என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு
- பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- ஆப்பக்கூடல் போலீசார் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அருகேயுள்ள ஆ.புதுப்பா ளையத்தை சேர்ந்த நவநீதன் (வயது 36). இவர் நேற்று மதியம் ஆப்பக்கூடல் அரசு மதுபானக கடையில் மது வாங்கிக்கொண்டு அருகே உள்ள காலி இடத்தில் உட்கார்ந்து மது குடித்துக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த கூத்தம்பூண்டி அண்ணாநகரை சேர்ந்த மாரிமுத்து (வயது 31) என்பவர் இவரின் காலை மிதித்து உள்ளார். இதனை தட்டி கேட்ட நவநீதனிடம் மாரிமுத்து தகராறில் ஈடுபட்டு, கீழே கிடந்த பீர் பாட்டிலால் நவநீதனை தாக்கியதோடு பீர் பாட்டிலால் குத்தி கொன்று விட்டுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் நவநீதனுக்கு நெற்றி மற்றும் வலது பக்க கன்னத்தில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் நவநீதனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்