search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    கோவையில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

    • 3 பவுன் தங்க நகையுடன் தப்பி சென்றனர்
    • போலீசார் மோட்டார் சைக்கிள் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கே.கே.புதூர் என்.ஆர்.ஜி வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 42). இவர் நேற்று தனது குடும்பத்தினர் சிலருடன் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாயிபாபா காலனி பழனியப்பா வீதி அருகே வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென சரஸ்வதியின் அருகில் வந்து அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க நகையை பறித்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சரஸ்வதி சத்தம் போட்டார். அவரின் சத்தத்அதை கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் அவருடன் சென்றவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் ேமாட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அதற்குள் அவர்கள் 3 பவுன் தங்க நகையுடன் ேமாட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பின்னர் இது குறித்து சரஸ்வதி சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பி சென்ற மோட்டார் சைக்கிள் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×