search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு"

    • மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் நகையை பறித்துச்சென்றனர்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை காலனியைச் சேர்ந்தவர் கருப்பையா. சலவைத் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (60). இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 1.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

    இது குறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×