search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி தாக்குதல்"

    சங்கராபுரம் அருகே விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே காட்டுஎடையார் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது28). விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி அமுதா என்பவருக்கும் இடையே பொதுகிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அமுதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவசக்தி, சாந்தி, கலியன் ஆகியோர் சேர்ந்து ஜெயராமனை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார், அமுதா உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×