search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஞ்சல்"

    • ஈரோடு அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.
    • ‘குறை கேட்பு நாள் மனு’ என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

    ஈரோடு, 

    ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் துறை சேவைகள் குறித்த குறைகள் இருப்பின், பொதுமக்களிடம் இருந்து அவற்றை கேட்டறிந்து, தீர்வு காணும் வகையில் வரும் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஈரோடு அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.

    பொதுமக்கள், அஞ்சல் துறை குறித்த தங்கள் குறைகளை தபால் மூலம் வரும் 19-ந் தேதிக்குள் கிடைக்கும்படி 'அஞ்சல் கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு – 638001' என்ற முகவரிக்கு, 'குறை கேட்பு நாள் மனு' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

    தவிர 19 வரை அலுவலக வேலை நாட்களில் காலை, 10 மணி முதல் மாலை 5 மணி வரை கோரிக்கை மனுவை நேரிலும் சமர்பிக்கலாம் என்று அதில் கூறியுள்ளார்.

    • அஞ்சல் துறையில் ஆட்கள் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உரிய இடம் ஒதுக்கப்படுவது இல்லை.
    • பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளவர்களுக்கு இன்னும் பணிக்கொடை வழங்கப்படவில்லை.

    திருப்பூர் :

    அனைத்திந்திய அஞ்சல் ஆர். எம். எஸ். ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 5- வது மாநில மாநில மாநாடு திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.தேசியக்கொடியை வரவேற்புக் குழுத் தலைவர் எஸ். கார்த்திக்கேயன், மாநிலத் தலைவர் எம். கண்ணையன் ஆகியோர் ஏற்றினர். சங்ககொடியை மாநிலத்துணைத்தலைவர் எஸ். ரெங்கசாமி ஏற்றினார். மாநாட்டுக்கு மாநிலத்தலைவர் எம். கண்ணையன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் வரவேற்று பேசினார். அஞ்சலி தீர்மானத்தை கணேசன் வாசித்தார்.

    மாநாட்டு துவக்கவுரை நிகழ்த்திய சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் பேசுகையில் ,மத்திய அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பென்சன் திட்டத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வந்து மத்திய அரசு சீர்குலைக்கப் பார்க்கிறது. தற்போது அஞ்சல் துறையில் ஆட்கள் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உரிய இடம் ஒதுக்கப்படுவது இல்லை. வட இந்தியர்கள் பெருமளவில் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது நிரந்தர பணியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளவர்களுக்கு இன்னும் பணிக்கொடை வழங்கப்படவில்லை. அதனை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். அதனை பிடித்தம் செய்து வைத்துக்கொள்ள கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

    சிறப்பு விருந்தினராக சுமிதா அயோத்யா கலந்து கொண்டார். அனைத்திந்திய பொதுச்செயலர் ராகவேந்திரன் சிறப்புரை ஆற்றினார். சுரேஷ், மோகன்ராவ், ராஜசேகர், பழனிவேல், சுப்பிரமணி, சண்முகசுந்தரராஜ், நடராஜன், ரெங்கசாமி ஆகிய மாநில நிர்வாகிகள் பேசினர். ஈராண்டு அறிக்கையை மோகன் வாசித்தார். தணிக்கையை குமார் சமர்ப்பித்தார்.இன்று நடைபெறும் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    • நாளை (சனிக்கிழமை) சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற உள்ளது.
    • சேமிப்பு திட்டங்கள் ரூ.100 முதல் ஆரம்பமாகின்றது. உச்ச வரம்பு ஏதும் இல்லை.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 30-ந் தேதி உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாளை (சனிக்கிழமை) சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற உள்ளது. ஒருவர் தனது சராசரி தேவைகளுக்கு பிறகு சேமிக்கும் சிறிய பணமும் சேமிப்பாகும். எனவே, பொதுமக்கள் அனைவரும் ஒவ்வொரு ரூபாயும் சரியான முறையில் சேமிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய அஞ்சலகங்களின் சேமிப்பு கணக்கு சிறந்ததாகும்.

    அஞ்சலகத்தில் எல்லா பிரிவினர், வயதினருக்கும் ஏற்ற சேமிப்பு திட்டங்கள் ரூ.100 முதல் ஆரம்பமாகின்றது. உச்ச வரம்பு ஏதும் இல்லை. இதுவரை அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறாத பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எளிய முறையில் கணக்கு தொடங்கலாம். எனவே, அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற வேறு திட்டத்தில் சேர்ந்து கூடுதல் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேலும், கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம். உலக சிக்கன தினத்தை முன்னிட்டு அனைத்து பெரிய தபால் அலுவலகங்களிலும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு கவுன்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சேலம் மேற்கு கோட்டம் சார்பில் அஞ்சல் முகவர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டன.

    சேலம்:

    சேலம் அஞ்சல் மேற்கு கோட்டத்தில் வருகிற 14-ம் தேதி காலை 11 மணி முதல் 2 மணி வரை பி.எல்.ஐ., ஆர்.பி.எல்.ஐ. நேரடி முகவர் தேர்விற்கான நேர்காணல் நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் வருகிற 14-ந்தேதி சேலம் மேற்கு கோட்ட அலுவலகத்தில் தங்களின் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ் மற்றும் முழு விபரங்களுடன் கலந்து கொள்ளலாம்.

    நேர்முக தேர்விற்கான அடிப்படை தகுதிகள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 50 வயது வரை மட்டும் உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும். ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுய தொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் தகுதி உள்ள அனைவரும் பங்கேற்கலாம்.

    ஆயுள் காப்பீடு திட்டத்தில் முன் அனுபவம் இருந்தால் வரவேற்கத்தக்கது. மேற்கண்ட தகுதியினை பூர்த்தி செய்தவர்கள் தங்களது வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல் ஆகியவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஒரு பாஸ்போர்ட் அளவு போட்டோ இவை அனைத்தையும் வருகிற 14-ந்தேதிக்குள் கோட்ட கண்காணிப்பாளர் சேலம் மேற்கு கோட்டம் சேலம் -636005 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

    முகவர் நியமனம் இலக்கா விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். அஞ்சல் கண்காணிப்பாளர் முடிவே இறுதியானது. இந்த தகவலை சேலம் மேற்கு கோட்டம் அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்து–உள்ளார்.

    ×