search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Camping"

    • விளாச்சேரியில் கால்நடை தடுப்பூசி முகாம் நடந்தது.
    • தகுதியான கன்றுகளுக்கு கால்நடை மருந்தகத்தின் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை விளாச்சேரி பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் கால்நடை களில் ஏற்படும் 'புருசெல்லா' எனும் கன்று வீச்சு நோய்க்கு 2-வது சுற்று தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. தகுதியான கன்றுகளுக்கு கால்நடை மருந்தகத்தின் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. டாக்டர் சிவக்குமார் மற்றும் ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, செந்தாமரை ஆகியோர் இந்த பணியை மேற்கொண்டனர்.

    முகாமில் அவர்கள் கூறியதாவது:- புருசெல்லா ேநாய் கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. இது புருசெல்லா எனும் நுண்ணுயிர் கிருமியால் ஏற்படுகிறது. இந்த நோய் மனிதர்களின் மூட்டு மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. 4-ல் இருந்து 8 மாத வயதுடைய பெண் பசு, எருமை கன்றுகளுக்கு உரிய பாதுகாப்பு முறை களை பின்பற்றி ஒருமுறை தடுப்பூசி செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் அவைகளை இந்த நோயில் இருந்து காப்பாற்றுவதோடு மனிதர்களுக்கு பரவுவதையும் தவிர்க்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு சிகிச்சை முகாம் 25-ந் தேதி வரை நடக்கிறது.
    • திட்டத்தினை சிறப்புற நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய சுகாதாரக் கொள்கை 2017-ம் ஆண்டின் நோக்கம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2016-ல் 39 ஆக இருந்ததை 2025-ம் ஆண்டில் 23 ஆக குறைப்ப தாகும். 2023-ம் ஆண்டிற்குள் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000 பிறப்புகளுக்கு 10 ஆக குறைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் இலக்கு ஆகும்.

    குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறறுப்போக்கு, 5 வயதிற்குட்பட்ட குழந்தை களின் இறப்பிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது. நம் நாட்டில் ஆண்டிற்கு சுமார் 1 இலட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து போகிறார்கள்.

    ஏழை, எளிய மக்களின் குழந்தைகளே பெரும்பாலும் வயிற்றுப்போக்கினால் இறக்க நேரிடுகிறது. இவ்வாறு ஏற்படுகின்ற 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பினைத் தடுக்கும் விதமாக நமது ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 25-ந் தேதி வரை இருவார காலத்திற்கு தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    பொது சுகாதாரத்துறையு டன் இணைந்து தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் நீரகற்று வாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல்வாழ்வு, கிராம பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பள்ளிக்கல்வி ஆகிய துறைகள் இணைந்து இத்திட்டத்தினை சிறப்புற நடத்திட திட்டமிடப் பட்டுள்ளது.

    நமது மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 13 ஆயிரத்து 577 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஓ.ஆர்.எஸ் பொட்டலம் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் இத்திட்டம் நடைபெறும். இருவார காலங்களில் வழங்கப்படவுள்ளது.

    அனைத்து ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கைகழுவுதல் மூலம் கை சுத்தம் பேணுவது பற்றிய செயல்முறை விளக்கம் வழங்கப்பட உள்ளது. ஓ.ஆர்.எஸ் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வயிற்றுப்போக்கிற்கு மிகவும் சரியான சிகிச்சை முறையாகும். ஆகவே பொதுமக்கள், இத்திட்டதில் பயணியாற்றும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பினை வழங்கி, 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்திடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்ேகற்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அரண்மனை சிறுவயலில் அ.தி.மு.க. இளைஞர்-இளம் பெண்கள் பாசறை, மகளிரணி மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேலும் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தையும் நிர்வாகிகள் பெற்று கொண்டனர். இதில் இளைஞர்-இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், அமல்ராஜ், விவசாய ஒன்றிய செயலாளர் முருகேசன், சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் ஜின்னா, இளைஞரணி ஒன்றிய செயலாளர் ராஜா, மகளிரணி ஆனந்தவல்லி, சுரேஷ், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21-ந் தேதி நடக்கிறது.
    • 50-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தேர்வு செய்ய உள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவ னங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளை ஞர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம். வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவ னங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள த்தில் சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப் படத்துடன் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை)காலை 10 மணிக்கு மதுரை, புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறு வதால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது. மேற்கண்ட தகவல் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பரமக்குடியில் தொழில் பழகுநர் தேர்வு முகாம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
    • 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயம் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுபவர் பயிற்சிக்குரிய தேர்வு முகாம் வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 5-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் (தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மின்சார வாரியம், வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம்,தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம்,தமிழ்நாடு அரசு பணிமனை) மற்றும் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் நேரடியாக தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில் ஐ.டி.ஐ-யில் என்.சி.வி.டி,எஸ்.சி.வி.டி பயிற்சி முடித்த வர்கள் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயம் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்கால் மாவட்டம் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஒரு நாள் சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது.
    • இம்முகாமில் காரைக்கால் மாவட் டத்தில் உள்ள 10 பள்ளிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றார்கள்.



    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டம் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஒரு நாள் சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால அடுத்த ராயன் பாளையம் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இம்முகாமில் காரைக்கால் மாவட் டத்தில் உள்ள 10 பள்ளிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றார்கள்.

    இம்முகாமில் மாணவர்க ளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் எதிர்ப்பு, சத்தான உணவுகள், மரங்களின் முக்கியத்துவம், தூய்மையின் அவசியம் பற்றியும் தன்னார்வலர்க ளுக்கு விழிப்புணர்வு அளிக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்ட் லோகேஸ்வரன், சமுதாய நலப்பணித் திட்டத்தின் மாநில அதிகாரி சதீஷ்குமார், கல்வித்துறையின் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, காரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன். நவோதயா பள்ளியின் முதல்வர் நந்தகுமார், போக்குவரத்து துறையைச் சார்ந்த கல்விமாறன், நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லட்சு மணபதி, சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • 21 வகையான மாற்றுத்திறன் குழந்தைகளின் தன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.
    • அனைத்து விதமான அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமையம் சார்பில் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இதற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளையராஜா தலைமை தாங்கினார். இதில் வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், ராமசாமி ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்தனர்.

    சிறப்பு கருத்தாளரான முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் புனிதா பயிற்சி குறித்து பேசுகையில்:-

    ஆரம்ப காலத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளின் தன்மைகளை அடையாளம் காண்பதன் மூலம் மற்றும் அதற்கான மருத்துவ சிகிச்சை முறையை பின்பற்றுவதன் மூலம் முற்றிலும் மாற்றுத்திறன் குழந்தைகள் இல்லாத நிலையை எதிர்காலத்தில் உருவாக்க முடியும் என்றார். மேலும், 21 வகையான மாற்றுத்திறன் குழந்தைகளின் தன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    அதனை தொடர்ந்து பயிற்சியில் அடையாள அட்டை முக்கியத்துவம், கல்வி உதவித்தொகை, பெண் கல்வி ஊக்கத்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, போக்குவரத்து மற்றும் பாதுகாவலர் தொகை, மேல் மருத்துவ அறுவை சிகிச்சை முறை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    பயிற்சியில் ஆசிரிய பயிற்றுனர் சுரேஷ், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இதயம் செயலிழக்கும் போது மார்பை அழுத்தி செயல் பட வைக்கும் சிகிச்சை பற்றிய செயல் விளக்கம்.
    • 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் 10-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு உயிர் காக்கும் முதலுதவி மற்றும் இதயம் செயலிழக்கும் போது மார்பை அழுத்தி செயல் பட வைக்கும் சிகிச்சை பற்றிய செயல் விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதன் முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம், புனல் குளத்தில் உள்ள கிங்ஸ் மற்றும் குயின்ஸ் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சியை மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவரும்,

    இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்க தலைவருமான மருத்துவர் சரவணவேல் அளித்தார்.

    பயிற்சியை கல்லூரி செயலாளர் ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் அற்புத விஜயசெல்வி, குயின்ஸ் கல்லூரி முதல்வர் சித்ராதேவி தொடங்கி வைத்து முன்னிலை வகித்தனர்.

    500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இதில் கிங்ஸ் கல்லூரியின் நாட்டுநல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அம்பலத்தரசு, தினேஷ், சுரேஷ்பாபு, மருத்துவமனை நிறுவனத்துறை தலைவர் ஞானசவுந்தரி கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சியானது மேலும் பல கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.

    • மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது.
    • வருகிற 24-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் மோகனூர் ரோட்டில் கூட்டுறவு காலனியில் அமைந்துள்ள நாமக்கல் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது . இது குறித்து நாமக்கல் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மின் விநியோக கோட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல் நகரம், வளையப்பட்டி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதன்சந்தை, புதுசத்திரம், காளப்பராயப்பன்பட்டி, பேளுகுறிச்சி, கொல்லி மலை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் மோகனூர் ரோட்டில் கூட்டுறவு காலனியில் அமைந்துள்ள நாமக்கல் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் வீடு மற்றும் கடைகள் மின் இணைப்புகளுக்கு வீட்டு வரி ரசீது, பத்திர நகல் , வாரிசுதாரிடம் இருந்து ஆட்சேபனை இன்மை கடிதம் கொண்டு வரவேண்டும். விவசாய மின் இணைப்பு–களுக்கு பத்திர நகல் அல்லது பட்டா, கிராம நிர்வாக அலுவலரின் உரிமை சான்று, புலவரைபடம், தாழ்வழுத்த ஒப்பந்த பத்திரம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

    தொழில்துறை மின் இணைப்புகளுக்கு தாழ்வ–ழுத்த ஒப்பந்த பத்திரம், சொத்து வரி ரசீது, பத்திர நகல் போன்ற சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பெயர் மாற்றம் செய்து பயனடையலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறுவது, தொழில்வரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரும் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்யலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறுவது, தொழில்வரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    இதுவரை தொழில் உரிமம் பெறாதவர்கள் உரிய ஆவணங்களாக, வாடகைதாரர் என்றால் கடை வாடகை ஒப்பந்த நகல், கட்டிட உரிமையாளர் ஒப்புதல் கடிதம், சொத்துவரி ரசீது ஆகியவற்றில் ஏதாவது ஒன்றையும் ஜி.எஸ்.டி உரிமம் எண், வணிக நிறுவன முகவரி சான்று, ஆதார் அல்லது ரேசன் அட்டை ஆகியவற்றுடன் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரும் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்யலாம்.

    ஜி.எஸ்.டி உரிமம் இல்லாத வணிகர்கள் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி ரசீது அவசியம் தேவை என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

    • இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி.
    • 2022 -23-ம் ஆண்டிற்கு அம்ரூத் 2.0 குடிநீர் திட்டத்தில் ரூ.14.82 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வது.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் மன்ற கூட்ட அரங்கத்தில் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், துணைத் தலைவர் பூபதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி, முத்துமேரி, ஜாபர் அலி, புஷ்பா, கீர்த்தி வாசன், சமீரா பர்வீன், பிரேம்நாத் பைரன், பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கெஜலட்சுமி, கோட்டையம்மாள், துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் வார்டுகளில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

    பேரூராட்சி தலைவர் செயல் அதிகாரி ஒவ்வொரு பேரூராட்சி கவுன்சிலர்களின் கோரிக்கைகள் முழுவதும் பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 2023 -ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட உத்தரவிட்ட முதல்- அமைச்சருக்கு மன்றம் நன்றியை செலுத்துகிறது.

    பாபநாசம் பேரூராட்சியில் 2022 - 23 ஆம் ஆண்டு கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்வது எனவும், பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தகுதியான தெருவோர வியாபாரிகளை கணக்கெடுப்பு செய்து அடையாள அட்டை வழங்குவது எனவும், பாபநாசம் பேரூராட்சிக்கு 2022 - 23 ஆம் ஆண்டிற்கு அம்ரூத் 2.0 குடிநீர் திட்டத்தில் ரூ.14.82 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வது எனவும், உள்பட பேரூராட்சி வார்டுகளில் கோரிக்கை களை நிறைவேற்றுவது எனவும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • தொண்டி அருகே மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • முகாமில் 230 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே தேளுர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் சேக்மன்சூர் முன்னிலை வகித்தார். திருவாடானை தாசில்தார் செந்தில்வேல்முருகன் வரவேற்றார்.

    சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கந்தசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அன்னம்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குருச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட நல தாசில்தார் சாந்தி, திரு வாடானை யூனியன் சேர்மன் முகமது முக்தார் உட்பட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் 230 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மாற்றுத்திறனாளிகள், முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, கணிணி திருத்தம், விலையி ல்லா தையல் எந்திரம், விலையில்லா பேட்டரி மருந்து தெளிப்பான், காய்கறி விதைகள், மின்னணு குடும்ப அட்டை ஆகியவை வழங்கப்பட்டன.

    வருவாய் துறை, பேரிடர் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மை துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தோட்டக்கலைத்துறை, உணவுப்பொருட்கள் வழங்கல் துறை, மின்துறை, வனத்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் தேளுர் பஞ்சாயத்து தலைவர் நன்றி கூறினார்.

    ×