search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case registered"

    • கடந்த 15-ந் தேதி நிலத்திற்கு வாங்கி வைத்தி ருந்த பூச்சிமருந்தைகுடித்து வீட்டிலேயே மயங்கி விழுந்தார்.
    • திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நா கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள இளந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 47). இவர் விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்த தால், கடந்த 15-ந் தேதி நிலத்திற்கு வாங்கி வைத்தி ருந்த பூச்சிமருந்தைகுடித்து வீட்டிலேயே மயங்கி விழுந் தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகி ச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டார். இது குறித்து கனகராஜின் மனைவி தேவி (36) அளித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நா கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது லதாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
    • மேலும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சாக்காங்குடி சேர்ந்தவர் லதா (வயது 46). இவர் சென்னையில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றார் . அதன்பின்னர் நேற்று இரவு லதா தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது லதாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைந்து இருந்தது. அதில் இருந்த14 பவுன் நகை திருடு போனதால் லதா அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் மர்ம நபர்கள் எப்படி வீட்டுக்குள் வந்தார்கள் என பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைத்து உள்ளே வந்து திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 5.50 லட்சமாகும். தகவல் அறிந்த ஒரத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். இது குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • ஆறுமுகம் ஆகாஷ், ராஜதுரை ஆகியோர் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தனர்.
    • சங்கரின் மனைவி என் வீட்டு முன்னே பட்டாசு வைக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்( வயது 29) இவரது வீட்டு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் ஆகாஷ், ராஜதுரை ஆகியோர் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தனர். பட்டாசின் சத்தத்தால் எரிச்சல் அடைந்த சங்கரின் மனைவி என் வீட்டு முன்னே பட்டாசு வைக்காதீர்கள் வேறு எங்கேயாவது போய்வையுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    சங்கரின் மனைவியை ஆபாசமாக திட்டி கல்லால் அடித்ததில் சங்கரின் மனைவிக்கு தலையில் அதிக அளவில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சங்கரின் மனைவி சேர்க்கப்பட்டார் .இதுகு றித்து கச்சிராயபளையம் போலீசில் சங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீதும் வழக்கை பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வேப்பூர் அருகே மணிமுக்தாற்றின் கரையோரத்தில் மூதாட்டியை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
    • நல்லம்மாள் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி கடன் தர மறுத்துள்ளார்.

    கடலூர் 

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே நல்லூர் வில்வனேஸ்வரர் கோவில் அருகே கடந்த 18 ம் தேதி காலை மணிமுக்தாற்றின் கரையோரத்தில் 65வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் பிரேதம் மர்மமான முறையில் கிடந்தது . இதுகுறித்து தகவலறிந்து வந்த திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் காவ்யா தலைமையில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் திட்டக்குடி புதுதெருவை சேர்ந்த பழனியாண்டி மகன் ராஜேந்திரன்(61). இவரது மனைவி மணிமேகலை அகரம்சீகூரில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரிந்து வந்தார் அதே அங்கன்வாடியில் சமையலராக பணிபுரிந்து வந்தவர் நல்லம்மாள் (66). மணிமேகலையும் நல்லமாளும் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஓய்வு பெற்ற பின் நல்லம்மாள் ராஜேந்திரனின் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். ராஜேந்திரன் மனைவி மணிமேகலை கடந்த ஒன்றை வருடமாக உடல்நிலை சரியில்லாமல் வெளியூரில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். ராஜேந்திரன் மட்டும் தனியாக வீட்டில் சமைத்து சாப்பிட்டு வந்து கொண்டிருந்தார்.

    இந்நிலையில் கடந்த வாரம் தன்னை திருப்பதிக்கு அழைத்துச் செல்லுமாறு நல்லம்மாள் ராஜேந்திரனிடம் கேட்டுள்ளார் அவர் திருப்பதிக்கு அழைத்துச் செல்லவில்லை. தனக்கு கடன்சுமை அதிகமானதால் ராஜேந்திரன் நல்லம்மாளிடம் கடன் கேட்டுள்ளார் நல்லம்மாள் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி கடன் தர மறுத்துள்ளார். நல்லம்மாலிடம் நகைகளை வைத்து கொண்டு தர மறுத்ததையறிந்து நல்லம்மாவை எப்படியாவது பணம் நகை ஆகியவற்றை எடுத்து தனது கடனை அடைக்க ராஜேந்திரன் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நல்லம்மாள் தனக்கு மனசு சரியில்லை நல்லூரில் உள்ள சிவன் கோயிலுக்கு செல்ல வேண்டுமென ராஜேந்திரனிடம் கூறியுள்ளார் நல்லம்மாவை கொலை செய்வதற்கு இதை சரியான சந்தர்ப்பமாக நினைத்துக் கொண்டு ராஜேந்திரன் கடந்த 17 -ந் தேதி மாலை நல்லம்மாளை திட்டக்குடியில் இருந்து நல்லூர் வில்வனேஸ்வரர் கோயிலுக்கு ராஜேந்திரன் நல்லம்மாளை அழைத்துச் சென்றுள்ளார்.

    கோயில் பூட்டி இருந்ததால் கோயில் வெளியே இருந்து சாமி கும்பிட்டனர் நல்லம்மாள் சிறுநீர் கழிக்க கோயிலின் மேற்கு பக்கம் நோக்கி சென்றுள்ளார் அவரை பின் தொடர்ந்து சென்ற ராஜேந்திரன் நல்லமாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நல்லம்மாள் சுயநினைவு இழந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்ததை தெரிந்த பின் அவர் அணிந்திருந்த கம்மல், மோதிரம், ஜெயின் நகைகளை எடுத்துக்கொண்டு நல்லம்மாவின் உடலை அங்கிருந்த புதரில் போட்டுவிட்டு ராஜேந்திரன் தப்பி திட்டக்குடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வேப்பூர் போலீசார் மூதாட்டியை ஆதாயம் தேடி கொலை செய்த ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • கடலூர் அருகே மனைவியிடம் கோபித்து சென்ற கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
    • தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    புதுவை மாநிலம் குருவி நத்தம் சேர்ந்தவர் நாகராஜ். (வயது 65). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது சம்பவத்தன்று நாகராஜ் குடிப்பதற்காக தனது மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். இதற்கு மனைவி தேவகி பணம் தர மறுத்துள்ளார் இதனால் நாகராஜ்  கோபித்துக் கொண்டு அழகிய நத்தம் பகுதியில் இருந்த மோட்டார் கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தூக்கணம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது26). இவர் சென்னை குன்றத்தூரில் உள்ள எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
    • இதனைதொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பாட்டில்கள், கம்புகளால் தாக்கிக் கொண்டனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது26). இவர் சென்னை குன்றத்தூரில் உள்ள எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவர் மேல தேவநல்லூரில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் விழாவில் வெடி வைக்க சென்றார். அப்போது மணிகண்டன் தரப்பினருக்கும், அதே ஊரை சேர்ந்த பெருமாள் மகன் அய்யப்பன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து இரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன், அவரது உறவினர் வெங்கடேஷ் என்பவரும் பொத்தை சுத்தி கோவிலுக்கு சென்று விட்டு, மேலதேவநல்லூர் பாலம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அய்யப்பன் தரப்பினருக்கும், மணிகண்டன் தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனைதொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பாட்டில்கள், கம்புகளால் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் மணிகண்டன், வெங்கடேஷ், வேல்முருகன், இசக்கிமுத்து, அய்யப்பன் ஆகிய 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி இரு தரப்பினரும் தனித்தனியாக களக்காடு போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் இரு தரப்பை சேர்ந்த அய்யப்பன், இசக்கிமுத்து, நாராயணன் மகன் வெங்கடேஷ், மணிகண்டன், ராமசாமி, ராமசுப்பு மகன் வெங்கடேஷ், ராஜா ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நிலத்திற்கு சென்று வேலை செய்துவிட்டு பின்னர் வீட்டிற்கு செல்வதாக மோட்டார் சைக்கிள் எடுக்க வந்தார்.
    • காரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து மாயமான மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே கரடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 31) இவர் அதே பகுதியில் உள்ள இவரது நிலத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு நிலத்திற்கு சென்று வேலை செய்துவிட்டு பின்னர் வீட்டிற்கு செல்வதாக மோட்டார் சைக்கிள் எடுக்க வந்தார். அப்போது சாலை ஓரமாக நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மாயமானது. இதைப் பார்த்து அதிர்ச்சடைந்து இது குறித்து செல்வகுமார் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து மாயமான மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

    • கோபித்துக் கொண்டு வெளியில் சென்ற ஜெயா மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது தாய் ஜெயா (வயது 47). இவர் தனது மகன் ரவிச்சந்திரனுக்கு திருமணம் செய்வது தொடர்பாக தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டது இதனால் கோபித்துக் கொண்டு வெளியில் சென்ற ஜெயா மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கராபுரம் அருகே விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே காட்டுஎடையார் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது28). விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி அமுதா என்பவருக்கும் இடையே பொதுகிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அமுதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவசக்தி, சாந்தி, கலியன் ஆகியோர் சேர்ந்து ஜெயராமனை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார், அமுதா உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே தனியார் பஸ் டிரைவரை வழிமறித்து தாக்கிய 6 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
    • டிரைவர் மணிவண்ணனை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    புதுச்சேரியில் இருந்து பாகூருக்கு தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி பெரிய காட்டுப்பாளையம் பகுதியில் சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென்று நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி வீண் தகராறு செய்து அதில் இருந்த டிரைவர் மணிவண்ணனை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் பெரிய காட்டு பாளையம் சேர்ந்தவர்கள் பசுபதி, ராகுல் தமிழரசன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • ஆப்பக்கூடல் போலீசார் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகேயுள்ள ஆ.புதுப்பா ளையத்தை சேர்ந்த நவநீதன் (வயது 36). இவர் நேற்று மதியம் ஆப்பக்கூடல் அரசு மதுபானக கடையில் மது வாங்கிக்கொண்டு அருகே உள்ள காலி இடத்தில் உட்கார்ந்து மது குடித்துக்கொண்டு இருந்துள்ளார்.

    அப்போது, அங்கு வந்த கூத்தம்பூண்டி அண்ணாநகரை சேர்ந்த மாரிமுத்து (வயது 31) என்பவர் இவரின் காலை மிதித்து உள்ளார். இதனை தட்டி கேட்ட நவநீதனிடம் மாரிமுத்து தகராறில் ஈடுபட்டு, கீழே கிடந்த பீர் பாட்டிலால் நவநீதனை தாக்கியதோடு பீர் பாட்டிலால் குத்தி கொன்று விட்டுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதில் நவநீதனுக்கு நெற்றி மற்றும் வலது பக்க கன்னத்தில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் நவநீதனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×