search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayodhya"

    • ராமர் சிலைக்கு நாடு முழுவதும் இருந்து தங்க, வைர நகைகள் வந்து குவிந்துள்ளன.
    • ராமரின் பாதத்தில் அணிவிக்கப்படும் பாதுகைகளும் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு நாடு முழுவதும் இருந்து தங்க, வைர நகைகள் வந்து குவிந்துள்ளன. அதில் அனைவரையும் கவருவது 1.7 கிலோ எடையுள்ள தங்க மாலை ஆகும்.

    இதை மிக நுணுக்கமாக தயார் செய்துள்ளனர். அதில் வைரங்கள் உள்பட நவரத்தினங்களும் இடம் பெற்றுள்ளன. 18,567 சிறிய வட்ட வடிவ வைரங்கள் அதில் பதிக்கப்பட்டுள்ளன.

    மேலும் சுமார் 3 ஆயிரம் நவரத்தின கற்கள் அந்த மாலையில் பதிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

    அதுபோல 5 அடுக்கு கொண்ட நெக்லசும் ராமரின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல அமைந்துள்ளது. பக்தர்கள் அன்பளிப்பாக கொடுத்தது தவிர அயோத்தி ஆலய நிர்வாகம் சார்பிலும் ராமருக்கு பல்வேறு நகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. லக்னோவை சேர்ந்த ஒரு நகைக்கடைக்காரர் இந்த நகைகளை தயார் செய்து கொடுத்துள்ளார்.

    நெற்றிசுட்டி, இரண்டு கைகளிலும் அணியும் அணிகலன்கள், இடுப்பில் கட்டப்படும் அலங்கார நகைகள், கிரீடங்கள் என ராமருக்கு விதவிதமான நகைகளை தயார் செய்து உள்ளனர். 500 கிராம் எடை கொண்ட சிறிய நெக்லஸ் ஒன்றும் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    ராமருக்கு அணிவிக்கப்படும் தங்க மாலைகளில் விஜய்மாலை மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த தங்க மாலை சுமார் 2 கிலோ எடை கொண்டதாகும்.

    ராமர் கையில் வைத்திருக்கும் அம்பு-வில் ஒரு கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கையில் போட்டுள்ள வளையல்கள் 850 கிராம் எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 100 காரட் வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

    ராமரின் பாதத்தில் அணிவிக்கப்படும் பாதுகைகளும் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது. அவை 560 கிராம் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளன. ராமருக்கு கையில் அணிவிக்கப்படும் மோதிரங்களும் பல்வேறு வகையான நவரத்தினங்களால் பதிக்கப்பட்டுள்ளன.

    • அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல.
    • இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாகச் சுரண்டும் சதிவிழா.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது கைகளால் தொட்டு பால ராமரின் கற்சிலைக்கு உயிரூட்டியதற்கு வட இந்திய சங்கராச்சாரிகளுள் ஒருவர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். "சூத்திரரான மோடி ராமர் சிலைக்கு எப்படி பிராண பிரதிஷ்டை செய்யமுடியும்? அது நாட்டுக்கே பெருங்கேடு விளையும்!"-என்றெல்லாம் ஆரூடம் கூறியிருக்கிறார். இது தானே சனாதனம். பிரதமரே ஆனாலும் சூத்திரனாகப் பிறந்த மோடி தனது குல தருமத்தை மீறுவது கூடாது. அதாவது, பிராமணரல்லாத எவருக்கும் கடவுளைப் பிரதிஷ்டை செய்யும் உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது தான் சனாதனம்.

    மோடியின் இந்த மரபு மீறலை பெரும்பான்மையான சனாதன சக்திகள்-குறிப்பாக, பார்ப்பனர்கள் அனுமதிப்பதும், அமைதி காப்பதும் பிராமணரல்லாத பிற அப்பாவி இந்துக்களை ஏய்க்கும் ஒரு மோசடி அரசியல் உத்தியே ஆகும்.


    உத்தரபிரதேசத்திலும் அதனைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் ஜனவரி 22 அன்று யாராவது இந்துக்கள் இறந்தால் பிணங்களை எரிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சனாதனம் இந்துக்களின் சுதந்திரத்தை எவ்வாறெல்லாம் பறிக்கிறது என்பதை இதன்மூலம் அறியலாம்.

    அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல. ஏனெனில் இன்னும் கோவிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அரைகுறை நிலையில் அவசரம் அவசரமாக இந்த விழா நடத்தப்படுகிறது.

    இது ஆன்மீக விழா என்னும் பெயரில் நடைபெறும் அரசியல் விழா. இந்துக்களின் நம்பிக்கைக்கான பெருவிழா என்னும் பெயரில் நடத்தப்படும் சங்கபரிவார்களின் மதவெறி கொண்டாட்டத்தின் திருவிழா. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக, அப்பாவி இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாகச் சுரண்டும் சதிவிழா.


    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர சங்பரிவார்கள் கையாளும் இந்த அரசியல் உத்தியை, இந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ஏழை எளிய இந்துக்களை மேம்படுத்துவதற்கு கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் எதையும் செய்ய முனைப்புக் காட்டாத பா.ஜ.க. கும்பல், இந்துப் பெரும் பான்மைவாதம், இசுலாமிய-கிறித்தவ வெறுப்பு, ஜெய் ஸ்ரீராம் என மதத்தின் பெயரால், இந்திய மக்களை இந்துக்கள் என்றும் இந்து அல்லாதவர்கள் என்றும் பிளவு படுத்துகிற மக்கள்விரோத அரசியலையே 'இந்துத்துவா' என்னும் பெயரில் நடத்தி வருகின்றனர்.

    ராமரின் பெயரால் நடக்கும் இந்து மக்களுக்கு எதிரான மாய்மால அரசியலின் உச்சம் தான் அயோத்தியில் அரங்கேறும் தேர்தல் பிரச்சார விழா.

    இதனை அனைத்துத் தரப்பு இந்து மக்கள் யாவரும் உணர்ந்து, சங்கபரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அணிதிரள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள விராட் கோலிக்கு அழைப்பு.
    • விழாவில் கலந்து கொள்ளவில்லை, இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டில் இருந்தும் விலகியுள்ளார்.

    இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவருக்கும் இவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

    ஆனால் இருவரும் கலந்து கொள்ளவில்லை. கும்பாபிஷேக விழாவை பார்ப்பதற்காக அயோத்தியில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். கூட்டத்தில் ஒருவர் விராட் கோலியே போன்று இருந்தார். அவரது நடை, செயல் உண்மையான விராட் கோலி போன்றே இருந்தது.

    மேலும், இந்திய அணியின் ப்ளூ ஜெர்சி அணிந்திருந்தார். இதனால் விராட் கோலிதான் வந்துள்ளார் என நினைத்த அவரது ரசிர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க ஆரம்பித்தனர். பின்னர்தான் அவர் போலி விராட் கோலி எனத் தெரியவந்தது. இருந்த போதிலும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    விராட் கோலி தனிப்பட்ட காரணத்திற்காக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக இந்திய அணி நிர்வாகத்திற்கும், கேப்டன் ரோகித் சர்மாவிற்கும் தகவல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ-யும் அதற்கு அனுமதி அளித்துள்ளது.

    தனிப்பட்ட காரணத்திற்காக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய விராட் கோலி, அதன்காரணமாகத்தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    • ராமனை பழித்து பிழைத்துவிடலாம் என நினைத்தது ஒரு கூட்டம் அன்று....
    • எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ராமன் தன் நாடு திரும்பிவிட்டான்.....

    சென்னை:

    தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கவிதை நடையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெரியாரும் பெருமாளும் ஒன்று என்று சொல்வா "ராம்"

    பெரியார் தொண்டர்களை ஆராதிப்பா "ராம்"

    ஆனால் பெருமாள் பக்தர்களுக்கு வாழ்த்து சொல்லமாட்டா "ராம்".

    அனைத்து மதத்தையும் சமமாக பாவிக்கிறா "ராம்"

    ஆனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டா "ராம்"

    அதனால்தான் அன்று செருப்பு மாலை போட்டவர்களை

    வெறுப்பை உமிழும் கறுப்பு இயக்கங்களை விரட்டி

    அதுவே நம் தமிழ்நாட்டுக்கு வரப்போகும் ராமராஜ்ஜியம்.....

    எம் தமிழ்நாட்டில் என்ன சிறப்பு எனில்...

    எந்நாட்டிலும் ராம்நாடு இல்லை தமிழ்நாட்டில் ஓர் மாவட்டமே "ராம்"நாடு அதனால் தான் சீதையை தேடிய ராமனை அங்கு தேடி மோடி வந்தார்....

    11 நாள் உபவாசம் இருந்து பக்தியோடு வந்தார்....

    சமூக நீதிக்கு வித்திட்ட நாயகனாக திகழ்ந்த ராமரை

    சமூக நீதிக்கு எதிரானவராக சித்தரித்து

    ஈரோட்டில் விதைத்த விஷ விதையை ஒழிக்க

    ராமனை பழித்து பிழைத்துவிடலாம் என நினைத்தது ஒரு கூட்டம் அன்று....

    இன்று கூட்டம் கூட்டமாக ராமனை வழிபட்டு

    அனைவர் கண்ணிலும் ஒளியாய் இருக்கும் ராமனை.....

    வழக்கமாய் நடக்க வேண்டியதை வழக்காடு மன்றம் சென்று... வென்று பெற்றவர்களுக்கு

    எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ராமன் தன் நாடு திரும்பிவிட்டான்.....

    தடை ஏற்படுத்தப்பட்டால் தடைகள் தகர்த்தெறியப்படும்....

    என்று ஒலிக்கட்டும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை....

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
    • இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பிஷேகம் நேற்று நடைபெற்றது. ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனைத் தொடரந்து அருள்பாலித்து வருகிறார். பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை பூஜையில் கலந்து கொண்டார். நேற்று பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    ராமரை இன்றும் முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்த பிறகு முதல் சூரியன் உதயத்தில் பகவான் ராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் விரும்பினர். இதனால் இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் ராமர் கோவிலுக்கு வரத் தொடங்கினர்.

    நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் பாதுகாப்பு பணிக்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் பகவான் ராமரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

    காலை 7 மணி முதல் 11.30 மணி வரைக்கும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவாரக்ள்.

    • ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்ற விமர்சையாக நடைபெற்று முடிந்தது.
    • முதல் காலை நேரமான இன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடினர்.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகம் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆத்தியநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பிராண பிரதிஷ்டை பூஜையில் கலந்து கொண்டனர். மேலும், நாட்டில் உள்ள முன்னணி தொழில்அதிபர்கள், பிரபலங்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.

    ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய பக்தர்கள் விரும்பினர். ஏற்கனவே கும்பாபிஷேக விழாவைக் காண அயோத்தியில் ஆயிரக்கணக்காக பக்தர்கள் குவிந்திருந்தனர்.

    கும்பாபிஷேகம் முடிந்து முதல் காலை நேரமான இன்று, அதிகாலையில் இருந்து கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்கதர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் கோவில் வளாகத்தில் கூடியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்ய உள்ளே முண்டியடித்து நுழையத் தொடங்கினர். பாதுகாவலர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பது போன்ற ஒரு அசாதாரண சூழ்நிலை காணப்பட்டது போன்ற வீடியோ வெளியானது. 

    ஆனால், அது ராமர் கோவிலில் பக்தர்கள் கூடிய வீடியோ அல்ல. கவுகாத்தியில் உள்ள கோவிலில் பக்தர்கள் கூடிய கூட்டம். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கவுகாத்தியில் உள்ள கோவிலில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதனையொட்டி பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய முண்டியத்து சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.
    • ரஜனிகாந்த், தனுஷ், அமிதாபச்சன் உள்ளிட்டோர் விழாவிற்கு வருகை.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரம் இன்று காலை ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது.

    அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்- பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.

    இதைதொடர்ந்து, மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது.

    பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.

    முன்னதாக, ராமர் கோவில் விழாவில் பங்கேற்பதற்காக கோவிலின் அறகட்டளை சார்பில் முக்கிய தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதில், அரசியல் முக்கிய தலைவர்கள் தவிர, ரஜனிகாந்த், தனுஷ், அமிதாபச்சன் உள்ளிட்டோர் விழாவிற்கு வருகை தந்தனர்.

    இந்நிலையில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முடிந்து வீடு திரும்பும்போது நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு வருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.
    • ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரம் இன்று காலை ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது.

    அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்- பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.

    இதைதொடர்ந்து, மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது. பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.

    முன்னதாக, ராமர் கோவில் விழாவில் பங்கேற்பதற்காக கோவிலின் அறகட்டளை சார்பில் முக்கிய தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதில், அரசியல் முக்கிய தலைவர்கள் தவிர, ரஜனிகாந்த், தனுஷ், அமிதாபச்சன் உள்ளிட்டோர் விழாவிற்கு வருகை தந்தனர். 

    விளையாட்டு வீரர்களான மகிந்திரசிங் தோனி, விராட் கோலி, அஷ்வின் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    விராட் கோலி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் பிரதிஷ்டை விழாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், விழாவிற்கு தோனியும் வரவில்லை.. விராட் கோலியும் வரவில்லை.

    இருவரும் விழாவில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து தகவல் இல்லை. இருப்பினும், ரசிகர்கள் காரணத்தை தெரிந்துக் கொள்ள ஆவலுடன் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள் இந்த நாளை நினைத்து பார்ப்பார்கள்.
    • நாடு முழுவதும் மக்கள் இந்த நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரம் இன்று காலை ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது.

    அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்-பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.

    இதைதொடர்ந்து, மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது. பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.

    பின்னர், ராமர் கோவிலுக்கு வருகை தந்திருந்த சுமார் 8 ஆயிரம் பேர் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். 

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இன்று ராமர் வந்துவிட்டார். இந்த நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

    ராமர் இனி கூடாரத்தில் வசிக்க வேண்டிய நிலை இருக்காது. தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ராம நாமம் ஒலிக்கிறது.

    பகவான் ராமரின் ஆசிர்வாதம் நம் அனைவருக்கும் உள்ளது. இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க தருணம் மட்டுமல்ல, புதிய காலச்சக்கரத்தின் துவக்கம்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள் இந்த நாளை நினைத்து பார்ப்பார்கள். அனுமன், லட்சுமணன், பரதன் உள்ளிட்ட அனைவரையும் வணங்குகிறேன். தெய்வீக அனுபவத்தை நான் உணர்கிறேன்.

    குறைகள் இருப்பின், ராமர் நம்மை மன்னிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டில் நியாயத்தை வழங்குவதற்கு நியாய ராஜ்ஜியம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் மக்கள் இந்த நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர். ராமரின் ஆசிர்வாதத்தால் ராமர் பாலம் தொடங்கும் அரிச்சல்முனையில் நேற்று வழிபட்டேன். 11 நாள் விரதத்தின்போது ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களில் வழிபட்டேன்.

    பகவான் ராமர் நாட்டு மக்களின் மனங்களில் உள்ளார். கடந்த 11 நாட்களில் பல்வேறு மாநிலங்களில், பல மொழிகளில் ராமாயணத்தை கேட்டேன். கடவுள் ராமர் தேசத்தை இணைக்கிறார். 

    ராமர் நம்முடையவர் மட்டுமல்ல, அனைவருக்கும் ஆனவர். இந்த நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள ரமர் பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். ராமர் தான் பாரத தேசத்தின் ஆதாரம். ராமர் நிரந்தரமானவர் மட்டுமல்ல நித்தியமானவர்.

    பகவான் ராமர் நமக்கான வழிகளை காட்டுவார். இன்று இன்னும் ஆயிரம் ஆண்டுகள் அவரது ராஜ்ஜியம் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.

    வலிமையான நாட்டை உருவாக்க வேண்டுமென்ற உறுதியை நாம் ஏற்க வேண்டும். ராமர், அனுமனை வெளியே தேடாமல், நம் உள்ளத்தில் வைக்க வேண்டும். ராமர் கோவிலை நிர்மானிக்க வேண்டுமென்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் இருந்தது.

    இன்றைய இந்தியாவின் கனவுகள் நிறைவேறாது என்ற பேச்சுக்கே இடமில்லை. பகவான் ராமர் பிரச்சினைக்குரியவர் அல்ல, அவர் பிரச்சினைகளுக்கான தீர்வாக உள்ளவர்.

    ராமருக்கான நமது பூஜைகள் விசேஷமானதாக இருக்க வேண்டும். இந்த காலக்கட்டம் நாட்டின் வளர்ச்சிக்கான அமிர்த காலம். அடுத்த ஆயிரம் ஆண்டுக்கான அடித்தளத்தை நாம் தற்போது அமைக்க வேண்டும்.

    அடுத்த ஆயிரம் ஆண்டுக்கான அடித்தளத்தை நாம் தற்போது அமைக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த நாட்டை உருவாக்க அடித்தளமாக ராமர் கோவில் இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அரசு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்தனர்.
    • தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஒரு விதியும், தனியார் வங்கிகளுக்கு ஒரு விதியுமாக இன்றைய விடுமுறை அமைந்தது.

    சென்னை:

    ராமர் கோவில் பிரதிஷ்டையையொட்டி அரசு வங்கிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை விடுமுறை விடப்பட்டு இருந்தது. அதன் பின்னர் வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தனியார் வங்கிகள் இன்று முழுமையாக செயல்பட்டன.

    இதனால் அரசு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்தனர். அவர்கள் வழக்கம் போல வங்கிகளுக்கு சென்றனர். தனியார் வங்கி ஊழியர்கள் முழு அளவில் செயல்பட்டதால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஒரு விதியும், தனியார் வங்கிகளுக்கு ஒரு விதியுமாக இன்றைய விடுமுறை அமைந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் இருந்து ராமர் சென்ற இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு எல்லாம் சென்று வழிபட்டு புனித நீர் சேகரித்தார்.
    • அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 3 அடுக்குகளுடன் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி நடந்த பூமிபூஜையை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக ராமர் ஆலயம் கட்டப்பட்டு வந்தது.

    அயோத்தி ராமர் கோவிலை 3 கட்டங்களாக அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது முதல் பகுதி ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. நாகரா கட்டிடக்கலை அடிப்படையில் 2.27 ஏக்கர் பரப்பளவில் 5 மண்டபங்களுடன் இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கிறது.

    மொத்தம் 71 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலயம் அமைந்து இருக்கிறது. 380 அடி நீளம், 250 அடி அகலம், 161 அடி உயரத்தில் ஆலயம் கம்பீரமாக காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான சிற்பங்களுடன் கூடிய தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 44 நுழைவு வாயில்களும் கட்டப்பட்டுள்ளன.

    கோவிலின் தரை தளப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. அங்குதான் ஸ்ரீராமரின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கருவறையில் மூலவராக 5 வயதுடைய பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதையடுத்து 3 ராமர் சிலைகள் செய்யப்பட்டன. அதில் கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த பிரபல நிபுணர் யோகிராஜ் செதுக்கிய 51 அங்குல உயர ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டது. சுமார் 200 கிலோ எடை கொண்ட இந்த சிலை பழமையான கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்கான விழா இன்று (திங்கட்கிழமை) நடத்தப்படும் என்று அயோத்தி ராமர் ஆலய நிர்வாகிகள் அறிவித்தனர். இதையடுத்து பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் இருந்து ராமர் சென்ற இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு எல்லாம் சென்று வழிபட்டு புனித நீர் சேகரித்தார்.

    இதற்கிடையே அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தினமும் கருவறை புனித நீரால் சுத்தப்படுத்தப்பட்டு யாக சாலை பூஜைகளும் நடத்தப்பட்டன. கடந்த வியாழக்கிழமை இரவு 51 அங்குல ஸ்ரீபால ராமர் சிலை கருவறை பீடத்தில் நிலைநிறுத்தப்பட்டது.

    அந்த சிலைக்கு கடந்த 3 நாட்களாக சிறப்பு சடங்குகள் செய்யப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. நேற்று இறுதிக்கட்ட சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று காலை இறுதி யாகசாலை பூஜை நிறைவு பெற்றது.


    இதையடுத்து இன்று காலை அயோத்தி நகரம் ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது. அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்-பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.

    விழாவுக்கு சுமார் 8 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 2 ஆயிரம் பேர் சாதுக்கள் ஆவார்கள். முக்கிய பிரமுகர்கள் வருகை காரணமாக அயோத்தி வரலாறு காணாத கோலாகலத்தை இன்று கண்டது.

    விழாவின் நாயகரான ஸ்ரீ பாலராமரை சிறப்பிக்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அயோத்திக்கு வந்தார். காலை 10.30 மணிக்கு மேல் அவரது விமானம் அயோத்தி விமான நிலையத்துக்கு வந்தது. விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அயோத்தி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ராமர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தளத்தில் பிரதமர் மோடி சென்று இறங்கினார். பிறகு அங்கிருந்து கார் மூலம் அயோத்தி கோவிலுக்கு 12.05 மணிக்கு வந்தார்.

    சரியாக மதியம் 12.10 மணிக்கு அயோத்தி ஆலய கருவறையில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டைக்கான பூஜைகள் தொடங்கின. பிரதமர் மோடி முன்னிலையில் அனைத்து பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன. தென்தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆடலரசன் தம்பதி உள்பட 14 தம்பதிகள் ராமர் சிலை பிரதிஷ்டை சடங்குகளை முன்னின்று நடத்தினார்கள்.

    கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 84 வினாடி நேரம் குறித்து கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது.


    திட்டமிட்டபடி 84 வினாடிகள் இந்த பூஜை நடந்தது. அப்போது 121 வேதவிற்பனர்கள் பிராண பிரதிஷ்டைக்கான மந்திரங்களை ஓதினார்கள். இதன் மூலம் அயோத்தியில் 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜ்யம் இன்று முறைப்படி தொடங்கி உள்ளது.

    ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது ஆலயத்தில் திரண்டிருந்த சுமார் 8 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்களும் பார்ப்பதற்கு வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பல இடங்களில் அகன்ற திரைகள் வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. 12.30 மணிக்கு பிராண பிரதிஷ்டை நடந்தபோது ஹெலிகாப்டரில் இருந்து அயோத்தி ராமர் ஆலயம் மீது பூ மழை பொழியப்பட்டது.

    மதியம் 1 மணி வரை சுமார் ஒருமணி நேரம் கருவறை பூஜைகள் நடக்கின்றன.

    • திருப்பூர் மாநகரில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மத்திய போலீஸ் படையின் ஒரு பிரிவான விரைவு அதிரடிப்படை போலீசார் திருப்பூரில் முகாமிட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். திருப்பூர் மாநகரில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுப ட்டனர்.

    இந்நிலையில் மத்திய போலீஸ் படையின் ஒரு பிரிவான விரைவு அதிரடிப்படை போலீசார் திருப்பூரில் முகாமிட்டுள்ளனர். இந்த படைக்கு 1 துணை கமிஷனர், 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 33 பேர் வருகை தந்துள்ளனர்.

    இந்த விரைவு அதிரடி படையினர் திருப்பூரில் பதட்டமான பகுதிகளான காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோடு மற்றும் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், குமரன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கிகளுடன் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    ×