search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Camping"

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியம், கு.அய்யம்பாளையம் கிராமத்தில் கால்நடை சுகாதார சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இம்முகாமில் கு.அய்யம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அழைத்து வந்த 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியம், கு.அய்யம்பாளையம் கிராமத்தில் கால்நடை சுகாதார சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை மருத்துவர்கள் மணிவேல், தனவேல், செந்தில்குமார், கால்நடை ஆய்வாளர் பொன்னம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுரேஷ் , துரைசாமி, தடுப்பூசி பணியாளர்கள் பிரபு மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோ சனைகள் வழங்கினார்.

    இதில், சிறந்த முறையில் கால்நடை வளர்ப்பு முறைகளை கையாளும் முன்னோடி விவசாயி களுக்கு, அ.குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் விருதுகள் வழங்கி னார். இம்முகாமில் கு.அய்யம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அழைத்து வந்த 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட கிராமத்தினர் செய்திருந்தனர்.

    • குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை இந்த முகாமில் உடனடியாக செய்து கொள்ளலாம்.
    • ஆய்வு மற்றும் விசாரணை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் ஏற்பளிக்கப்பட்ட உடன் தேவையான சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சி யர் அலுவலகங்களில் மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை இந்த முகாமில் உடனடியாக செய்து கொள்ளலாம்.

    அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த முகாம் குறித்து, குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி கூறியதாவது:வட்ட வழங்கல் துறை சார்பில் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை பயனாளர்கள் பெயர்கள் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெறுவது வழக்கம். தற்போது நடைபெற்ற முகாமில் இது சம்பந்தமாக பல மனுக்கள் வந்துள்ளன. அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    சிறப்பு முகாம் குறித்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

    தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் 2017-இன் கீழ் புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கும், தற்போதுள்ள குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், அங்காடி மாற்றம் மற்றும் மாவட்ட மாறுதல் போன்ற பணிகளை செய்து கொள்ள பொது மக்கள் வட்ட வழங்கல் அலுவலத்திற்கு செல்லாமலே தாங்கள் வசித்து வரும் இடத்தில் இருந்து இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பணிகளை செய்து கொள்ளலாம்.

    இணையதளத்தில் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து பொது சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் இணை யதளத்தில் விண்ணப்பம் செய்திடவேண்டும். அவற்றின் மீது தொடர்பு டைய வட்ட வழங்கல் அலுவலரால், ஆய்வு மற்றும் விசாரணை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் ஏற்பளிக்கப்பட்ட உடன் தேவையான சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.

    புதிய மின்னனு குடும்ப அட்டைகள் சென்னை யில் இருந்து அச்சிட்டு வரப்பெற்ற வுடன், உரிய நியாயவிலை அங்காடிகள் மூலம் விண்ணப்ப தாரர்களுக்கு அந்த அட்டை விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள்.
    • பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் தனி நபர் கடன் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் தஞ்சாவூர் வட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

    மேற்படி, கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள். சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப்பெற்று அதனை பூர்த்தி செய்து, கடன் மனுக்களுடன் மனுதாரரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பத்மவாணி மகளிர் கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நாளை ( 26 -ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    • இந்த முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியா ளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பத்மவாணி மகளிர் கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நாளை ( 26 -ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியா ளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த நிலையில், இந்த வேலை வாய்ப்பு முகாம் குறித்த முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கல்லூரி வளா கத்தில் நடைபெற்றது. இதில் சேலம் கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் கலந்து கொண்டு, ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ராமச்சதிரன், பத்மவாணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சத்தியமூர்த்தி உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கணேசன் பேசியதாவது:-

    படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உரு வாக்கி தர வேண்டும் என்பது முதல் - அமைச்சரின் எண்ணம். தமிழகம் முழுவ தும் முகாம் நடத்தி 1½ ஆண்டில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலையே இருக்க கூடாது என்பதே முதல்- அமைச்சரின் நோக்கம். அதனை செயல்படுத்திட அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவது தொடர்பாக கிராமங்கள் தோறும் எடுத்து செல்ல வேண்டும். இந்த முகாமில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டம், முதுநிலை பட்டம், பொறியியல், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு படிப்பு

    படித்தவர்கள் வரை கலந்து கொண்டு விலை வாய்ப்பை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. முகாமில் அனைத்து பகு தியை சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் இல வச பேருந்து வசதி களும், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் 9.11.2022 முதல் 8.12.2022 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டி யல் திருத்தப்பணிகள் நடை பெற்று வருகிறது.
    • வருகின்ற 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டத்திலுள்ள 686 வாக்குச் சாவடி மையங்களிலும் இப்பணி நடைபெறுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி. சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

    நாமக்கல் மாவட்டத்தில் 9.11.2022 முதல் 8.12.2022 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டி யல் திருத்தப்பணிகள் நடை பெற்று வருகிறது. அதன்படி வருகின்ற 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டத்திலுள்ள 686 வாக்குச் சாவடி மையங்களிலும் இப்பணி நடைபெறுகிறது. இந்நாட்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கலாம்.

    இம்முகாமின்போது, 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) பெயரானது ஜனவரி-2023 மாதம் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும்மற்றும் 31.12.2005 அன்றோஅல்லதுஅதற்கு முன்னரோ பிறந்தவர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

    இவர்களின் பெயரானது 18 வயது பூர்த்தியடைந்த காலாண்டில் (ஏப்ரல்-2023, ஜூலை-2023, அக்டோபர்-2023) வெளி யிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். மேலும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்காதவர்கள் இணைத்துக் கொள்ளு மாறும் கேட்டுக் கொள்கி றேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • நாட்டு நலப்பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம்.
    • “பறவைகள் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் உரையாற்றினார்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தேசிய மேல்நிலை ப்பள்ளி நாட்டு நல பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம் முட்டம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. தேசிய பசுமை படை சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அவர்களது இல்லங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    "பறவைகள் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் ஆதி லிங்கம் உரையாற்றினார்.

    நகராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.முத்தமிழ் ஆனந்தன். மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய வெங்கடேசன். மற்றும் ஆசிரியர்கள் செங்குட்டுவன், முத்துக்குமார், விமல், தேசிய பசுமைப்படை ஆசிரியர் சக்தி வேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.

    • நாளை (சனிக்கிழமை) சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற உள்ளது.
    • சேமிப்பு திட்டங்கள் ரூ.100 முதல் ஆரம்பமாகின்றது. உச்ச வரம்பு ஏதும் இல்லை.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 30-ந் தேதி உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாளை (சனிக்கிழமை) சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற உள்ளது. ஒருவர் தனது சராசரி தேவைகளுக்கு பிறகு சேமிக்கும் சிறிய பணமும் சேமிப்பாகும். எனவே, பொதுமக்கள் அனைவரும் ஒவ்வொரு ரூபாயும் சரியான முறையில் சேமிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய அஞ்சலகங்களின் சேமிப்பு கணக்கு சிறந்ததாகும்.

    அஞ்சலகத்தில் எல்லா பிரிவினர், வயதினருக்கும் ஏற்ற சேமிப்பு திட்டங்கள் ரூ.100 முதல் ஆரம்பமாகின்றது. உச்ச வரம்பு ஏதும் இல்லை. இதுவரை அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறாத பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எளிய முறையில் கணக்கு தொடங்கலாம். எனவே, அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற வேறு திட்டத்தில் சேர்ந்து கூடுதல் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேலும், கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம். உலக சிக்கன தினத்தை முன்னிட்டு அனைத்து பெரிய தபால் அலுவலகங்களிலும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு கவுன்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திட்டு கிராமமக்கள் வசிக்க 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்.
    • 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் டன் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.

    சீர்காழி:

    மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நீர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு துறைமுகத்தை ஒட்டி வங்க கடலில் கலந்து வருகிறது.

    நேற்று காலை நிலவரப்படி 90 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே கடலுக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடி வரை ஆற்றில் சென்று கொண்டிருக்கும் நிலை இருந்து வந்தது.

    கொள்ளிடம் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல், கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்து வரும் சூழலில் ஆற்றில் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களில் மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டு முன்னெச்ச ரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் வீடுகளு க்கு நேரில் சென்று மேடான இடங்களில் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்தார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் லலிதா நிருபர்களி டம் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் 1.85 லட்சம் கன அடி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அதிகப்படியான வெள்ள நீர் திறக்கப்பட்டுள்ளதால் படுகையில் உள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு கிராமங்கள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதால் 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

    ஆற்றின் கரையில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையை பலபடுத்தும் பணிகளுக்காக 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் டன் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.

    மீட்பு பணிக்காக தீயணைப்பு துறை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.

    சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, மயிலாடுதுறை கீழ்க்காவிரி வடிநிலக்கோ ட்ட செயற்பொறியாளர் சண்முகம், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பி டி ஓ அருள்மொழி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், விஏஓ சங்கீதா மற்றும் அதிகாரிகள், பேரிடர் மீட்பு குழுவினர் உடன் இருந்தனர்.

    • திட்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    • ஆச்சாள்புரம் கிராமத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட்டு உணவு தரம் குறித்து கேட்டறிந்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் தண்ணீர் சூழ்ந்துள்ள திட்டு கிராமங்களான நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ள மணல் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    கண்காணிப்புஅலுவ லரும், குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள்இயக்குநருமான அமுதவல்லி அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரை பலப்படுத்த ப்பட்டு வரும் பணி மற்றும் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் முகாமில் தங்க வைக்கப்பட்டு ள்ளவர்க ளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கு சமைக்கப்படும் உணவு தரம் உள்ளதாக இருக்கிறதா என்றும் கேட்டறிந்தார். மயிலாடு துறை கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் முருகண்ணன், மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற் பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, பிடிஓ சரவணன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    • விதை உற்பத்தி பயிற்சி முகாம் நடந்தது.
    • மேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி விளக்கம் அளித்தார்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள விநாயகபுரத்தில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் விதைப்பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி குறித்து மாவட்ட அளவிலான பயிற்சிமுகாம் நடந்தது. நாவினிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, உறங்கான்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 40 விதைப் பண்ணை உற்பத்தி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி விளக்கம் அளித்தார். வேளாண் துணை இயக்குனர் அமுதன், நுண்ணுயிர் பாசன திட்ட அலுவலர் சரவணன், உதவி இயக்குனர் சிங்கார லீனா, விதைச்சான்று அலுவலர் சுஜிதா, துணை வேளாண் அலுவலர் தனலட்சுமி, உதவி விதை அலுவலர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வட்டாரம் வில்லிபாளையம் கிராமத்தில் நடமாடும் மண்பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
    • நீர் மாதிரிகளை கொண்டு வந்து பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:- பரமத்தி வட்டாரம் வில்லிபாளையம் கிராமத்தில் நடமாடும் மண்பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

    அது சமயம் வில்லிபாளையம் ஊராட்சி, ஜங்கமநாய்க்கன் பட்டி, குச்சிப்பாளையம் கிராமம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள மண் மற்றும் நீர் மாதிரிகளை கொண்டு வந்து பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சவுந்தர்ராஜன் மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு ஆகியோர் "மண் மற்றும் நீர் மாதிரி எடுக்கும் முறை, மண் மற்றும் நீர் பரிசோதனையின் மூலம் பெறப்படும் பலன்கள், மண்வள அட்டையின் சாராம்சம் குறித்து விளக்கமளிக்கவுள்ளனர்.

    மேலும் விபரங்களுக்கு பரமத்தி உதவி வேளாண்மை அலுவலர் ரகுபதியை தொடர்பு கொண்டு பயன் பெறமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் கொண்டரசம்பாளையம் கிராமத்தில் நடைப்பெற்றது.
    • அதிக மகசூல் தரும் நீடித்த, நவீன கரும்பு சாகுபடி முறையை விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வட்டாரம், சித்தம்பூண்டி, கொண்டரசம்பாளையம் கிராம கரும்பு விவசாயிகளுக்கு 'நீடித்த நிலையான கரும்பு சாகுபடி'' குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது. பயிற்சியில் பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, கரும்பில் இருந்து சர்க்கரை மட்டும் தயாரித்த காலம் போய் தற்போது கரும்புச்சாறு கழிவில் மொலாசஸ், சாக்லெட் மற்றும் கரும்பு சக்கையில் இருந்து மின்சாரம், இயற்கை உரம், காகிதம் என கரும்பின் அனைத்து பாகங்களும் பயன்படுகிறது. குறைந்த அளவு விதை நாற்று, குறைந்த அளவு தண்ணீரை உபயோகித்து அதிக மகசூல் தரும் நீடித்த, நவீன கரும்பு சாகுபடி முறையை பயன்படுத்தி பயன் பெற விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

    பொன்னி சுகர்ஸ் நிறுவன கரும்பு ஆய்வாளர் பழனிச்சாமி, மற்றும் மேலாண்மை அலுவலர் அல்லிமுத்து ஆகியோர் பயிற்சி வழங்கினர். பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர் கௌசல்யா, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் விவசாயிகளுக்கு நன்றி கூறி பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.

    ×