search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple ceremony"

    • பனையங்குளத்தில் உள்ள பெருமாள் கோவில் கொடை விழா நடந்தது.
    • இரவில் மர்மநபர்கள் தங்க நகைகளை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    தூத்துக்குடி அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் மாடகண்ணு. இவரது மனைவி செல்வ மணி (வயது22). இவரது தாய்மாமா சுப்பையா நாங்குநேரி அருகே பனையங்குளத்தில் வசித்து வருகிறார்.

    10 பவுன் நகை

    பனையங்குளத்தில் உள்ள பெருமாள் கோவில் கொடை விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள செல்வமணி தனது தாய்மாமா சுப்பையா வீட்டிற்கு வந்தார். கோவில் கொடை விழாவிற்கு சென்று விட்டு, சுப்பையா வீட்டிற்கு வந்த செல்வமணி தனது 10 பவுன் எடையுள்ள செயின், 4 பவுன் நெக்லஸ், 5¼ பவுன் செயின் ஆகியவற்றை கழற்றி ஒரு பையில் வைத்திருந்தார். மறுநாள் காலை பையை பார்த்த போது தங்கநகைகள் மாயமாகியிருந்தது.

    இரவில் மர்மநபர்கள் தங்க நகைகளை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வமணி இது குறித்து மூன்றடைப்பு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி இளம்பெண்ணின் தங்கநகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • நேற்று இரவில் அலங்கார ஆர்ச்சை அகற்ற போலீசார் முயற்சி செய்தனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் டி.எஸ்.பி. ராஜு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தி னருக்கு பாத்தியப்பட்ட சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கொடைவிழா வருகிற 8-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    இதையொட்டி விழா கமிட்டினர் சார்பில் சிறும ளஞ்சி மெயின் ரோட்டில் அலங்கார விளக்கு ஆர்ச் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் நேற்று இரவில் அலங்கார ஆர்ச்சை அகற்ற முயற்சி செய்தனர்.

    இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ச்சை அகற்ற விடாமல் முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நாங்குநேரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற்று ஆர்ச் வைக்குமாறு போலீசார் தெரிவித்ததையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

    • களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது26). இவர் சென்னை குன்றத்தூரில் உள்ள எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
    • இதனைதொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பாட்டில்கள், கம்புகளால் தாக்கிக் கொண்டனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது26). இவர் சென்னை குன்றத்தூரில் உள்ள எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவர் மேல தேவநல்லூரில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் விழாவில் வெடி வைக்க சென்றார். அப்போது மணிகண்டன் தரப்பினருக்கும், அதே ஊரை சேர்ந்த பெருமாள் மகன் அய்யப்பன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து இரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன், அவரது உறவினர் வெங்கடேஷ் என்பவரும் பொத்தை சுத்தி கோவிலுக்கு சென்று விட்டு, மேலதேவநல்லூர் பாலம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அய்யப்பன் தரப்பினருக்கும், மணிகண்டன் தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனைதொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பாட்டில்கள், கம்புகளால் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் மணிகண்டன், வெங்கடேஷ், வேல்முருகன், இசக்கிமுத்து, அய்யப்பன் ஆகிய 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி இரு தரப்பினரும் தனித்தனியாக களக்காடு போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் இரு தரப்பை சேர்ந்த அய்யப்பன், இசக்கிமுத்து, நாராயணன் மகன் வெங்கடேஷ், மணிகண்டன், ராமசாமி, ராமசுப்பு மகன் வெங்கடேஷ், ராஜா ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நல்லம்பள்ளி அருகே, கோவில் விழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    நல்லம்பள்ளி:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த லளிகம் ஊராட்சியில் உள்ள ராஜவீதியில் ஒரு தரப்பினருக்கு சொந்தமான எருக்கம்மாள்-சக்கரம்மாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு முன்பு மற்றொரு தரப்பை சேர்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமான வீட்டுமனை நிலம் 3 சென்ட் உள்ளது. தற்போது இந்த கோவிலின் திருவிழா வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளதால், கோவிலுக்கு முன்புறம் உள்ள நிலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் திருவிழா கொண்டாட வழிவகை செய்யவேண்டும் என நல்லம்பள்ளி தாசில்தார் மற்றும் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு கோவில் தரப்பினர் மனு அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக வருவாய்த் துறையினர் கோவிலுக்கு முன்புறம் உள்ள வீட்டுமனை நில ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றுவதாக வந்த தகவலை தொடர்ந்து, கோவிலுக்கு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் ஒரு தரப்பினர் திரண்டதால் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

    இதுகுறித்து ஒருதரப்பினர் கூறியதாவது:- இந்த கோவிலுக்கு முன்புள்ள வீட்டுமனை நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றம் செய்வதாக வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் யாரும் எங்களிடம் பேச்சு வார்த்தைகூட நடத்தவில்லை.

    இதற்கிடையில் போலீசார் குவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்துவதோடு, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக இருக்கிறது. இத்தகைய செயல் இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி எந்த தீர்ப்பு வந்தாலும், அந்த தீர்ப்புப்படி வருவாய்த் துறையினர் தங்களது செயல்பாடுகளை செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மற்றொரு தரப்பினர் கூறும்போது, 20 ஆண்டுகளுக்கு பிறகு 16 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து, எருக்கம்மாள்-சக்கரம்மாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, தலைமீது தேங்காய் உடைத்து சாமிக்கு நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு கூடுவதால், கோவிலுக்கு முன்புற ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே கோவில் திருவிழாவை சிறப்பாக நடத்த முடியும். இல்லாவிடில் சாமி திருவீதி உலா நடத்த முடியாமல் போய்விடும். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி திருவிழா நடத்த உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் மதியம் 1 மணியளவில் கோவில் முன்பு கூடியிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினரும் அங்கு ஒன்று கூடியதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. இதனால் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை. போலீசாரும் கண்காணிப்பில் மட்டுமே ஏற்பட்டனர்.

    ஒரு தரப்பை சேர்ந்தவர்களும் கலையாமல் இருந்து வந்ததால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதையடுத்து சுமார் 3 நேரத்திற்கு மேலாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் அங்கிருந்து சென்றனர். இருந்தாலும் தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  
    ×