search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே  தனியார் பஸ் டிரைவரை வழிமறித்து தாக்கிய 6 பேர் மீது வழக்கு
    X

    கடலூர் அருகே தனியார் பஸ் டிரைவரை வழிமறித்து தாக்கிய 6 பேர் மீது வழக்கு

    • கடலூர் அருகே தனியார் பஸ் டிரைவரை வழிமறித்து தாக்கிய 6 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
    • டிரைவர் மணிவண்ணனை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    புதுச்சேரியில் இருந்து பாகூருக்கு தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி பெரிய காட்டுப்பாளையம் பகுதியில் சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென்று நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி வீண் தகராறு செய்து அதில் இருந்த டிரைவர் மணிவண்ணனை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் பெரிய காட்டு பாளையம் சேர்ந்தவர்கள் பசுபதி, ராகுல் தமிழரசன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×