search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chain snatching"

    • உங்களை போன்ற ஒரு அழகனை பார்த்ததில்லை என அந்த பெண் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.
    • பாதிக்கப்பட்ட முதியவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் 58 வயது முதியவர் ஒருவர்  சித்ராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்தபோது அவரது செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதனை எடுத்து அவர் பேசினார். அப்போது எதிர்முனையில் பெண் ஒருவர் பேசினார். அவர், முதியவரிடம் நான் உங்கள் வீட்டின் அருகே வசித்து வந்தேன். உங்களை பார்த்திருக்கிறேன். நீங்கள் மிகவும் அழகாக இருப்பீர்கள். உங்களை போன்ற ஒரு அழகனை பார்த்ததில்லை என ஆசை வார்த்தைகளை அள்ளி தெளித்திருக்கிறார்.

    முதியவரும் அதனை நம்பினார். அதன்பின்னர் தொடர்ந்து 2 பேரும் தினமும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தனர்.

    இந்த நிலையில் ஒருநாள் முதியவரை போனில் தொடர்பு கொண்ட இளம்பெண், நான் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். நாம் இருவரும் சந்தித்து பேசி ஜாலியாக இருக்கலாம் என கூறினார். நாம் எப்போது சந்திக்கலாம் என கேட்டிருக்கிறார். முதியவரும் பெண்ணின் பேச்சில் மயங்கி அவரை நேரில் சந்திப்பதற்கு ஆசை தெரிவித்தார்.

    அதற்கு அந்த பெண் நீங்கள் என்னை சந்திக்க வரும் போது டிப்டாப் உடையணிந்தும், நகைகளை அணிந்தும் வர வேண்டும் என தெரிவித்துள்ளார். எதற்கு என்று முதியவர் கேட்க, நீங்கள் டிப்டாப் உடையில் நகை அணிந்தால் மிகவும் அருமையாக இருக்கும் என ஆசை வார்த்தையை அள்ளி வீசினார்.

    முதியவரும் இளம்பெண்ணின் வார்த்தைகளை அப்படியே கேட்டு கொண்டவராக, டிப்டாப் உடையணிந்து கொண்டார். மேலும் வீட்டில் இருந்த 5 பவுன் நகையையும் எடுத்து அணிந்து கொண்டு இளம்பெண்ணை பார்க்க போகும் ஆவலில் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    போகும் வழியில் செல்போனில் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு எங்கு இருக்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் துடியலூர் சந்திப்பில் நிற்பதாக கூறினார். அங்கு சென்றதும் இளம்பெண்ணை, முதியவர் சந்தித்தார்.

    பின்னர் இளம்பெண், முதியவரை கரட்டுமேடு பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு 2 பேரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென ஒரு வாலிபர் இவர்களின் அருகே வந்தார். வந்த வேகத்தில் முதியவரை பார்த்து, நீ யார் எப்படி என் மனைவியுடன் பேசி கொண்டிருப்பாய் என கேட்டார்.

    மேலும் முதியவர் இளம்பெண்ணுடன் சேர்ந்து இருக்குமாறு செல்போனில் புகைப்படமும் எடுத்தார். பின்னர் அந்த புகைப்படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டினர்.

    பணம் தராவிட்டால் இந்த புகைப்படத்தை உன் மனைவி மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டினார். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையையும் பறித்து கொண்டு அவரை அங்கிருந்து விரட்டினர்.

    இதுகுறித்து அவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி நகையை பறித்த இளம்பெண் மற்றும் வாலிபரை தேடி வருகின்றனர்.

    • மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் நகையை பறித்துச்சென்றனர்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை காலனியைச் சேர்ந்தவர் கருப்பையா. சலவைத் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (60). இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 1.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

    இது குறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விளையாட்டு பயிற்சி மையத்துக்கு ெமாபட்டில் அழைத்து சென்றார்.
    • 8¼ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    கோவை 

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பல்லடம் ரோட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி லாவண்யா (வயது 38).

    சம்பவத்தன்று இவர் தனது மகனை அந்த பகுதியில் உள்ள விளையாட்டு பயிற்சி மையத்துக்கு ெமாபட்டில் அழைத்து சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பும் வழியில் கதிரவன் நகரில் உள்ள ரோட்டோர பூக்கடையில் பூ வாங்கி விட்டு மொபட்டை எடுப்பதற்காக வந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் லாவண்யா கழுத்தில் அணிந்து இருந்த 8¼ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து லாவண்யா மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    இடிகரை அருகே உள்ள கோவிந்த நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி நிர்மலா (60). சம்பவத்தன்று இவர் தனது சகோதரி வீட்டிற்கு செல்வதற்காக நரசிம்ம நாயக்கன் பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் நிர்மலா கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து அவர் பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். 

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகையை பறித்துச்சென்றனர்.
    • பைக் கொள்ளையர் அட்டகாசம் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளது.

    பழனி:

    பழனி அருகில் உள்ள திருநகரைச் சேர்ந்த மாரி மனைவி ஆவுடையம்மாள் (77). இவர் இன்று காலை தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பைக்கை நிறுத்திவிட்டு அவரிடம் பேச்சுக் கொடுப்பது போல அருகில் வந்தனர்.

    பின்னர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். உடனடியாக அவர் கூச்சலிட்ட போதும் அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் கொள்ளை யர்கள் தப்பினர்.

    இதனை தொடர்ந்து பழனி கவுண்டன் குளத்தை சேர்ந்த மனோகரன் மனைவி மஞ்சுளா (70) என்பவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 3 பேர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.

    அதில் அரை பவுன் தங்க தாலி இருந்துள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த 2 வழிப்பறிகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பழனியில் கடந்த சில நாட்களாக பைக் கொள்ளையர் அட்டகாசம் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளது.

    • பைக்கை பின்தொடர்ந்த வாலிபர் பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்கநகை மற்றும் ரூ.75ஆயிரத்தை பறித்துச்சென்றார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    குஜிலியம்பாறை அருகே கூடலூரை சேர்ந்தவர் வாசுகி(46). இவர் திருமக்கம்பட்டியை சேர்ந்த காளியம்மாளிடம் ரூ.75ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.

    அதனை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மற்றொரு வாலிபர் வாசுகியின் பைக்கை நிறுத்தி அவரிடமிருந்து 3 பவுன் தங்கநகை மற்றும் ரூ.75ஆயிரத்தை பறித்துச்சென்றார்.

    இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • நகையை பறித்தவுடன் அருகே எந்த பஸ் நிறுத்தம் வருகிறதோ அங்கு இறங்கி கொள்வார்.
    • இந்த குடும்பத்தினர் மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது

    கோவை 

    கோவை மாநகரில் ஓடும் பஸ்ஸில் பெண்களை குறி வைத்து தொடர் நகை பறிப்பு சம்பவம் மற்றும் கோவில் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் பயன்படுத்தி பெண்களிடம் செயின் பறித்து செல்லும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

    இதனை அடுத்து தொடர் செயின் பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை குறி வைத்து பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் மாதவன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, நாகராஜ் மற்றும் போலீஸ்காரர்கள் உமா, கார்த்தி, பூபதி, ரங்கராஜ் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தெலுங்கு பாளையம் தாமு நகரை சேர்ந்த நாகம்மாள்(48) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    நாகம்மாளின் சொந்த ஊர் மதுரை. இவரது கணவர் ராமு, மகன் சத்யா. இவர்கள் 3 பேரும் காரில் ஊர் ஊராகச் சென்று நகை கொள்ளை அடிப்பது வழக்கம்.

    நாகம்மாள் பஸ்சில் ஏறி பயணிகளுடன் பயணிகளாக பயணித்து, அருகில் இருக்கும் பெண்களிடம் நகையை பறித்து கொள்வார்.

    நகையை பறித்தவுடன் அருகே எந்த பஸ் நிறுத்தம் வருகிறதோ அங்கு இறங்கி கொள்வார். அவர் செல்லும் பஸ்சை பின்தொடர்ந்து அவரின் கணவர் அல்லது மகன் காரில் செல்வார்கள். பஸ் நிறுத்தத்தில் வைத்து காரில் ஏறி தப்பிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இப்படி பலரிடம் நகையை பறித்துள்ளனர்.

    இப்படி சம்பாதித்த பணத்தில் காந்திபுரம் பாரதியார் ரோட்டில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி அதனை தற்போது வாடகைக்கு விட்டுள்ளனர். மேலும் திருடிய பணத்தை கொண்டு மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளுக்கு சுற்றுலா சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

    இந்த குடும்பத்தினர் மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சத்யாவின் மனைவி திருட்டு வழக்கில் கைதாகி கேரள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதையடுத்து போலீசார் நாகம்மாள் கொடுத்த தகவலின் பேரில் ராமு, சத்யாவையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். நாகம்மாளை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மூதாட்டி தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • 2 வாலிபர்கள் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து தப்பிச்சென்றனர்.

    குனியமுத்தூர் 

    கோவைப்புதூர் அருகே உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் உதயராம். இவரது மனைவி அல்போன்ஸ் ரீட்டா (வயது 63). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அல்போன்ஸ் ரீட்டா கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றனர்.இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், அல்போன்ஸ் ரீட்டாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்
    • உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோலேந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி ராணி (வயது 45). இவர்களுக்கு 20 வயதில் மகன் ஒருவர் உள்ளார். இவர் அமரடக்கியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் சங்கர் மற்றும் ராணி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள், ராணி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.

    அப்போது விழித்துக் கொண்ட அவர்கள், மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் அவர்களை த ாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த தம்பதியர் உடனடியாக மீமிசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியரை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்த சிகரெட் இல்லை வேறு சிகரெட் கொடுங்கள் என கேட்டுள்ளாா்.
    • கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற மர்மநபர்

    அவிநாசி :

    அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் பெரியகருணைபாளையத்தைச் 2சோ்ந்த அமல்ராஜ் மனைவி அபிதாமேரி (வயது 24). இவா் சின்னக்கருணை பாளையத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். அபிதாமேரி கடையில் இருந்துள்ளாா்.

    அப்போது, அங்கு வந்த நபா் அபிதாமேரியிடம் சிகரெட் வாங்கிச் சென்றுள்ளாா். சிறிது நேரம் கழித்த வந்த நபா் இந்த சிகரெட் இல்லை வேறு சிகரெட் கொடுங்கள் என கேட்டுள்ளாா். அவா் திரும்பிய நேரத்தில், அவரது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளாா்.

    இது குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் அபிதாமேரி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி மர்மநபரை வருகின்றனா்.

    2 வாலிபர்கள் தங்களின் செல்போனில் உள்ள ஒரு போட்டோவை காண்பித்து பெண்ணிடம் இவரை தெரியுமா? என்று கேட்டனர்.

    கோவை:

    கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள சாம நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி பிரேமா (வயது 42). சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு அருகே வசித்து வரும் பெண் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பிரேமாவின் அருகில் வந்த தங்களின் செல்போனில் உள்ள ஒரு போட்டோவை காண்பித்து இவரை தெரியுமா? என்று கேட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் கண்இமைக்கும் நேரத்தில் பிரேமா கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை பறித்தார். பின்னர் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றார்.

    இதில் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பெண்ணிடம் நூதன முறையில் 6 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். 

    • 3 பவுன் தங்க நகையுடன் தப்பி சென்றனர்
    • போலீசார் மோட்டார் சைக்கிள் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கே.கே.புதூர் என்.ஆர்.ஜி வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 42). இவர் நேற்று தனது குடும்பத்தினர் சிலருடன் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாயிபாபா காலனி பழனியப்பா வீதி அருகே வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென சரஸ்வதியின் அருகில் வந்து அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க நகையை பறித்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சரஸ்வதி சத்தம் போட்டார். அவரின் சத்தத்அதை கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் அவருடன் சென்றவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் ேமாட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அதற்குள் அவர்கள் 3 பவுன் தங்க நகையுடன் ேமாட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பின்னர் இது குறித்து சரஸ்வதி சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பி சென்ற மோட்டார் சைக்கிள் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    ஈத்தாமொழி அருகே மூதாட்டியிடம் 5½ பவுன் நகையை மர்மநபர் பறித்து சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜாக்கமங்கலம்:

    ஈத்தாமொழி அருகே புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ஆதிலிங்கம். கூலி தொழிலாளி. இவரது மனைவி காசிதங்கம் (வயது 60).

    இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளைய மகள் மட்டும் இவர்களுடன் வசித்து வந்தார். நேற்று உறவினர் திருமணத்திற்காக அவர் சென்றிருந்தார். வீட்டில் காசித் தங்கமும், ஆதிலிங்கமும் இருந்தனர். இரவு காசித்தங்கம் வீட்டிற்கு பின்னால் மாட்டிற்கு தீவனம் வைப்பதற்காக சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்மநபர் ஒருவர் காசித்தங்கத்தின் வாயை பொத்தினார். பின்னர் கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகையை பறித்துவிட்டு தப்பியோடினார்.

    காசித்தங்கம் திருடன், திருடன் என கூச்சலிட்டார். மனைவியின் சத்தம் கேட்டு ஆதிலிங்கம் அங்கு வந்தார். அக்கம், பக்கத்தினரும் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து காசித்தங்கம் ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காசித்தங்கம் வெளியே செல்வதை நோட்டமிட்டே மர்மநபர் கைவரிசை காட்டி உள்ளார்.

    எனவே இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளையனை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    ×