்ணனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பலரிடம் தொழிலுக்காக கடன் வாங்கி தருவதாகவும், கார் கடன் வாங்கி தருவதாகவும் மோசடி செய்து வந்ததும், மோசடி பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது.

    கொடைக்கானலில் ரூ.2 கோடிக்கும் மேல் உள்ள பங்களா வீடு வாங்கி உள்ளார். 2 சொகுசு கார்கள் வைத்திருக்கிறார். மேலும் உல்லாச படகு ஒன்றையும் வாங்கி அந்தமான் தீவில் நிறுத்தி வைத்திருப்பதும் தெரியவந்தது.

    தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வங்கியில் கமலக் கண்ணன் தனது கூட்டாளிகள் 6 பேருடன் சேர்ந்து ரூ.6.71 கோடி மோசடி செய்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் அவரது கூட்டாளிகள் 6 பேரையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

    தற்போது முக்கிய குற்றவாளியான கமலக்கண்ணன் சிக்கி உள்ளார். இதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கமலகண்ணனை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளது. #BankOfficer #CheatingCase
    வேலாயுதம்பாளையத்தில் காகித ஆலையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
    வேலாயுதம்பாளையம்:

    ஸ்ரீரங்கம் அருகே உள்ள குழுமணி வடக்கு மூலக்குடியைச் சேர்ந்தவர் முருகேசன் (59) இவர் தனது மகனுக்கு வேலை தேடி வந்தார். 
    இதை அறிந்த அரவக்குறிச்சி பெரிய திருமங்கலம் வடகரையைச் சேர்ந்த நல்லசுப்பிரமணியம் என்பவர் முருகேசனிடம் உங்களது மகனுக்கு புகளுரில் உள்ள செய்தித்தாள் காகித ஆலையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பணம் ரூ. 3 லட்சம் வாங்கியுள்ளார். 

    ஆனால்  கூறியபடி நல்ல சுப்பிரமணியம் வேலை வாங்கி  தரவில்லை. உடனே முருகேசன் பணத்தைகேட்டார். ஆனால் நல்ல சுப்பிரமணியம் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் இது குறித்து வேலாயுதம் பாளையம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்குப்பதிவு செய்து நல்லசுப்பிரமணியை கைது செய்தனர். 
    திருச்சியில் 6 பேரின் வங்கி கணக்கை பெற்று கடன் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருச்சி:

    திருச்சி ஒத்தக்கடை புதுதெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி தரணி (வயது 25). இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது;-

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே நாயக்கரை பாளையம் வடக்கு  தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 28)இவர் தனியார் செல்போன் ஷோருமில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் என்னுடைய தனி நபர் அடையாளம், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட  விபரங்களை பெற்றுக் கொண்டார். 

    இதேபோல் மேலும் 6 நபர்களிடம் ஆவணங்களை பெற்றுள்ளார். இந்த ஆவணங்கள்அனைத்தும் பயன்படுத்தி ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் நுகர்வோர் கடன் பெற்றுள்ளார். தற்போது அதில் ரூ.3 லட் சத்து 30 ஆயிரம் திரும்ப செலுத்தியுள்ளார். ஆனால் மீதம் உள்ள ரூ.2 லட்சம் பணத்தை திரும்ப செலுத்த வில்லை. அந்த பணத்தை கட்டாமல் மோசடி செய்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதனை தொடர்ந்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து விசாரிக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து அருள்தாசை கைது செய்தனர்.
    பத்திரப்பதிவு அலுவலகங்களில் போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை பதிவு செய்து மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த அலுவலகங்களில் போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை பதிவு செய்து மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில்தான் இந்த மோசடி அதிகளவு நடந்திருப்பது பத்திரப்பதிவு துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து மதுரை சப்- ரிஜிஸ்டர் ஆபீஸ் மற்றும் திருநெல்வேலி மண்டலத்திலும் இந்த மோசடி அதிகளவு நடந்துள்ளது.

    இந்த ஆய்வின் புள்ளி விவரங்களின்படி போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழகம் முழுவதும் 2700 புகார்கள் பதிவாகி இருந்தன.

    இந்த மோசடிகள் அனைத்தும் 2011-ம் ஆண்டு முதல் 2017 வரை நடந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

    இதில் சென்னை மண்டலத்தில் மட்டும் 1000 புகார்கள் வந்துள்ளன. சென்னை மண்டலத்தில் 64 சப்-ரிஜிஸ்டர் அலுவலகங்கள் நகரப் பகுதியிலும் மற்றவை காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் இயங்கி வருகின்றன. இந்த பதிவு அலுவலகங்களில்தான் அதிகளவு மோசடிகள் நடந்துள்ளன.

    சென்னையை தொடர்ந்து மதுரை மண்டலத்தில் 390 புகார்களும், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 125 புகார்களும், கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டலத்தில் 250 முறைகேடான சொத்து பதிவு செய்யப்பட்ட புகார்கள் பதிவாகி உள்ளன.

    சேலம் மண்டலத்தில் 240-ம், திருச்சியில்-225, வேலூரில் 170, கோவையில் 135, கடலூரில் 120 புகார்களும் பதிவாகி இருந்தன.

    சொத்துக்களை விற்க ‘பவர்’ கொடுத்து பின்னர் அதனை நீக்கியது போன்று இந்த மோசடி பதிவு நடைபெற்று இருப்பதாக மாவட்ட பதிவாளர்களுக்கு புகார்கள் வந்ததையடுத்து பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பெறப்பட்ட 2700 புகா ரில் 1100 புகார்கள் மீது விசாரணை நடத்தி ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது கண்டறியப்பட்டவுடன் அதனை தடை செய்து உண்மையான சொத்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×