search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியநாயக்கன்பாளையம் அருகே நூதன முறையில் பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு
    X

    பெரியநாயக்கன்பாளையம் அருகே நூதன முறையில் பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

    2 வாலிபர்கள் தங்களின் செல்போனில் உள்ள ஒரு போட்டோவை காண்பித்து பெண்ணிடம் இவரை தெரியுமா? என்று கேட்டனர்.

    கோவை:

    கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள சாம நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி பிரேமா (வயது 42). சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு அருகே வசித்து வரும் பெண் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பிரேமாவின் அருகில் வந்த தங்களின் செல்போனில் உள்ள ஒரு போட்டோவை காண்பித்து இவரை தெரியுமா? என்று கேட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் கண்இமைக்கும் நேரத்தில் பிரேமா கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை பறித்தார். பின்னர் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றார்.

    இதில் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பெண்ணிடம் நூதன முறையில் 6 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×