search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female missing"

    • கோபித்துக் கொண்டு வெளியில் சென்ற ஜெயா மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது தாய் ஜெயா (வயது 47). இவர் தனது மகன் ரவிச்சந்திரனுக்கு திருமணம் செய்வது தொடர்பாக தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டது இதனால் கோபித்துக் கொண்டு வெளியில் சென்ற ஜெயா மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
    • போலீஸ் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே தொட்டிபாளையம் (நரவலூர்) தளிகை பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 42).கூலித்தொழிலாளி. இவரது மனைவி திவ்யா( 30). இவர்கள் குழந்தைகளுடன் அங்கு குடியிருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் திவ்யா கடந்த 14-ம் தேதி காலை 8 மணிக்கு தனது மகளிடம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு திவ்யா வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவன் பழனிவேல் மற்றும் உறவினர்கள் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று திவ்யாவை தேடி பார்த்தனர் .ஆனால் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பழனிவேல் வேல கவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் இளம்பெண் மாயமானார்.

    தேனி:

    பெரியகுளம் அருகே குள்ளப்புரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகள் தீபா (வயது 20). கல்லூரி 2-ம் ஆண்டோடு படிப்பை நிறுத்தி விட்டார். ராமசாமி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். தற்போது தீபாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்து தீபா வெளியே சென்றார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் நண்பர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். எங்கும் கிடைக்காததால் ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான தீபாவை தேடி வருகின்றனர்.

    வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் மாயமானது குறித்து அவரது மகன் போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பழைய கரூர் ரோடு மோகன் தோட்டத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சரோஜா (வயது 55). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் இது வரை வீட்டுக்கு வரவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அவர் எங்கே சென்றார் என தெரியவில்லை.

    இது குறித்து சரோஜாவின் மகன் யுவராஜா ஈரோடு தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள். 

    ×